இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் காதல் - புடலங்காயும் பூசணிக்காயும்!

படம்
ஒரு மனிதனைப் பிடிப்பதற்கு அவர் நல்லவராக இருக்க வேண்டும் அல்லது அறிவாளியாக இருக்க வேண்டும் அல்லது நம் மீது பாசக்காரராக இருக்க வேண்டும் என்று எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இருக்க வேண்டியதில்லை. இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட பெயர் சொல்லி விளங்க வைக்க முடியாத ஒரு காரணம் கூட இருக்கலாம். நம் வாழ்வின் மறக்க முடியாத ஒரு குறிப்பிட்ட காலத்தில் உடன் இருந்திருந்தால் கூட அத்தகைய பிடிப்புகள் ஏற்படலாம். அது மனிதர்களுக்கு மட்டுமில்லை. பொருட்களுக்கும் கண்ணால் காண முடியாத மற்ற பல்வேறு விஷயங்களுக்கும் கூடப் பொருந்தும் என்று உணர்கிறேன். எடுத்துக்காட்டாக, ஒரு பாடல் பிடித்துப் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சில சொல்லி விளக்க முடிந்தவை. சில அப்படி முடியாதவை. சில நேரங்களில் குரல், சில நேரங்களில் மெட்டு, சில நேரங்களில் இசை என்று பாடலின் அடிப்படையான பண்புகள் தவிர்த்து முதல் முறை அந்தப் பாடலைக் கேட்ட சூழல் கூட அத்தகைய பிடிப்பைத் தீர்மானிக்க முடியும். முதல் முறையை விடுங்கள், பல முறை கேட்டுப் பிடிக்காத ஒரு பாடல் திடீரென ஒரு குறிப்பிட்ட சூழலில் கேட்டபின் பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. இதுவரை பேசியதெல்லாம

இசை - எனக்குத் தெரிந்த கற்பூர வாசனை

படம்
இசைக்கும் எனக்குமான உறவு அமாவாசைக்கும் அப்துல் காதருக்குமான உறவு போல. அப்துல் காதர், அமாவாசையை வைத்து அடுத்த மூன்று நாட்களில் பிறை வரும் என்பதைக் கணக்குப் போட முடியும் என்பது போல், எனக்கும் இசைக்கும் இருக்கும் உறவையும் ஓரளவு பெரிதாக்கிக் காட்ட முடியும், வலுக்கட்டாயமாக முயன்றால். ஆனால், உண்மையில் எங்களிடையான உறவு எப்படி என்றால், வருடத்தில் ஓரிரு முறைகள் பார்க்கும் படங்களில் வரும் பாடல்களைப் பார்ப்பேன்; பேருந்தில் பயணம் செய்யும் நேரங்களில் வேறு வழியில்லாமல் கேட்க நேரும் பாடல்களைக் கேட்பேன். வீட்டில் எந்நேரமும் யாருக்கோவென்று ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியில் ஓடும் பாடல்களையும் அவ்வப்போது கேட்டுக் கொள்வேன். மற்றபடி, பாடல் கேட்க வேண்டும் என்று முயன்று முன் சென்று போட்டு விட்டுக் கேட்டதெல்லாம் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறைதான். முறையான இசை என்று பார்த்தால் அதில் என் அறிவு அமாவாசை வெளிச்சத்தின் அளவு என்று சொல்லலாம் (அய்யோ... இந்த அமாவாசை ஏன்தான் இப்படித் திரும்பத் திரும்ப வந்து லொள்ளுப் பண்ணுகிறதோ இன்னைக்கு!) சிங்கப்பூர் வந்து ஆரம்பித்திருக்கும் இன்னொரு பழக்கம் - ஒரு நாளைக்கு இர

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 10/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும்  வியப்புகள்... போக விட்டானா அவன்?! இல்லையே. யாரவன்? ஒரு சூதாட்டக்காரன். என்ன செய்தான்? ஒரு எலுமிச்சம் பழத்தையும் மூன்று கிண்ணங்களையும் கைகளில் வைத்துக் கொண்டு ஏதோவொரு சித்து விளையாட்டுக் காட்டினான். கிண்ணங்களை எலுமிச்சம் பழத்துக்கு மேல் கவிழ்த்தி கையை இங்கிட்டும் அங்கிட்டும் ஆட்டி பழத்தை இடம் மாற்றி இறுதியில் பழம்  எங்கே இருக்கிறது என்று கேட்பானாம். சுற்றியிருக்கிற முட்டாள்கள் எல்லாம் கையில் இருக்கிற காசைக் கட்டி, "இதற்குள் இருக்கிறது... இதற்குள் இருக்கிறது..." என்று  கரைவார்களாம். சரியாகச் சொன்னவர்கள

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (3/3)

படம்
மலர்ச்சி... ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய இந்த நூலிலேயே நா.பா. அரசியல் பற்றிக் கேவலமாக எழுதியிருப்பதையும் காறித் துப்பியிருப்பதையும் படிக்கும் போது பல பழைய தலைவர்களையும் கட்சிகளையும் பற்றிக் கேள்விப் பட்டதெல்லாம் உண்மைதான் போலும் என்று எண்ண நேர்கிறது. நாம் நினைப்பது போல திடீரெனச் சேற்றில் குதித்த இனமல்ல நம்முடையது. மெல்லத்தான் தமிழ் மனச்சாட்சி செத்திருக்கிறது. விடுதலை பெற்றேடுத்தோர் வாழ்ந்து முடிந்த பின்பு வீழ்ந்ததல்ல நம் அரசியல்; அவர்கள் வாழும் போதே வீழ்ந்திருக்கிறது அல்லது அவர்களில் சிலரே கூட வீழ்த்தியிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இன்றைக்கு இருப்பவர்களுக்குச் சற்றும் சளைக்காதவராக இருக்கிறார் பர்மாக்காரர். வெளியில் கும்பிடு போட்டு விட்டுப் பின்னணியில் பேய் வேலைகள் பார்ப்பது அப்போதே அரசியலின் அடிப்படைத் தேவையாக இருந்திருக்கிறது. அதே கால கட்டத்தில்தான் காமராஜர், கக்கன் போன்ற மாமனிதர்களும் அதே மதுரை வட்டாரத்தில் அரசியல் செய்திருக்கிறார்கள். ஒருவேளை, அந்தக் காலம், கதையில் வருவது போல, நன்மைக்கும் தீமைக்குமான போர்க் காலமாக இருந்து, அதற்குப் பிந்தைய காலம், முழுமையாகத் தீமைக்க