இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 5/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... இலண்டனில் மற்றவர்கள் எந்தப் பெருநகரமும் அது கிராமமாக இருந்த காலத்தில் இருந்து இருப்போர் மட்டுமே கொண்டு இருப்பதில்லை. எல்லோரும் உள்ளே வருவதால்தான் அது நகரமாகிறது - பெருநகரமாகிறது. எல்லோரும் சேர்ந்துதான் ஒரு பெருநகரத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். எந்த நகரத்திலும் வெளியோர் வந்து எடுத்துக் கொண்டு மட்டும் ஓடிவிடுவதில்லை. தம் உழைப்பையும் திறமைகளையும் கொடுத்துத்தான் பதிலுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு இலண்டனும் விதிவிலக்கல்ல. இன்னும் சொல்லப் போனால், வெள்ளைக்காரர்கள் எங்கெல்லாம் போய் கொள்ளைய

கடிதக் கிறுக்கு

படம்
பெங்களூர் வருவதற்கு முன்பு வரை கடிதம் எழுதும் பழக்கம் கடுமையாக இருந்தது. கடிதத்தையும் எழுதிவிட்டு, அதை நாட்குறிப்பிலும் ஏற்றி விடுவேன். இன்னின்னார்க்கு இன்று கடிதம் எழுதினேன் என்று. கிட்டத்தட்ட இரண்டு-மூன்று  நாட்களுக்கு ஒருமுறை கடிதமும் பேனாவுமாக உட்கார்ந்து விடுவேன். நமக்குத்தான் படிப்பதைத் தவிர எல்லாம் பிடிக்குமே. அதனால் படிக்க வேண்டிய காலத்தில் அதில் இருந்து தப்பித்துக் கொள்ள வைத்திருந்த டெக்னிக்குகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. வேலைக் கிறுக்கு பிடித்த பின் கடிதம் எழுதுதல் மெது-மெதுவாகக் குறைந்து போய் விட்டது. அத்தோடு சேர்ந்து மின்னஞ்சல் வேறு வந்து அதற்கான தேவையை இல்லாமலே செய்து விட்டது.  அப்புறம்தான் எதுவாக இருந்தாலும் அப்போதே பேசித் தீர்த்துக் கொள்ள வசதியாக ' செல்' லப்பன் வந்து விட்டானே! இந்தப் பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று பார்த்தால், அது பள்ளிப் பருவத்திலேயே ஆரம்பித்து விட்டது.  உறவினர்களோடும் நண்பர்களோடும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது ஒரு பெரிய நற்பண்பாகவும் வெற்றி பெற்றவர்களில் பழக்கமாகவும் மனதில் பதிந்து விட்டதன் விளைவு. காந்தி கடிதம் எழுதுவார், நேரு கடிதம்

மேகத்தின் கவலை

பூமியைப் பொருத்தமட்டில் சூரியனைப் போல் சந்திரனைப் போல் வெள்ளிகளைப் போல் நாங்களும் வானத்திலிருப்பதால் எம்மினமும் வானவ இனம்தானாம் வானவ உறவுகள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் வெள்ளிகளுக்குமோ எம் மீது வேறுவிதமான வருத்தம் "பெயருக்குத்தான் வானில் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதெல்லாம் இருப்பதோ எப்போதும் பூமிக்கருகில்தான்... பின்னே அதெப்படி நம்ம கூட்டம் என்று ஏற்றுக் கொள்ள முடியும்?!" * அறிவியலும் பிரிவியலும் கலந்த பொரியல் ஒன்று வைக்க முயன்ற வினை!

உங்களூர் எங்களூர்

உங்களூர்ச் சாலைகள் எங்களூர்ச் சாலைகளை விடப் பளபளப்பு உங்களூர்த் தெருக்கள் எங்களூர்த் தெருக்களை விட அகலம் உங்களூர்க் கட்டடங்கள் எங்களூர்க் கட்டடங்களை விடப் பிரம்மாண்டம் நிலம் நீர் காற்றும் அனலும் கூட வெவ்வேறு மாதிரி இருக்கின்றன ஆனால் - உங்களூர் வானம் மட்டும் ஏன் எங்களூர் வானம் போலவே இருக்கிறது? அதே சூரியன்! அதே நிலா!! அதே வெள்ளிகள்!!! * இத்தோடு முடிந்து விட்டது போல் உணர்ந்தால் நிறுத்தி விடுங்கள்! எப்போதும் போல், "என்ன சொல்ல வர்றேன்னே புரியலப்பு!" என்போர் தொடர்ந்து படியுங்கள்! உங்களூர் மனிதர்கள் எங்களூர் மனிதர்களை விட வேறு விதங்களில் உண்டு - உடுத்து - உறவாடுகிறார்கள்... நிலம் நீர் காற்றும் அனலும் போல! ஆனாலும் - அவர்களுக்குள்ளும் வானம் போல ஏதோவொன்று அதே சூரியன் அதே நிலா அதே வெள்ளிகளை வைத்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது! * "சரி, இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?!" என்போர், உங்கள் நேரத்தை வீணடித்தமைக்காக என் மீது வரும் கோபத்தை அடக்கிக் கொள்ள தியான வகுப்புகளுக்குச் செல்லுங்கள்!