tag:blogger.com,1999:blog-2259309217573951336.post2319417481308353703..comments2023-10-10T17:36:19.656-07:00Comments on பாரதீச்சுடர்: ஆரிய-திராவிடம்: போரா? அக்கப்போரா??Bharathi Raja Rhttp://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2259309217573951336.post-58734188361740281642011-08-21T02:45:52.787-07:002011-08-21T02:45:52.787-07:00வாசிப்புக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நெற்குப...வாசிப்புக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நெற்குப்பைத் தும்பி அவர்களே. இந்த சமண மத விவாதங்கள் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். திராவிடரின் மதம் சமணம் என்று கூட ஒருவர் எழுதியிருந்தது மாதிரி நினைவு.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-12935515237427500262011-08-20T18:59:02.298-07:002011-08-20T18:59:02.298-07:00பதிவில் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு மாற்றுக் கருத...பதிவில் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு மாற்றுக் கருத்து சொல்லலாம். <br />ஓரிடத்தில், ஆரியர்கள் சைவம் திராவிடர் அசைவம் என்று சொல்லி இருக்கிறீர்கள்.<br />இந்த விஷயத்தில் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தது, ஓரளவு சரி போலத் தோன்றுவதால் நினைவில் வைக்கப் பட்ட ஒன்று :<br />ஆரியர்கள் முன்பு சைவம் இல்லை; சில யாகங்களில் மாமிசம் கூட படைப்பது உண்டு; புத்தர் மிருக பலியை எதிர்த்து தான் புத்த மதத்தை பரப்ப முடிந்தது; ஆரியர்கள் தம் மதத்தை பரப்பும் பொருட்டு தெற்கில் ஈடுபட்ட விவாதங்களில் தெற்கில் இருந்த சைவம் சிறந்த எண்ணம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள<br /> வேண்டி இருந்ததனால் சைவத்துக்கு மாறினார்கள். தம் "உயர்ந்த நிலையை" பேணுவதற்காக சைவத்தை கடைப் பிடிக்க தொடங்கினார்கள். வடக்கிலும் சைவர்களும், அசைவர்களும் உண்டு; <br /> ஜைனர்களும், புத்தர்களும், தமிழகத்தில் பலப்பல விவாதங்களுக்குப் பின் தம் கருத்துக்களை நிலை நாட்டினார்கள்; திருநாவுக்கரசர்/ திலகவதி, நாலடியார், சீவக சிந்தாமணி போன்ற ஜைனக் காப்பியங்கள் தமிழில் வந்தது, வள்ளுவரே ஜைனரா, புத்தரா, இந்துவா என்று சர்ச்சைகள் பல உண்டு. ஆகவே தமிழ் நாட்டிலும் ஆரியக் கருத்துக்கள் இந்த அளவுக்கு வேர் கொண்டன என்றால் அவற்றில் சில கருத்துக்கள் மறுக்க முடியாதவையாக இருந்து இருக்க வேண்டும். எனக்கென்னமோ, கணிதத்தில் அல்லது/மற்றும் வான இயலில் தம் அறிவை காட்டி அவர்கள் வேறு பகுதிகளில் தம் "மேல்" நிலையை நிறுவிக்கொண்டார்கள் எனத் தோன்றுகிறது.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-54820343620670216242011-08-20T18:57:12.918-07:002011-08-20T18:57:12.918-07:00பதிவில் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு மாற்றுக் கருத...பதிவில் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு மாற்றுக் கருத்து சொல்லலாம். <br />ஓரிடத்தில், ஆரியர்கள் சைவம் திராவிடர் அசைவம் என்று சொல்லி இருக்கிறீர்கள்.