இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சலுகை முதலியம் விவசாயிகளையும் நுகர்வோரையும் கூடச் சுரண்டும்: ரத்தன் கஸ்னபிஸ்

புகழ்பெற்ற மார்க்சிய - பொருளியல் பேராசிரியர் இந்த முரண்பாட்டை ஆராய்கிறார்   சுபோரஞ்சன் தாஸ்குப்தா முதலாளித்துவத்தின் கோட்டைகளான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் அவர்களின் விவசாயத் துறைக்குப் பெருமளவில் மானியமளித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ‘சந்தை-ஆதரவு’ (pro-market) ‘முதலிய-ஆதரவு’ (pro-capital) நரேந்திர மோதி ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’க்குக்  (MSP) கூட சட்டப்படியான உத்தரவாதம் வழங்கத் தயாராக இல்லை. ஏன்? முன்னேறிய மேற்கத்திய முதலாளித்துவத்துக்கும் சலுகைசார் இந்திய முதலாளித்துவத்துக்கும் என்ன வேறுபாடு? இந்த முரண்பாட்டைப் புகழ்பெற்ற மார்க்சிய - பொருளியல் பேராசிரியர் ரத்தன் கஸ்னபிஸ், மானுட அறிவியல் பேராசிரியரான இக்கட்டுரையாளருடன் ஒரு நேர்காணலில் ஆராய்கிறார். கே: நம் நாட்டின் ஆளும் அரசு சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு வலதுசாரிப் பழமைவாத அரசாங்கமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அது உண்மை என்றால், ஏன் இந்தத் தே.ஜ.கூ. (NDA) அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சந்தைக் கொள்கைகளைப் பின்பற்றி வேளாண்மைத் துறைக்குப் பெரிதும் மானியம் அளிக்கவில்லை? கஸ்னப

மாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)

மாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…) அவளின் கடைசி மூச்சு அவள் நுரையீரலை நிறைக்கிறது பொம்மைப் பேழைக்கு மேலே கால்கள் மிதக்கின்றன சிவப்புச் சீலை அவள் கழுத்திலிருந்து அவிழ்கின்றது கொரியப் பாப் பாடல் திரும்பத் திரும்பத் திருப்பி ஒலிக்கிறது கண்ணீர் தவழ்ந்து மேலேறி அவள் கண்ணுக்குள் நுழைகின்றன துயரம் குருடாக்கும் கோபமாக மடிப்பவிழ்த்துக்கொள்கிறது காகிதத்தின் கறைபடிந்த எழுத்துக்கள் கண்ணுக்குள் வருகின்றன அந்த எண்ணம் அவள் மனதை நீங்குகிறது கதவுகள் படார் படாரென்று திறக்கின்றன சொற்கள் வாய் பிளந்து உள்நுழைந்து பற்றியெரியும் வயிற்றுக்குள் அடங்குகின்றன என்னுடன் அவளுடைய கடைசிச் சண்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறாள் அது எனக்கு இன்னும் தெரியாது நான் உன்னை வெறுக்கிறேன், படாரென்று வாய் திறந்து உள்ளே போய்விடுகிறது அவள் தட்டிவிட்ட கைவினை இளஞ்சிவப்பு வாலெண்டைன் அட்டை தரையிலிருந்து தாவி மேசை மேல் இடம் கொள்கிறது யாருக்குமே புரியல யாருக்குமே தெரியல யாருமே காது கொடுக்கிறதில்ல யாருக்குமே அக்கறையில்ல யாருக்குமே என்னைப் பிடிக்கல நான் நாதியற்றவள் என்று கக்கியவற்றை விழுங்கிக்கொண்டு விரைந்து பின்செல்கிறாள் அ