இடுகைகள்

அக்டோபர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உணர்ச்சிப் பெருநாள்!

படம்
என் வாழ்வில் முக்கியமானதொரு மைல்க்கல்லைக் கடக்கிறேன் இன்று. இப்போதுதான் என் மகளைப் பள்ளியில் சேர்த்து விட்டு வருகிறேன். இது ஒருவிதமான உணர்ச்சி மேலோங்கிய நாள். அவளை விட்டு விட்டு வெளியே வரும்போது அழுது விடுவேன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக, என் மனைவியைச் சிறிது நேரம் அங்கு இருந்து கொள்ளலாம் என்று அனுமதித்தார்கள். அது கொஞ்சம் கதையின் போக்கை மாற்றி விட்டது. அடுத்த மைல்க்கல்லைக் கடக்கும் போது சிந்திக் கொள்வதற்காகச் சிறிது கண்ணீரைச் சேமித்துக் கொண்டேன். இன்று காலை, என் மகள் முதல் நாளாக வீட்டை விட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிய போது, மணப்பெண்ணாக வீட்டை விட்டுக் கிளம்பப் போகும் அந்த நாள் பற்றிய நினைவு திரும்பத் திரும்ப வந்து சென்றது. அந்த நாளை எப்படிக் கையாளப் போகிறேன் என்று தெரிய வில்லை. இப்போதே அது பற்றிச் சிந்திக்க விரும்ப வில்லை. அதே வேளையில், அது பற்றிச் சிந்திக்காமலே இருக்கவும் விரும்ப வில்லை. அவளுக்கு மூன்று வயதே ஆகும் இந்தப் பொழுதில் அது பற்றி எல்லாம் சிந்திப்பது பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறது. ஆனால், அவள் பிறந்த நாளன்று இன்றைய தினம் பற்றிச் சிந்தித்தேன்.

மாக்களாட்சி?!

படம்
எத்தனையோ கோளாறுகள் இருந்தாலும் மக்களாட்சிதான் இன்று அதிகம் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள அமைப்பு. மற்ற அமைப்புகள் அனைத்திலும் இதை விடப் பெரிய பிரச்சனைகள் (குறைவாக இருக்கலாம்) இருக்கின்றன. மற்ற அமைப்புகள் மக்களாட்சிக்குப் பக்கத்தில் கூட வர முடியாத அளவுக்குப் பிரபலமற்றவையாக இருப்பதால், இந்த மக்களாட்சி அமைப்பில் இருக்கிற பிரச்சனைகளைக் களைந்து இதை மேலும் மேம்பட்டதாக ஆக்கத் தேவையான மாற்றங்கள் பற்றிப் பேசுவதே நல்லதாகப் படுகிறது. குறிப்பாக, இந்திய மக்களாட்சியில். உலகிலேயே பெரிய மக்களாட்சி அமைப்பு இதுதான் என்றும் அதை இவ்வளவு பாதுகாப்பாக அழிய விடாமல் வைத்திருப்பதே பெரும் சாதனை என்றும் பீற்றிக் கொண்டு இருந்தாலும், கடந்த அறுபதாண்டு கால மக்களாட்சியின் விளைவுகள் உற்சாகமூட்டுவதாக இல்லை. நிச்சயமாக நாம் நிறையச் செய்திருக்கிறோம்; ஆனால், அவை நம் தரத்துக்கு மிக மிகக் குறைவு. எத்தனை முறை சாப்பிட்டிருக்கிறோம் - கடந்த அறுபது ஆண்டுகளில் எத்தனை இரவுகள் தூங்கியிருக்கிறோம் என்பது போன்ற மிக அடிப்படையான புள்ளி விபரங்கள் பேசுவதில் பிரயோசனமில்லை. இவ்வளவு அறிஞர்களையும் நிபுணர்களையும் வைத்துக் கொண்டு, குறைந்த பட்சம்