<br />இந்த விஷயத்தில் நான் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தது, ஓரளவு சரி போலத் தோன்றுவதால் நினைவில் வைக்கப் பட்ட ஒன்று :<br />ஆரியர்கள் முன்பு சைவம் இல்லை; சில யாகங்களில் மாமிசம் கூட படைப்பது உண்டு; புத்தர் மிருக பலியை எதிர்த்து தான் புத்த மதத்தை பரப்ப முடிந்தது; ஆரியர்கள் தம் மதத்தை பரப்பும் பொருட்டு தெற்கில் ஈடுபட்ட விவாதங்களில் தெற்கில் இருந்த சைவம் சிறந்த எண்ணம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள<br /> வேண்டி இருந்ததனால் சைவத்துக்கு மாறினார்கள். தம் "உயர்ந்த நிலையை" பேணுவதற்காக சைவத்தை கடைப் பிடிக்க தொடங்கினார்கள். வடக்கிலும் சைவர்களும், அசைவர்களும் உண்டு; <br /> ஜைனர்களும், புத்தர்களும், தமிழகத்தில் பலப்பல விவாதங்களுக்குப் பின் தம் கருத்துக்களை நிலை நாட்டினார்கள்; திருநாவுக்கரசர்/ திலகவதி, நாலடியார், சீவக சிந்தாமணி போன்ற ஜைனக் காப்பியங்கள் தமிழில் வந்தது, வள்ளுவரே ஜைனரா, புத்தரா, இந்துவா என்று சர்ச்சைகள் பல உண்டு. ஆகவே தமிழ் நாட்டிலும் ஆரியக் கருத்துக்கள் இந்த அளவுக்கு வேர் கொண்டன என்றால் அவற்றில் சில கருத்துக்கள் மறுக்க முடியாதவையாக இருந்து இருக்க வேண்டும். எனக்கென்னமோ, கணிதத்தில் அல்லது/மற்றும் வான இயலில் தம் அறிவை காட்டி அவர்கள் வேறு பகுதிகளில் தம் "மேல்" நிலையை நிறுவிக்கொண்டார்கள் எனத் தோன்றுகிறது.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-75930747398687076552011-08-20T11:54:15.071-07:002011-08-20T11:54:15.071-07:00முதல் வரி முத்தாய்ப்பான வரி. உண்மைதான். பிரச்சினைய...முதல் வரி முத்தாய்ப்பான வரி. உண்மைதான். பிரச்சினையின் வேருக்குச் செல்வது நம் போன்றோருக்கு இயலாத ஒன்று. அதற்கென்று ஆள் இருக்கிறார்கள். அதை அவர்களிடமே விட்டு விடுவோம். ஆனால், நம்மால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பேசிப் பார்ப்போம்.<br /><br />ஆடி மாதம் பற்றி நான் வேறொரு கதையும் கேள்விப் பட்டிருக்கிறேன். மற்றவர்கள் எதுவும் செய்யாத மாதம் என்பதால், சடங்குகள் செய்யும் தமக்கு வேலைகளே இராது. அந்த நேரத்தில் நம் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அப்படிச் செய்கிறார்கள் என்றும் ஒரு கதை உண்டு.<br /><br />அடுத்து, என் ஒப்பீடு மூலம் நான் எதையும் உணர்த்த முயலவில்லை. மற்ற மதங்களைப் போலல்லாமல் இந்து மதத்தில் ஒரு மிகக் குறுகிய அளவிலானோர் மட்டுமே மதத்தைத் தூக்கிப் பிடிக்கும் வேலையைச் செய்கிறார்கள். அதுவும் அவர்களே அதைச் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மதம் முக்கியமாக இருக்கிறது. இந்த இடத்தில் எனக்கொரு குழப்பம். இரண்டாவது கருத்துப்படி திராவிடர் என்று கருதப்படும் மக்களுக்கென்று மதம் என்று ஒன்றே முதலில் இருக்க வில்லையா? அல்லது, இன்று செய்யப் படும் சிறு தெய்வ வழிபாடு தான் அவர்களின் மதமா? சைவ மதம் யாருடையது? ஒடுக்கப் பட்ட மக்கள் முதல் ஒடுக்கும் வேலையை முறையாகச் செய்து வரும் பிற்படுத்தப் பட்டோர் வரை எல்லோருமே வைத்திருக்கும் நம்பிக்கைகள் இந்து மதத்தில் இருக்கும் நம்பிக்கைகளுக்கு அருகிலேயே இருக்கின்றன. வேறெந்த