இடுகைகள்

மார்ச், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மடமும் அடமும்

படம்
பொன்னும் மணியும் ஒரு நல்ல நாகரீகமான - தப்பு செய்யப் பயப்படும் குடும்பத்தில் பல தன்மையான சகோதரர்களோடு பிறந்த சகோதரிகள். பொன் மூத்தவள். எனவே மணி இளையவள். பொன் மிகவும் நல்லவள். பயந்த சுபாவமுடையவள். யார் என்ன திட்டினாலும் வாங்கிக்கொண்டு பதிலுக்கு வம்பு பண்ணாதவள். எனவே, அவள் வைக்கிற குழம்புகளில் உப்பும் உரைப்பும் அதிகம் இருந்த போதிலும் மனதில் கொஞ்சம் சூடும் சொரணையும் குறைவு என்று பெயர் வாங்கியவள். சூடு சொரணையோடு வாழ்ந்தவர்களெல்லாம் என்னத்தை வாரிக் கொட்டி விட்டார்கள் என்று மனதில் தோன்றினாலும் அதை வாதிடக்கூட விரும்பாதவள். சொல்ல வேண்டியதே இல்லை - எந்த வீட்டில் என்ன நல்ல காரியம் ஆனாலும் கெட்ட காரியம் ஆனாலும் முதல் ஆளாக நின்று பரிமாறுவது முதல் இலை எடுப்பது வரை எல்லா வேலைகளையும் முன்னின்று பார்ப்பாள். எனவே, சொல்ல வேண்டியதே இல்லை - அவளை எல்லோருக்குமே பிடிக்கும். ஆனாலும் அவ்வப்போது சின்னச் சின்னக் கழுதைகள் கூட (சொந்தக்காரக் கழுதைகள்தாம்) அவளை மரியாதையில்லாமல் நடத்தி விடும். இறங்கி வருபவரை ஏற்றிக் காட்டும் பழக்கம்தான் நம் இனத்துக்கே கிடையாதே. யார் வீட்டில் என்ன துக்கமாக இருந்தாலும் அதைத் தன் சொ

சாலைப் போராட்டங்கள்!

படம்
வாழ்க்கைப் பயணம் சில நேரங்களில் வெறுப்பூட்டுவதாய் இருக்கிறது. சக பயணிகள் நாம் எதிர் பார்க்கிற மாதிரி நடந்து கொள்ளாத பொழுதுகளில் அது ஒன்றே நம்மை அப்படி ஆகச் செய்து விடுகிறது. அதுவே நம் பயணங்களுக்கும் பொருந்தும். அதாவது, சாதாரண பயணங்கள் பற்றிச் சொல்கிறேன் - சாலைப் பயணங்கள் பற்றி! இந்த உலகில் வாழ்வது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சாலைகள் எனக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன - எந்த மாதிரியான சக மனிதர்களோடு பயணிக்க வேண்டியுள்ளது என்பதையும். முதலில், அவர்கள் எல்லோருமே மனிதர்கள் என்று அழைக்கப் பட முடியுமா என்று தெரியவில்லை. பிறப்புச் சான்றிதழ் மற்றும் பல மருத்துவச் சான்றிதழ்கள் போல, நம் மனிதத் தன்மையை அளக்க ஒரு குறியீட்டு எண் மற்றும் அதை அளக்க ஒரு சரியான முறை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. குறைவான மனிதக் குறியீட்டு எண் கொண்டோர் காடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும். என் நண்பன் ஒருவன் சொல்வான் - கழிப்பறையில் இருக்கும் போதுதான் அவனுக்குள் இருக்கும் தத்துவ ஞானி முழுமையாக வெளிவருவான் என்று. அது போல, சில நேரங்களில், சாலையில் போகும் போது, நானும் நிரம்பத் தத்துவ வயப்பட்டு

அற்பம்

அற்பம் அற்பமன்று அற்பரிடத்து

வேயன்னா

படம்
நமக்கெல்லாம் நாள்தோறும் நாடு பற்றிய நினைவு என்பது இருந்து கொண்டே இருப்பதில்லை. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் கொடுக்கப்படுகிற மிட்டாய்கள்தான் அதை ஓரளவு ஒரு சிலருக்கு நினைவு படுத்துபவையாக இருந்தன. கூடுதலாக இப்போது தனியார்த் தொலைக்காட்சிகளின் புரட்சி நிகழ்ந்த பின்பு ஏகப்பட்ட நாட்டுப் பற்றூட்டும் நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் காட்டப்படுவதால் அவ்விரு நாட்களில் மேலும் அதிகப் படியான நாட்டுப் பற்றை உணர முடிகிறது. இவை தவிர்த்து அதைவிட அதீத உணர்ச்சிகள் கொப்பளிப்பது கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களிலும் அவற்றை விடச் சாதாரணமாகச் சிலரால் பேசப்படும் பக்கத்து நாட்டுடனான போர் நடக்கும் நாட்களிலும்தான். இப்படியாக நாட்டுப் பற்று பல்வேறு புது வடிவங்கள் எடுத்திருக்கும் வேளையில் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினமும் குடியரசு தினமும் நாட்டைப் பற்றி மட்டுமல்லாமல் எனக்கு எங்கள் தாத்தா பற்றியும் தவறாமல் நினைவு படுத்துகின்றன. நாட்டுக்கும் தாத்தாவுக்கும் என்ன உறவு என்கிறீர்களா? அது ஒரு பெரும் கதை. அந்தக் கதையைப் பற்றிப் பேச இதை விடவும் சிறப்பான தருணம் சிக்காது. இந்த ஆண்டு தாத்தாவின் நூற

நாத்திகம் - இன்னொரு மதம்!

படம்
இந்தக் கேள்விக்கு நம் வாழ்நாளில் என்றும் ஓர் உறுதியான விடை கிடைக்காமல் போகலாம் அல்லது இந்தப் பூவுலகில் பிறக்கும் எவருக்குமே முற்றிலும் ஏற்றுக் கொள்ளத் தக்க மாதிரியான ஒரு பதில் கிடைக்காமலே போகலாம். கேள்வி?  கடவுள் இருக்கிறாரா? தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டால் குழப்பமான பதிலே கிடைக்கிறது. இல்லை என்பதற்கான ஏற்கத் தக்க தர்க்க ரீதியான விளக்கம் கிடைக்காத போது என் பதில் நேர்மறையாக உள்ளது. இருக்கிறது என்பதற்கான ஏற்கத் தக்க ஆன்மீக விளக்கம் கிடைக்காத போது என் பதில் எதிர் மறையாக உள்ளது. உங்கள் விளக்கம் என்னவாக இருந்தாலும், நான் உறுதியாக நினைப்பது என்னவென்றால், இந்த உலகம் இவ்வளவு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் வலிகளுக்கும் வன்முறைகளுக்கும் போர்களுக்கும் பசிக்கொடுமைக்கும் தகுதியானதில்லை. பிறந்த குழந்தை முதல் (இன்னும் சொல்லப் போனால் வயிற்றில் இருக்கும் கரு முதல்) பெண்கள் வரை - தள்ளாத முதியோர் வரை எல்லோருமே இவற்றை அனுபவிக்கிறார்கள் என்பது அதை விடக் கொடுமை. சரியான தர்க்க விளக்கம் இல்லை எனும் போது, என் ஆத்திக நண்பர்கள் சொல்கிறார்கள் - அப்படியொரு விளக்கம் இல