இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 4/7

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும் வியப்புகள்... சிங்கப்பூர் என்றால் எல்லோருக்கும் பிடிப்பதற்கு முக்கியமான காரணம் - இங்கே மனிதர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு. வேறெங்கும் இந்த அளவுக்குப் பாதுகாப்பாக உணர்ந்ததில்லை நான். அதற்குக் காரணம் இங்கிருக்கும் சட்டம்-ஒழுங்கு. அதற்குக் காரணம் - கடுமையான தண்டனைகள். மற்றவற்றில் எல்லாம் மேற்கு நாடுகளைப் போல இருந்தாலும் இந்த ஒன்றில் மத்தியக் கிழக்கு போலவும் கிழக்கு போலவும் தான் இருக்கிறது சிங்கப்பூர். ஒரு வருடத்தில் மொத்தக் கொலைகளின் எண்ணிக்கை பத்தோ என்னவோதான் என்கிறார்கள். திருடிச் சிக்கினால் எந்தப் பேச்சுவா

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 1/6

படம்
வார இதழ்களில் வரும் ஓரிரு கதைகள் தவிர்த்து முழுமையாகச் சிறுகதைகள் அடங்கிய நூல் என்று படிக்க ஆரம்பித்தது தமிழ்ச்செல்வன் மற்றும் கோணங்கி ஆகியோருடையவற்றையே. பள்ளிக்கூடத்தில் படித்த நூல்களைப் போலவே அவற்றில் எவ்வளவைப் புரிந்து படித்தேன் - எவ்வளவைச் சம்பிரதாயமாகப் படித்தேன் - எவ்வளவை அவர்களுடனான உறவின் காரணமாகப் படித்தேன் என்பதெல்லாம் வேறு கதை. அவர்கள் என் உறவுக்காரர்கள் என்பதைத் திரும்பத் திரும்ப எழுதுவதே கூட ஒருவிதமான அசௌகரியமாகவே இருக்கிறது. கூட்டம் சேர்ப்பதற்காகவோ நானும் அவர்களுடைய ஆள் என்று காட்டிப் பெருமைப் பட்டுக் கொள்ளவோ விருப்பம் அதிகமில்லை ( எண்ணிப் பெருமைப் பட்டுக் கொள்வது எப்போதும் உண்டு!). நானும் பேனாப் பிடித்து எழுதுகிறவன் என்று ஆன பின்பு முகவரியை வைத்து அரசியல் செய்யும் ஆளாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாகத்தான் இருக்கிறேன். ஆனால், அவர்களுடைய எழுத்துக்கள் என்னை நிறையப் பாதித்திருக்கின்றன. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவர்களின் எழுத்துக்களை விட எழுத்தாளர் என்கிற அவர்களின் அடையாளம் என் இளமைக்காலத்தை நிறையச் செதுக்கியது என்பதை என்றும் மறுக்க முடியாது. ஒவ்வொரு முறையும

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 1/4

படம்
தமிழின் தலைசிறந்த சிறுகதை-புதின எழுத்தாளர் என்றால் அது ஜெயகாந்தன் அவர்கள்தான் என்பது பெரும்பான்மை இலக்கியவாதிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்ட ஒன்று. வாசகராகவோ எழுத்தாளராகவோ தமிழ் இலக்கிய உலகுக்குள் நுழைய விரும்பும் எவரும் முதலில் படிக்க வேண்டியது அவருடைய எழுத்துக்களைத்தான். அப்படித்தான் நானும் அவரைப் படிக்க ஆரம்பித்தேன். முதலில் அவருடைய கதைகள் அனைத்தையும் முடித்து விட்டு பின்னர் மற்றவர்களைப் படிக்கலாம் என்று திட்டம். ஞான பீட விருதுக்குப் பிந்தைய அவருடைய வாழ்க்கையில் சில வேண்டாத சர்ச்சைகளும் வந்து சென்று விட்டன. ஆனால் அவர் சர்ச்சைகளுக்குப் பழக்கப் படாதவர் அல்லர். அவர் கொடி கட்டிப் பறந்த காலத்திலேயே ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு உள்ளானவர். சர்ச்சைக்குரிய சமாச்சாரங்களை பயமின்றிப் பேசியதால்தான் கொடி கட்டிப் பறந்தார் என்றும் சொல்வார்கள். அப்படியான ஒரு கதைதான் இதுவும். கல்லூரிக் காலத்திலேயே அவருடனான பரிச்சயம் ஆரம்பித்து விட்டது. எங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முதலாண்டு இளங்கலை தமிழ்ப் பாடத்திட்டத்தில் "ஜெயகாந்தன் முன்னுரைகள்" என்ற நூல் இடம் பெற்றிருந்தது. அப்போ