மதத்தையும் சிறிது கூடப் பிரதிபலிக்க வில்லை. <br /><br />அல்லது, நாத்திகம் தான் நம் மண்ணின் மதமா? நாத்திகம் பற்றியும் எழுதியிருக்கிறேன். "நாத்திகம் - இன்னொரு மதம்" என்ற தலைப்பில். முடிந்தால் படியுங்கள். இணைப்பு இதோ - http://bharatheechudar.blogspot.com/2011/06/blog-post_09.html. பெரிய வியாபாரியாக இருக்கிறேன் அல்லவா? :)<br /><br />மற்ற எல்லா மதங்களும் அவற்றுக்கென ஒரு மூல இடம் கொண்டிருக்கின்றன. இன்னமும் அவ்விடங்களிலோ அவற்றைச் சுற்றியோ அம்மதங்கள் உயிரோடிருக்கின்றன. இந்து மதத்துக்கான மூலம் மத்திய ஆசியாவாக இருந்தால் அங்கே அதற்கான சுவடே இல்லையே! அது எப்படி? அத்தனை வழிபாட்டுத் தளங்களும் இமயமலை முதல் குமரி வரையிலான நிலப்பரப்பிலேயே தானே இருக்கின்றன! அப்படியானால், இங்கே வந்தபின்தான் மதத்தைத் தோற்றுவித்தார்களா?<br /><br />ஆக, இதிலிருக்கும் என் குழப்பமே இதுதான். என் அண்ணனோ தம்பியோ என்னைத் தரக் குறைவாக நிகழ்த்தியதால் நான் அவனை வெளியாள் என்று அழைக்கிறேனா? வெளியேற்ற முயற்சிப்பது கூட ஒருவிதத்தில் நியாயமாகலாம். வெளியாள் என்று சொல்வது ஏதோவோர் அடிப்படையோடு இருக்க வேண்டும். அவன் மீதான வெறுப்பை என்னால் மறுக்க முடியாது. அதே வேளையில், அவன் பிறப்பிடம் பற்றிய கேள்விகளை நிரூபிக்கவும் முடியவில்லை.<br /><br />இன்னொன்று - படையெடுப்பு நிகழவில்லை என்று சொல்வோரில் ஒரு சாரார் அன்னியர் குடியேற்றம் என்று ஒன்று நிகழ்ந்திருக்கலாம். அவர்கள் ஆரியர்தானா - அதைப் படையெடுப்பு என்று அழைக்க முடியுமா என்று சொல்ல முடியாது என்றும் சொல்கிறார்கள். இதில் உங்கள் கருத்து என்னவென்றும் சொல்லுங்கள்.<br /><br />நாகரிகமான உரையாடலுக்கு மீண்டும் நன்றி.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-32584447888997133872011-08-20T11:12:40.253-07:002011-08-20T11:12:40.253-07:00ஆராய்ச்சிகள் எவ்விதம் இருந்தாலும் அவற்றை பகுப்பாய்...ஆராய்ச்சிகள் எவ்விதம் இருந்தாலும் அவற்றை பகுப்பாய்வு செய்து, சீர் தூக்கி பார்த்து உண்மையை தேடுவது கற்றோர் கடமை. <br /><br />உழவுத் தொழிலே இன்றைய மனித நாகரிகத்தின் தொடக்கம். அந்த உழவுத் தொழிலை அடிப்படையாக கொண்ட தமிழர்களின் பண்டிகைகளை நீர்த்து போகச்செய்து, புராண இதிகாச அடிப்படையிலான பண்டிகைகள் ,முக்கியத்துவம் பெற்றது எப்படி என்கிற கேள்விக்கு திராவிட சார்பற்றவர்கள் இன்றளவும் ஒரு பதிலை கூற முடியவில்லையே! அது ஏன் ?! (வருண பாகுபாட்டினை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை)<br /><br />நாற்று நடுவதற்கு ஏற்ற காலமான ஆடி மாதத்தில், அந்த வேலை செய்ய வேண்டிய பெண்களுக்கு ஏதுவாக விசேஷங்களை தவிர்த்த தமிழர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாத பிராமணர்களை (அவர்கள் ஆடி மாதத்தில் திருமணம் செய்து கொள்ள தயங்குவது இல்லை) தமிழர்கள் என்று எப்படி அழைப்பது ?