இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 4/4

படம்
தொடர்ச்சி... வக்கீல் ராகவன் பாத்திரம் சூப்பராக இருக்கிறது. பெரும் திறமைசாலியாகவும் அறிவாளியாகவும்  இருப்பான். ரங்கா அவன் பற்றிச் சொன்னதும் 'ஐயரா?' என்று கல்யாணி கேட்பதுதான், கதையில் வரும் கதைக்குச் சம்பந்தமில்லாத கேள்விகளிலேயே முக்கியமான கேள்வி என்று நினைக்கிறேன். சரியோ தவறோ, ஒருத்தன் இப்படி என்று சொன்னதும் அவன் இன்ன ஆளா என்று கேட்பதுதானே நம் பரம்பரைப் பழக்கம்!? ராகவன் பற்றிய இளமைக் காலக் கதை அருமையாக இருக்கும். இந்த நாவல் படிக்கிற அளவுக்குப் படித்த முக்கால்வாசித் தமிழ் இளைஞர்கள் அது போன்றதொரு வாழ்க்கையைக் கனவு கண்டிருப்போம். அது பெரும்பாலும் ஐயர் பையன்களுக்கு மட்டும்தான் நனவு என்கிற நிலைக்குச் சென்றிருக்கும். மற்றவர்களுக்கெல்லாம் இளமைக் காலக் கனவாகவே இருந்து விடும். அல்லது பிள்ளைகளுக்கான பிளான் ஆகி விடும். "எந்த விஷயத்தையும் - எல்லா விஷயத்துக்குமே ஒரு ஆழமிருக்குமில்லையா? அந்த ஆழத்தோடதான் பேசுவான்..." என்கிற அவன் பற்றிய அறிமுகம் ஜெயகாந்தன் பற்றியது போலவும் இருக்கும். பெரிய வக்கீல் என்று சொல்லி அழைத்துச் செல்வான். நேரில் போய்ப் பார்த்தால் பங்கரை போல் இருப்பான். சிக

பாரதியார் கட்டுரைகள் - 1/N

படம்
பாரதியை அவன் அவன் என்று அடிக்கடிச் சொல்வதற்காக எங்கள் தமிழ்ப் பேராசிரியர் திரு. சுயம்பு அவர்கள் அடிக்கடிக் கோபப் பட்டுக் கொள்வார் என் மேல். "நீ என்னடா பெரிய பெரிய ஆளுகளை எல்லாம் அவன்-இவன் என்கிறாய்?!" என்பார். எனக்கோ அந்தக் குற்றச்சாட்டு ஆச்சரியமாக இருக்கும். தமிழ் நாட்டில் பாரதியை அவர்-இவர் என்று பேசுபவர்களை விட அவன்-இவன் என்று பேசுபவர்கள்தாம் அதிகம் என்றெண்ணுகிறேன். அதெப்படி அவர் காதில் விழாமல் போனது என்பது என்னுடைய ஆச்சரியம். ஒருவேளை ஒரு சில குறிப்பிட்ட முகாம்களில் மட்டும் அந்தப் பழக்கம் அதிகமோ என்னவோ. நான் பார்த்தவரை, மற்ற எல்லோரையும் விடக் குறிப்பாகப் பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் அவரை அதிகம் கொண்டாடுகிறார்கள். அவர்கள் பாரதியை எப்போதும் அவன்-இவன் என்றுதான் விளிக்கிறார்கள். அடுத்த படியாக இலக்கியவாதிகள்-கவிஞர்கள் கூட்டம். அவர்களும் அப்படியே செய்கிறார்கள். சிறு வயதிலேயே இறந்து விட்டதாலோ என்னவோ நிறையப் பேருக்கு எளிதாக அப்படி வாயில் வந்து விடுகிறது. ஒருவேளை அவர் மீதான கூடுதல் உரிமையும் காரணமாக இருக்கலாம்.  இந்த நூலின் பதிப்புரையும் அப்படித்தான் 'அவரை' 'அவன்

கருத்துப் பஞ்சமா?

படம்
கொஞ்ச காலம் முன்பு, இசைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்து, சிங்கப்பூர் வந்தபின் எப்படிக் கொஞ்சம் பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன் என்றும் அதன் பின்பு இசை பற்றிப் பல கருத்துகள் உருவாகி இருப்பது பற்றியும் எழுதியிருந்தேன். அது பற்றிப் படிக்க இங்கே  சொடுக்குங்கள். அது போலவே, தீவிர வாசிப்பு இதுவரை ஆரம்பமாகவில்லை. இப்போதுதான் ஓரளவுக்கு வாசிக்கலாம் என்று பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன். அதற்குள்ளாகவே வாசிப்பிலும் சில சுவாரசியமான அனுபவங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. அப்படியான ஒரு முக்கியமான அனுபவம் - குறிப்பிட்ட சில தகவல்களைத் திரும்பத் திரும்பப் பல நூல்களில் காண முடிகிறது. மொத்த உலகத்திலும் இவ்வளவுதான் கருத்துக்களா என்று தோன்றும் அளவுக்குச் சில தகவல்களும் கருத்துக்களும் திரும்பத் திரும்பக் கண்ணில் படுகின்றன. அப்படியாகக் கடந்த சில வாரங்களில் அடிக்கடிக் கேள்விப் பட்ட ஒரு சிலவற்றைக் கீழே கொடுக்கிறேன்: 1. ஜெயகாந்தன் பற்றி நான் தெரிந்து வைத்திருப்பது அதிகமில்லை. ஆனால் அவர் பற்றி அறிந்து கொள்ள முயன்று தேடித் பார்த்த போதெல்லாம் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிற சில தகவல்களே திரும்பத் திரும்