ஆர் கே நாராயணின் வழிகாட்டி (THE GUIDE) - 3/3

படம்
தொடர்ச்சி... ஒரு பெண்ணுக்குப் பின்னால் கிறுக்காகி ஓட ஆரம்பித்தால் ஒருவனுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சாணக்கியரே விலாவாரியாகச் சொல்லி விட்டார். இதனால் சாம்ராஜ்யங்களே சரிந்த கதையெல்லாம் அதற்கு முன்பே நிறைய வந்து விட்டன. அதையே மீண்டும் மீண்டும் ஒவ்வொரு எழுத்தாளரும் தத்தம் காலத்துக்கு ஏற்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை அய்யாவும் அவருடைய காலத்துக்கு ஏற்பச் சொல்லி விட்டார். தொழிலில் முற்றிலும் ஆர்வம் இழந்து கடைப் பக்கமே வருவதை மறந்து விடுகிறான் ராஜு. இதைப் பயன் படுத்திக் கொண்டு அவன் வேலைக்கு வைத்திருந்த ஆள், கடையையே முழுசாக முழுங்கி விடுகிறான். இந்த வேலை அந்த வேலை என்றில்லை; எல்லா வேலையிலும் இது நடக்கத்தான் செய்கிறது. ஏதோவொரு விசயத்தில் கிறுக்காகி விட்டால் அதற்குக் குறுக்கே எது வந்தாலும் அதை இழக்கவும் அழிக்கவும் தயங்காததுதான் மனிதப் புத்தி. அது இந்த விசயத்தில் கொஞ்சம் கூடுதலாக வேலை செய்யும். எத்தனை பேருடைய வாழ்க்கை நமக்கு இந்தப் பாடத்தை நினைவு படுத்தினாலும் விழுபவர் விழுந்து கொண்டேதான் இருக்கிறார்கள். முந்தைய நாள் வரை விபரமாகப் பேசுபவர்கள் கூட மறுநாள் காலையில் இ

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 3/7

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும் வியப்புகள்... நான் இருக்கும் பகுதி பெடாக். தமிழில் பிடோக் என்பதை ஆங்கிலத்தில் பெடாக் என்று உச்சரிக்கிறார்கள். ஆனால், அங்கேயே காலம் காலமாக வசிக்கும் தமிழர்கள் "பிடோ" என்று 'க்' விட்டு விடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு பெயருமே ஆங்கிலத்தில் ஒரு விதமாகவும் தமிழில் ஒரு விதமாகவும் அதையே எழுத்தில் ஒரு விதமாகவும் பேச்சில் ஒரு விதமாகவும் என்று வெவ்வேறு விதமாக உச்சரிக்கப் படுகின்றது. ஒருவர் பெடாக் போன்ற ஒரு வார்த்தையை எப்படி உச்சரிக்கிறார் என்பதை வைத்தே அவர் எவ்வளவு காலம் சிங்கப்பூரில் இருக்கிறார் என்று சொ