<br /><br />மற்றபடி, அரபு மொழி மற்றும் இஸ்லாத்தின ஒப்பீடு மூலம், “இந்து” மதத்தை நிறுவுவதற்காக நடைபெற்றதுதான் ஆரிய படையெடுப்பு என்ற உண்மையை ஓங்கி உணர்த்தியதற்கு நன்றி<br /><br />பிகு: சமச்சீர் கல்வி பற்றிய தங்களது பதிவினை கண்டிப்பாக படித்து, கருத்து ஏதும் இருக்குமாயின் நிச்சயம் தெரிவிக்கிறேன்.NiceGuyhttps://www.blogger.com/profile/05400629580229251453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-64328538323746498102011-08-20T00:20:04.456-07:002011-08-20T00:20:04.456-07:00நன்றி நைஸ்கை. பெயருக்கேற்ற மாதிரி நல்ல கருத்துகள்....நன்றி நைஸ்கை. பெயருக்கேற்ற மாதிரி நல்ல கருத்துகள். விவாதத்துக்கு அழைப்பதன் ஒரே நோக்கம், இன்னும் ஓர் அங்குலம் அடியில் செல்ல முடியுமா என்று பார்ப்பதற்காகத்தான். :)<br /><br />ஒரு சின்ன விஷயம் - தமிழ்நாட்டில் மட்டும்தான் இது திராவிட இயக்கங்கள் சார்ந்த (அந்த ஆதரவுணர்வோடு அல்லது எதிர்ப்புணர்வோடு) ஆராய்ச்சியாகவே இருக்கிறது. மற்றபடி, எந்த சார்பும் இல்லாமல் மற்றவர்களும் இது பற்றிப் பேசுகிறார்கள் - ஆராய்கிறார்கள். அப்படிப் பேசும்போது கொஞ்சம் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குறைவாக இருக்கிறது.<br /><br />அடுத்து, கோயில்களில் திணிக்கப்படும் வடமொழி பற்றி... பள்ளிவாசலில் அரபு மொழியில்தான் இறைவனை அழைக்கிறார்கள். அது ஒரு பழக்க வழக்கமாக வந்ததே ஒழிய, தம் தாய்மொழி என்று திணிக்கப் படுவதில்லை என்றே நான் கருதுகிறேன். வடமொழியில் அவ்வளவு வளம் இருப்பதால் அதை அவர்கள் காலம் காலமாக அறிந்து வைத்திருப்பதால் அதன் மீது மரியாதை கொண்டிருப்பது இயல்பான ஒன்றாகவே படுகிறது. திராவிட இயக்கத்தார் பலர் செய்த திருட்டுத்தனங்களால் மொத்த இயக்கமே முடங்கும் நிலை வந்துவிட்டது போல, இந்த விஷயத்திலும் அவர்களுடைய படைப்பில் இருந்த சில பல பெரும் கோளாறுகள் அம்மொழியின் வளத்தையும் நிராகரிக்கும் அளவுக்கு நம்மை வெறுப்பேற்றி விட்டனவோ என்றுதான் தோன்றுகிறது.<br /><br />அடுத்து, சமச்சீர்க் கல்விக்கு எல்லோரும் ஒன்னு கூடித் தெரிவிக்கும் எதிர்ப்பு எனக்கும் கண்ணை உறுத்துகிறது. அதுபற்றி சமீபத்தில் ஓர் இடுகை கூட இட்டிருந்தேன். நேரம் இருந்தால் படியுங்கள் - http://bharatheechudar.blogspot.com/2011/07/blog-post_10.html. நீங்கள் எதிர் பார்க்கும் அளவுக்குக் காரம் இராது. ஆனால், எனக்குப் பட்டவற்றை எழுதியிருக்கிறேன். கல்வி உரிமைச்ச்சட்டத்தையும் எதிர்த்தார்கள் என்று முதல் முறையாக இன்றுதான் கேள்விப்படுகிறேன். அது பற்றியும் தேடித் பார்க்க வேண்டும். 'சமம்' என்ற சொல் பலருக்கும் பிடிக்காமல் இருப்பதை நானும் உணர்கிறேன். பொருளாதார அடிப்படை என்பது திசை திருப்பும் நோக்கம் என்பது மட்டுமே என்று எனக்கும் ஆரம்பத்திலேயே புரிபட்டது. <br /><br />உரையாடலை ஆரம்பித்து வைத்தமைக்கு நன்றி. :)Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-26215637877427527772011-08-19T19:52:04.851-07:002011-08-19T19:52:04.851-07:00"எல்லாச் சுடரையும் நுனிப் புல்லிலேயே ஏற்றுகிற..."எல்லாச் சுடரையும் நுனிப் புல்லிலேயே ஏற்றுகிறாயே! இது பற்றி முழுமையாக ஆய்வேதும் செய்தாயா?" என்று <br />கேட்போருக்கு ஒன்று சொல்லி விடுகிறேன். அப்படியெல்லாம் ஏதும் செய்ய வில்லை. மாற்றுக் கருத்துகள் இருப்பின் <br />வாருங்கள் வாதிடலாம்"<br /><br />நுனிப் புல்லில் ஏற்றிய சுடருக்கு, மாற்றுக் கருத்துக்களை எதிர்பார்ப்பது என்ன நியாயம் ஐயா ? நுனிப்புல் வஸ்துக்கள் <br />எல்லாம் அனுபவிக்க வேண்டியவை - ஆராய்ச்சி கூடாது :) பரவாயில்லை, சங்கதிக்கு வருவாம்.