துரோகிகள், காட்டிக் கொடுத்தல்கள் மற்றும் சகோதர யுத்தம்

படம்
நம் இதிகாசங்கள், திரைப்படங்கள் மற்றும் கதைகள் ஆகிய எல்லாவற்றிலுமே இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. ஒன்று நாயகன்; இன்னொன்று வில்லன். நாயகன் நல்லவன்; வில்லன் கெட்டவன். அவர்கள் இருவரும் எதிரிகள். எதிரி என்பவன் கண்டிப்பாக நமக்கு எதிராகச் செயல்படுபவன் என்பது நமக்கு எப்போதுமே தெரியும். இதிகாசங்களும் கதைகளும் துரோகிகளுக்கும் ஒரு முக்கிய இடம் கொடுத்திருக்கின்றன. துரோகி என்பவன் யார்? எதிரியை விட எந்த வகையில் அவன் வேறுபட்டவன்? எதிரியைப் போலன்றி, துரோகி என்பவன் நம்மில் ஒருவன்; ஏதோவொரு சூழலில் எதிர்பாராத விதமாக நமக்கு எதிராகத் திரும்பி விடுபவன். பாதி வழியில் பாதையை மாற்றிக் கொண்டவன்! அவனும் அதன் பின்பு நம் எதிரி ஆகியிருப்பான். ஆனால், முதலில் அவன் துரோகி; பின்புதான் பிரதான எதிரி ஆகிறான் - எதிரியை விடக் கூடுதல் எதிரி! துரோகிகளை எது அவ்வளவு முக்கியமானவர்கள் ஆக்குகிறது? கதைக்கு எதிர் பாராத திருப்பத்தைக் கொடுப்பவர்கள் அவர்களே. அந்த நிமிடத்திலிருந்து கதையின் போக்கும் திசையும் மாறுகிறது. அதன் பின்பு முற்றிலும் புதியோதோர் அணுகுமுறை - திட்டமிடுதல் - வியூகமமைத்தல் தேவைப் படுகிறது. நமக்கு எதிரியைப் பற்றி அத

மரியாதை - அளவுக்கு மிஞ்சினால்?

படம்
50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததென்று தெரிய வில்லை. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலான என் பணியிட அனுபவத்தில் புரிந்து கொண்டது என்னவென்றால், சக மனிதர்களை மதிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றோர் எல்லையிலா வளர்ச்சி பெறுகிறார்கள். அது போலவேதான் அளவுக்கு அதிகமாக மரியாதை கொடோரும். எந்தத் துறையிலும் வளர்ச்சி என்பது அந்தத் துறை சார்ந்த தொழில் நுட்ப அறிவால் மட்டும் கிடைப்பதில்லை - அது சக மனிதரோடு பழகும் திறம் முதலான பல காரணிகளால் நிர்ணயிக்கப் படுவது - பழகும் திறம்தான் அந்தப் பட்டியலில் முதன்மையாக இருப்பது என்பதெல்லாம் அதிகமானோருக்கு அதிகமான அளவில் வெளிப்படியாகத் தெரிந்து விட்டது இப்போது. பழகும் திறம் என்று சொல்லும் போது, அது மனிதர்களை மதிப்பது மட்டும் ஆகாது.  சரியான முறையில் அவர்களைக் கையாள்வதும் அடங்கும். அதாவது, மனிதர்களுடன் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அதிகபட்ச உழைப்பை அல்லது பங்களிப்பைப் பெறுவது. தேவைப் படும் போது அவர்களைக் கடுமையாக நடத்துவதும் அதில் அடக்கம். சொல்லவே வேண்டியதில்லை - கடுமையாக நடந்து கொள்வதற்காகவோ அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் படும்போத

உயிர்களின் எதிரிகள்

அணு குண்டு வீச்சில் உயிர் பிழைத்த கரப்பான் பூச்சிகளெல்லாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன... தம் எதிரிகளின் முடிவை! எல்லா உயிர்களுக்கும் எதிரிகள் அவர்களே!! பாவிகள் எல்லைக்கு இருபுறமும் இருக்கிறார்கள்!!!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