ஆர் கே நாராயணின் வழிகாட்டி (THE GUIDE) - 2/3

படம்
தொடர்ச்சி... பிரச்சனை எங்கே தொடங்குகிறது? அல்லது, அதன் பின்னணி என்ன? கையில் நிறையக் காசையும் மண்டையில் நிறைய சரக்கையும் வைத்திருக்கும் ஆராய்ச்சியாளனான மார்க்கோ, அவனுக்கேற்ற மாதிரியான ஒரு பெண்ணைத் தேடாமல் அழகைத் தேடித் போய் ரோசியை மணக்கிறான். பணமும் படிப்பும் வைத்திருக்கும் ஆண்கள் அழகு மட்டும் இருந்தால் போதும் என்று தனக்கு எவ்விதத்திலும் ஒத்து வராத பெண்ணிடம் போய் விழுவதும், அழகை வைத்திருக்கும் பெண்கள் அல்லது பெண் வீட்டுக்காரர்கள் பணம் மட்டும் இருந்தால் போதும் என்று தமக்கு எந்த வகையிலும் ஒத்து வராத ஆணிடமும் போய் விழுவதும், அப்படிப்பட்ட உறவுகள் பெரும்பாலான நேரங்களில் வேறு வழியில்லாமல் வாழ்ந்து மடிவதும், சில நேரங்களில் மணவாழ்க்கை சிதைந்து சின்னாபின்னப் படுவதும் நீண்ட காலமாகவே நடந்து வரும் இயல்பான ஒன்றுதான். இது நாராயண் காலத்திலேயே நடந்திருக்கிறது என்பது இந்த நூலைப் படித்த பின்பு புரிகிறது. மார்க்கோ மூளையை மட்டும் மூலதனமாகக் கொண்டு வாழ்பவன். அவன் பெண் எடுத்த இடம் - தேவதாசிக் குடும்பம். உடலையும் அழகையும் கலையையும் மூலதனமாகக் கொண்டு வாழ்பவர்கள். தன் ஒரு கை செய்கிற வேலை இன்னொரு கைக்குத் த

மக்களாட்சி

படம்
மகனும் மகளும்தானே மக்கள்?! அவர்கள் ஆள்வதுதானே மக்களாட்சி?! அப்புறம் ஏன் அலுத்துக் கொள்கிறீர் உடன்பிறப்புகளே?! அதனால்தானே உம்மை மக்களெனாமல் உடன்பிறப்பென்கிறேன்! அலைகடலேனத் திரண்டு வாரீர் உடன்பிறப்புகளே! தண்டவாளத்தில் தலைவைத்தாவது மனுநீதிச் சோழனின் மண்ணில் மக்களாட்சி காப்போம்!

ஒரு நடிகையின் வாக்குமூலம்

படம்
வசந்தம் தொலைக்காட்சியில் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்றொரு படம் ஓடிக் கொண்டிருந்தது ஒருநாள். தொடர்ந்து பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்திருந்த சில காட்சிகள், அதன் பின் வந்த மனதை உலுக்கும் பல காட்சிகளையும் பார்க்க வைத்தன. பல வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் 'ஒரு நடிகையின் கதை' என்றொரு தொடர்கதை வந்தது. சினிமாக்காரர்கள் எல்லோரும் முதலமைச்சரிடம் மனுக் கொடுத்து அதைத் தடுத்து நிறுத்தினார்கள். வாராவாரம் கிளுகிளுப்போடு கொடுமைகளை எழுதிய எழுத்தாளர், கடைசி வாரத்தில் எழுதிய சில வரிகள் இப்போதும் நினைவுக்கு வருகின்றன. "இந்தத் தொடரை நிறுத்த முடிந்தவர்களால், ஒவ்வொரு நாளும் சினிமா மோகத்தோடு சென்ட்ரல் நிலையத்திலும் எழும்பூர் நிலையத்திலும் வந்திறங்கிக் கொண்டிருக்கும் - வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கும் - பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியுமா?" என்ற கேள்வியோடு முடித்தார். அவ்வளவு கோபக்காரச் சினிமாக்காரர்கள் இந்தப் படத்தை எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சினிமாக்காரர்களைப் பற்றிய முழுமையான தெரிவு (இந்தச் சொல் இந்த இடத்தில் தவறு என்பவர்கள