<br /><br />நீங்கள் எடுத்து வைத்துள்ள நான்கு கருத்துக்களும், அடிப்படையில் இரண்டு வகையான ஆராய்ச்சியாளர்களால் எடுத்து வைக்கப்படுவது. ஒன்று, இரண்டாம் கருத்தை மும்மொழியும் "திராவிட" சார்புள்ளவர்கள், மற்றொன்று, அதற்கு மாற்று கருத்து கொண்டிருப்பவர்கள். அதாவது, திராவிட இயக்கத்திற்கு ஆதராகவும் மாற்றாகவும் கருத்து உடையவர்கள். ஆழமாக படித்தால், இரண்டாம் கருத்தை மறுதலிக்கும் விதமாகவே ஏனைய மூன்றும் அமைந்திருக்குமே அன்றி விளக்கம் சொல்வதாக இல்லை. <br /><br />இன்றைய சாதி பேதங்களுக்கு ஊற்றுக்கண்ணான வருண பாகுபாடு, குணம் மற்றும் தொழில் அடையாளமாக சொல்லப்பட்ட புணித நூல், சாதி அடையாளமாக அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு, இன்றளவும் கோயில்களில் திணிக்கப்படும் வடமொழி (பிராமணர்கள் வீட்டில் தமிழில் பேசுவதால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட்டார்களாம்! டக்கரா கீதுப்பா, நீங்க சொல்றது!!!) இவற்றில் தொடங்கி, அதன் பரிணாம வளர்ச்சியாக இன்றைக்கு சமச்சீர் கல்விக்கும், கல்வி உரிமை சட்டத்திற்கும் எழுப்பியிருக்கும் எதிர்ப்பு வரை (இட ஒதுக்கீட்டு விஷயத்தில பயன்பட்ட பொருளாதார அடிப்படை என்னும் கருவி, கல்விக் கொள்(ளை)கையில் காணாமல் போன மர்மம் அந்த நாராயணனுக்கே வெளிச்சம்) நடைபெற்ற, நடைபெறுபவற்றை ஆழ்ந்து நோக்கினால், நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களில் உள்ள தருக்கங்களுக்கிடையான வேற்றுமை விளங்கும்.<br /><br />பிகு : எனக்கும் இந்த விஷயத்தில் பெரிய ஞானம் இல்லை என்றாலும், தருக்கத்தின்பால் இதனை அணுகுவதால், மேல் சொன்ன சிந்தனைகளை தவிர்க்க இயலவில்லை.NiceGuyhttps://www.blogger.com/profile/05400629580229251453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-70606799191319005102011-08-19T02:13:01.773-07:002011-08-19T02:13:01.773-07:00Thanks Manikandan.Thanks Manikandan.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-81640795780796864012011-08-19T02:09:34.329-07:002011-08-19T02:09:34.329-07:00nalla pathivunalla pathivumanikandanhttps://www.blogger.com/profile/16767699531008130771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-37449302786164434452011-08-18T23:04:38.535-07:002011-08-18T23:04:38.535-07:00வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி கம்பதாசன் அவர...வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி கம்பதாசன் அவர்களே. ஆவேசமான கருத்துரை. நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் நிச்சயம் வாசிக்கிறேன். அதன் பின்பு தேவைப்பட்டால் உரையாடுவோம். மிக்க நன்றி.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-61397115376191891912011-08-18T13:28:54.277-07:002011-08-18T13:28:54.277-07:00இன்று இந்தியா என்று அழைக்கப் படும் நிலப்பரப்பு முழ...