இடுகைகள்

டிசம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 6/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... பாதுகாப்பு இந்தியாவில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் வளரா நாடுகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள்.  வன விலங்குகளைவிட மனித இனம் எவ்வளவு மேலானது என்று படுகிறதோ அதே அளவுக்கு மனிதருக்குள்ளேயே ஒரு சாரார் பண்பட்ட மனிதர் போல் மேலான வாழ்க்கையும் இன்னொரு சாரார் விலங்குகளைப் போலக் கொடூரமான வாழ்க்கையும் வாழ்கிறார்கள். விதிகளை மதித்தல், மனிதர் உயிர்க்குக் கொடுக்கும் மரியாதை போன்று பல விசயங்களில் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் மேலானவையாகப் பட்டாலும், அடிப்படையான சில

முரண்பாடுகளற்ற உலகம்

முரண்பாடுகளற்ற உலகம் படைத்திட முற்றிலும் ஒத்துப் போகும் மூவர் அணி ஒன்று படைத்தோம் இயக்கம் தொடங்கிட எந்த முரண்பாடும் இன்றி இடம் பொருள் நேரம் எல்லாம் குறித்தோம் பேசி முடித்தபடி குறித்த இடத்தில் கூடினோம் குறித்த நேரத்தில் குறித்தபடியே குலவை எழுப்பித் தொடங்கப் போன ஒலகமகா இயக்கம் உடைந்து நொறுங்கிச் சிதைந்து விழுந்து தொடங்கும் முன்பே முடிந்து போனது குறித்த நேரம் என்பது மூவரில் யார் கடிகாரத்தின்படி என்ற மணித்துளிச் சண்டையில்... கடிகாரத்தில் கண்ட குறை கட்டியிருப்பவரையும் குறி வைத்துச் சொன்னதே என்ற காழ்ப்புணர்ச்சி மட்டும் உண்மை என்பதில் கருத்து வேறுபாடு இல்லாமல் கலைந்து பிரிந்தோம் ஒற்றுமை வேண்டி ஒரு பொதுக் கடிகாரத்திடம் போதல் ஒலகமகா மேதைகள் மூவரும் தம்மைத்தாமே இழிவு படுத்திக் கொள்ளும் தன்னம்பிக்கையற்ற செயலாகி விடும் என்பதால்... முரண்பாடுகளற்ற உலகம் இயங்காது முயலும் இயக்கமும் இயங்காது என்று முடிவு செய்து கொண்டு மூட்டையைக் கட்டினோம்!