ரியா - சிங்கப்பூர் சீரியல்

படம்
சென்ற முறை சிங்கப்பூர் வந்திருந்த போது ஓட்டலில் தங்கி இருந்த போது ஒரு சில தடவைகள் இங்கும் ஒரு தமிழ்த் தொலைக்காட்சி இருப்பதைக் கண்டேன். வசந்தம் தொலைகாட்சி என்று பெயர். ஆனால், நிகழ்ச்சிகள் எதுவும் முழுதாகப் பார்க்கவில்லை. இந்த முறை குடும்பத்தோடு வந்து குடித்தனம் ஆரம்பித்திருப்பதால் தினமும் வசந்தம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. தொலைக்காட்சிக்கும் நமக்குமான தொலைவு மிக அதிகம் என்றாலும், கடல் கடந்து வாழும் நம் தாய்த் தமிழகத்து மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள் நம் பண்பாட்டைக் கட்டிக் காக்கும் அழகையும் பார்த்துக் களிப்பதற்காகவே ஆரம்பத்தில் கொஞ்ச காலம் அதனை அடிக்கடிப் பார்த்துக் கொள்வேன். முக்கியமாக வசந்தம் தொலைக்காட்சியின் செய்திகள் மிகவும் பிடித்திருந்தன. மொழியிலும் செய்தியிலும் தரம் நிறைய இருந்தது. பின்னர் மெதுவாக இந்தத் தொலைக்காட்சித் தொடரையும் அவ்வப்போது பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. நம்ம ஊர் சீரியல்கள் போல சவ்வுத் தன்மை இல்லாமல் இருப்பது போல் இருந்தது. அதுவே அவ்வப்போதின் அளவைக் கூட்டியது. தொடர்ந்து அதைப் பார்க்கப் பார்க்கப் பல வியப்புகள். தலைப்பே ஒரு விதமாக இருந்தது. ரியா எ

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 2/7

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும் வியப்புகள்... இங்கே  கார்கள் மிகக் குறைவு. மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே கார் வைத்திருக்கிறார்கள். காரணம் - கார் வைத்துப் பிழைக்க இங்கே ஏகப் பட்ட பணம் வேண்டும். அதன் பொருள் - கார்களின் விலை அதிகம் என்பதல்ல. காரின் விலையை விடப் பல மடங்கு வரியைப் போட்டுத் தாக்கியிருக்கிறது அரசாங்கம். என்ன காரணம்? இது ஒரு சிறிய ஊர். சிறிய தீவுதான் மொத்த ஊரும் நாடும் எல்லாமும். இருக்கிற மிகக் குறைவான இடத்துக்குள்தான் எல்லோரும் சிரமமில்லாமல் வாழ வேண்டும். வாழ்கிற முக்கால்வாசிப் பேர் காரில்தான் போவேன் என்று இறங்கி விட்டால் நகர

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 12/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும்  வியப்புகள்... அதற்கடுத்த வாரமே ஊரைக் காலி செய்து கிளம்ப வேண்டியதாகி விட்டதால் அருங்காட்சியகத்துக்குப் பிறகு வேறெங்கும் செல்லத் திட்டமிடவில்லை. அலுவலகமும் வீடும் மட்டும்தான். அலுவலகத்திலும் சில விஷயங்களைக் கண்டு வியக்க முடிந்தது. சாப்ட்வேர் துறையில் இந்தியர்களே மிகுந்திருப்பதால் நிறைய வெள்ளைக்காரர்களுடன் பேசிப் பழகவெல்லாம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருக்கிற இந்தியர்களையாவது வேடிக்கை பார்க்கலாம் என்று கவனித்துப் பார்த்ததில் சில சிறு சிறு சுவாரசியங்களை உணர முடிந்தது. அப்படியான ஒன்று, நம்ம ஊர்ப் பெண்களில் ஒரு பெண்