இன்று இந்தியா என்று அழைக்கப் படும் நிலப்பரப்பு முழுமையுமே திராவிடர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது; இமயம் முதல் குமரி வரை திராவிடரே நிறைந்திருந்தனர்; சிந்து சமவெளி நாகரிகம் கூட திராவிடருடையதே; மத்திய ஆசியாவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த ஆரியர், திராவிடர் அனைவரையும் அடித்துத் தெற்கே அனுப்பி வைத்து விட்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளைப் பிடித்துக் கொண்டார்கள். <br /><br /><br />கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்க்கு முன் தோன்றிய மூத்த குடி! அவர்களின் வீரம், விவேகம் கலாசாரம் , மொழி, அந்த மொழியின் உள்ள இலக்கியம், அடடடடடா! அவர்களுக்கு நிகரானவர் இந்த உலகத்தில் யார் உள்ளனர்? <br /><br />அப்படி பட்ட ஒரு இனத்தை , பாரதம் முழுதும் நிறைந்திருந்த ஒரு இனத்தை , கேவலம் , ஆடு மாடு மேய்த்து வந்த ஒரு நாடோடி இனம் , அடித்து விரட்டி, தன் வேதம் , அந்த வேதத்தில் சொல்ல பட்ட தெய்வங்கள், சடங்குகள் , வர்ணாச்ர தர்மம் இப்படி பல விசயங்களை அவர்களிடம் திணித்து , அவர்களை அடிமையாகி , ஆட்சி செய்து, ..............<br /><br />நல்ல கதை! உலகத்தில் கதை திரைகதை வசனம் எழுதுவதில் ஆங்கிலேயனுக்கு நிகரானவன் எவனும் இல்லை. <br /><br />நாட்டை அடிமைபடுத்தி, அந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்து., தன் மதத்தை அந்த நாட்டின் மக்களிடம் பரப்ப வந்த வந்தேறி ஆங்கிலேயன் , <br /><br />அந்த நாட்டின் சரித்திரம் இதுதான் என்று,கதை அளந்துள்ளான்! அதுதான் உண்மை என்று இன்று வரை நம்பி கொண்டிருக்கும் முட்டாள் இந்தியர்கள்!<br /><br />தன் அரசியல் வாழ்வுக்காக , இன்னும் இந்த கட்டு கதையை தாங்கி பிடித்திருக்கும், திராவிட இயக்கத்து இன , மொழி வெறியர்கள், செத்து போன கம்யுனிஸ்ட் கொள்கையை முழக்கமிடும் முட்டாள்கள், மதம் பரப்ப ஆள் பொறுக்கும் வெள்ளை அங்கி குள்ள நரிகள், இந்தியாவை டாருள் இஸ்லாமாக துடிக்கும் தீவிரவாதிகள் .......<br /><br />இப்படிப்பட்ட , அயோக்கியர்கள்தான் , இந்த ஆரிய படையெடுப்பு என்ற அருமையான புனை கதையை , பொய் என அறிந்தும் , இன்னும் , இந்த நிமிடம் வரை விடாமல் , பிடித்து கொண்டு , ஊளையிட்டுகொண்டிருகிரார்கள் !<br /><br />இந்த புரட்டு கதையை மறுக்கும் எத்தனையோ, கட்டுரைகள், நான் படித்துவிட்டேன்.அனைத்தும் மிகுந்த ஆதாரபூர்வமானது !<br /><br />இதை பற்றி இங்கே அதிகம் பேசுவதைவிட, உங்களுக்கு அருமையான ஒரு தளம் அறிமுக செய்கிறேன். நீங்களே படித்து கொள்ளுங்கள் ! நன்றி.<br /><br /><br />http://thamizhan-thiravidana.blogspot.com/2010/11/blog-post.htmlkambathasanhttps://www.blogger.com/profile/14839716872678847341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-52362420620312832892011-08-18T13:24:47.380-07:002011-08-18T13:24:47.380-07:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.kambathasanhttps://www.blogger.com/profile/14839716872678847341noreply@blogger.com