படம்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண் என் பணியில் கிடைக்கும் சம்பளம். எழுத்து என் வேட்கை. எண் ஈட்டி வருவதும் எழுத்து படைப்பதும் செய்து கொண்டே இருப்பேன். என்னால் முடியும் வரை. எண் என் குடும்பத்துக்காகவும் எனக்காகவும். எழுத்து எனக்காக மட்டும். என் சமூகத்துக்காகவும் எண் ஈட்டி வரும் ஆற்றல் கிட்டுமானால், என் சமூகத்துக்காகவும் என் எழுத்து பயன்பட முடியுமானால் அதை விடப் பேருவகை ஒன்று இருக்க முடியாதெனக்கு. என் பிறவிப் பெரும்பயன் எய்தி விட்டதாகக் கூடக் கொள்ளலாம். இல்லையேல், என் குடும்பத்துக்கும் எனக்குமாகவாவது எண் ஈட்டிக் கொண்டு வருவேன்; எனக்கு மட்டுமாகவாவது எழுதிக் கொண்டிருப்பேன். சம்பளம் எவ்வளவு வந்தாலும் பற்றாதுதான். சமாளித்து வென்றே தீர வேண்டும். எழுதி எழுதி பூமியின் சுழற்சிப் பாதையை மாற்றிய எழுத்தாளர் எவருமில்லைதான். சினிமா பார்த்துத் திருந்தி விடுகிற நல்லவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிற நம் மண்ணில் எழுத்தைப் படித்துப் பயனடைகிற பெருமக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எழுத்து படிப்பவரையும் எழுதுபவரையும் சிந்தனையைப் பட்டை தீட்டப் பணிக்கிறது. என்னுடையது அதற்கும் பயன்படாத எழுத்தாகுமானால் குறை

அதீத உற்றுநோக்கல்க் கோளாறு! (OBSESSIVE OBSERVATION DISORDER!)

படம்
கவனித்தல் அல்லது உற்றுநோக்கல் என்பது மனிதனாகப் பிறந்த நாம் எல்லோரும் தினம் தோறும் செய்யும் ஒன்று. மற்றவர்களை விட பிரச்சனைகளை முன் கூட்டியே கணிக்கத் தெரிந்ததாலும் மறைமுகச் செய்திகளைப் புரிந்து கொள்ள முடிவதாலும் அதை அதிகமாகச் செய்வோர் அறிவாளிகளாகக் கருதப் படுகிறார்கள் (அடுத்தவர்களால் என்பதை விடத் தாமே நினைத்துக் கொள்வதுதான் அதிகம்!). அதற்கு அறிவியல் மற்றும் தத்துவம் இரண்டிலுமே சிறந்ததோர் இடமிருக்கிறது.  இன்று நான் உங்களோடு உரையாட விரும்புவது அதன் பின்னால் இருக்கும் அறிவியல் பற்றியோ அது பற்றிய தத்துவம் பற்றியோ அல்லது அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றியோ அல்ல. அதை அளவுக்கு அதிகமாகச் செய்வதில் உள்ள பிரச்சனைகள் பற்றி. அதாவது அதீத கவனிப்பில் உள்ள பிரச்சனைகள் பற்றி. நானே இதன் பலியாகி இருக்கிறேன் பலமுறை. நான் உற்று நோக்கிய வரையில் (நான் செய்வது எல்லாமே உற்று நோக்கல் என்றுதான் சொல்லப் பட வேண்டும்; பார்த்ததாகவோ கேட்டதாகவோ சொல்லப் படக் கூடாது; ஏனென்றால் நல்ல உற்று நோக்கி என்று சொல்லப் படுவதைப் பெருமையாகவும் உயர்வாகவும் கருதுகிறேன்!) இதில் மூன்று பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன. நான் உற்று ந

வேட்டிதான் கிழிகிறது

நீ என்னைச் சந்தேகிக்கும் போதும் எனக்கே அவமானம்! நான் உன்னைச் சந்தேகிப்பதாக நீ குற்றம் சாட்டும் போதும் எனக்கே அவமானம்!