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 3/4

படம்
தொடர்ச்சி... கல்யாணியைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் முன் எல்லா சராசரி ஆணையும் போலவே தன் மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிப்பவளாக இருப்பது தனக்குப் பின்னர் பிரச்சனையாக மாறி விடுமா என்று யோசிக்கிறான் ரங்கா. ஒருவர் மீதொருவர் அவ்வளவு காதலும் கவர்ச்சியும் கொண்டு அவர்களுக்கும் கூட திருமணத்தை நெருங்கும் பொழுதில் துளிர் விட ஆரம்பிக்கும் வேறுபாடுகள் நன்றாக விவரிக்கப் பட்டிருக்கின்றன. பொதுவாகப் பெண்கள் மட்டுமே திரும்பத் திரும்ப இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்வதைப் பார்க்கவும் கேள்விப் படவும் செய்திருக்கிறோம். இந்தக் கதையில் வித்தியாசமாக ஆண்மகன் அதைச் செய்கிறான். "நீ என்னை உண்மையிலேயே விரும்புகிறாயா? இன்னமும் காதலிக்கிறாயா?" என்கிற மாதிரித் திரும்பத் திரும்ப அவளிடம் கேட்க வேண்டி அவனுக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறான். அந்தக் கேள்வி ஒன்றே அவர்களுக்குள் பெரும் இடைவெளியை உண்டு பண்ணுகிறது. "உனக்காக நான் எல்லாத்தையும் விட்டு விட்டு வந்தேன்; நீ என்ன எனக்காக விடுகிறாய்?" என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கடுப்படிக்கிறான். அழகும் அறிவும் முதிர்ச்சியும் பெற்ற ஒரு நடிகையைக் கலியாணம் ச

ஜெயகாந்தன் பற்றிய ஆவணப் படம்

படம்
ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படித்து விட்டு அது பற்றி ஓர் இடுகை போட்டேன். அதற்குக் கருத்துரையாக தோகா டாக்கீஸ் என்கிற நண்பர் இந்தக் காணொளிகளின் இணைப்பைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். அனைத்துப் பாகங்களையும் இரவோடு இரவாக ஒரே மூச்சாக உட்கார்ந்து பார்த்து முடித்தேன். தமிழகம் கொண்டாட வேண்டிய - ஓரளவு கொண்டாடி விட்ட - ஒரு மாபெரும் படைப்பாளியை, அவருடைய அன்றாடத்தில் எப்படி இருக்கிறார் என்று மிக அருகாமையில் காட்டியிருப்பதன் மூலம் இந்த ஆவணப் படம் மிகப் பெரும் சாதனையைச் செய்திருக்கிறது. நன்றி, ரவி சுப்பிரமணியன் அவர்களே! வரலாற்றில் ஒரு வரியில் இடம் பெற்று விட்டீர்கள்!! மொத்தத்தில் ஆவணப் படம் அருமையோ அருமை. ஆனால், பாகங்களாகப் போடப்படும் காணொளிகளுக்கே உரிய பிரச்சனையை இந்தத் தொடரும் சந்தித்திருக்கிறது. முதல் பாகத்தில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருக்கிறது பார்த்தவர்களின் எண்ணிக்கை. ஒரே படமாகப் போட்டிருந்தாலும் பாதியில் போபவர்கள் போகத்தான் செய்திருப்பார்கள். அது தெரிந்திருக்காது நமக்கு. அவ்வளவுதானே! :) 1 முதல் 7 வரை 9 பாகங்கள் போட்டிருக்கிறார்கள். அதெப்படி என்க

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 2/4

படம்
தொடர்ச்சி... நல்ல எழுத்தாளர்கள் எல்லோருமே நன்றாகச் செய்யும் வேலை, மனவோட்டங்களைச் சரியாகப் படம் பிடித்துக் காட்டுதல். அதைத் தலைவரும் ("அடப்பாவி, இவரையுமாடா?!" என்கிறீர்களா? நமக்கு எல்லோரும் தலைவர்தானே!) சிறப்பாகச் செய்திருக்கிறார். இப்படியான ஒரு நடையைத் தமிழுக்கு இவர்தான் முதலில் கொண்டு வந்திருக்க வேண்டும் என நினைக்கிறன். அதனால்தான் அவரை இவ்வளவு கொண்டாடுகிறார்களோ என்னவோ. அது மட்டுமில்லை, அவருக்கென்று ஒரு மொழி நடையும் வைத்திருக்கிறார். பாரதியின் உரைநடையில் வரும் வடமொழித் தாக்கம் போல் இவருடைய எழுத்தில் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு ஆங்கிலத் தாக்கம் மற்றும் கலப்பு இருக்கிறது. தாக்கம் தவறில்லை. கலப்புதான் தாங்க முடிவதில்லை. லாயரை வழக்கறிஞர் என்று சொல்லாவிட்டாலும் வக்கீல் என்று சொல்லியிருக்கலாம். பாத்திரங்கள் பேசும் போது சொல்வது வேறு. அது பிரச்சனையில்லை. ஆசிரியரே தான் சொல்வதாகச் சொல்லும் வரிகளில் கூட அப்படியான சொற்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் இடிக்கிறது. அது போலவே ஸெல்ஃப் என்கிற சொல். அதற்கு சுயம் என்கிற சொல் நன்றாகப் பொருந்தியிருக்கும். ஒருவேளை அதெல்லாம் அவருக்குப் ப