இரயில்வே அமைச்சரானதும் விபத்தா?!

படம்
தொடர்ந்து நிகழும் இரயில் விபத்துகள் நாட்டை உலுக்கி எடுக்கின்றன. இப்படியே தொடர்ந்தால் , அத்தகைய செய்திகளைக் கேட்டுக் கேட்டு நமக்கு மனம்   மரத்துப் போகலாம். இன்னும் பொறுப்பான செயல்பாடுகள் மற்றும் சிறப்பான சட்டங்கள் மூலம் இவை தவிர்க்கப் படலாம் என்பது என் உறுதியான நம்பிக்கை. 86% இரயில் விபத்துகள்   மனிதத் தவறுகளால் நிகழ்பவை என்றொரு இரயில்வே புள்ளி விபரம் அதை மேலும் உறுதிப் படுத்துகிறது. இன்னொரு புறம், அவையெல்லாமே மனிதத் தவறுகள் அல்ல இயந்திரக் கோளாறுகள் என்று ஒருவர் விளக்கம் அளிக்கிறார். நம்முடைய இயந்திரங்கள் மற்றும் மனிதர்கள் இரண்டுமே மற்ற நாடுகளில் இருப்பதை விட சிறப்பாக இல்லை என்பது நன்கறிந்த உண்மை ஆகி விட்டது. எனவே, உண்மையில் எது இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று தெரியவில்லை. எது எப்படியிருப்பினும், தெளிவாக வெளிவரும் உண்மை என்னவென்றால், உலகின் மற்ற பகுதிகள் போல் இந்தியாவில் மனித உயிர்கள் மதிக்கப்படுவதில்லை என்பது. அளவுக்கதிகமான எண்ணிக்கை அதற்கொரு காரணமாக இருக்கலாம். இதுவரை இந்தியாவில் நடந்த இரயில் விபத்துகளைப் பட்டியலிட்டு விக்கிபீடியாவில் (WIKIPEDIA) ஒரு தனிப் பக்கமே உள்ளது

அயோத்தி: நீதி மன்றத்திலிருந்து மக்கள் மன்றத்திற்கு...

படம்
அயோத்திப் பிரச்சனைக்கு இவ்வளவு எளிதான ஒரு தீர்வு இருப்பதாக நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஓரிரு சாரார் இதிலும் இன்பமடையவில்லை என்றபோதிலும் பிரச்சனைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொடுத்தல் என்பது 'எல்லோருக்கும் இன்பம்' என்கிற மாதிரியான தீர்வு. முதல் முறைத் தீர்ப்பைக் கேட்டவுடன் எனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, பிரச்சனை இரு சமூகங்களுக்கு இடையில் எனும் போது "அது யார் மூவர்?" என்பது. சிலர் சொன்னார்கள் - "மூன்றில் ஒரு பகுதி இந்துக்களுக்கு, இன்னொரு பகுதி முஸ்லிம்களுக்கு, மற்றொன்று நிர்மோஹி அகாராவுக்கு" என்று. வேறு சிலர் சொன்னார்கள் - "மூன்றில் இரண்டு பகுதிகள் இந்துக்களுக்கு; ஒரு பகுதி முஸ்லிம்களுக்கு" என்று. கடந்த சில நாட்களில் நான் படித்த பத்து-இருபது கட்டுரைகளில் எந்தக் கட்டுரையிலும் நிர்மோஹி அகரா என்பது யார் என்பது தெளிவாக விளக்கப் பட வில்லை. வழக்கம் போல, அதைப் புரிந்து கொள்ள இணையத்திடம்தான் போக வேண்டியிருந்தது.  அதன் பின்பும், அவர்கள் ஏன் மூன்றாவது குழுவாக இருக்க வேண்டும்; ஏன் இந்துக்களிலேயே ஒரு பகுதியாக இருக்கக் கூடாது என்ற தெளிவில்லை.

உயர் தனிச் செம்மொழி?!

படம்
பிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது? தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு