இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்

  “உங்களுக்கு நன்றி” என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே இருக்கையை விட்டு எழுந்தேன். நேர்காணல்களுக்கென்றே வடிவமைக்கப்பட்ட அறை போல் இருக்கிறது. மொத்தமே மூன்று-நான்கு பேருக்கு மேல் கொள்ளாத அறை. அவர் புன்னகையோடு எழுந்து நின்று அவரது வலது கையை நீட்டிக் குலுக்கினார். புன்னகை எல்லாம் நல்லபடி முடிந்தது என்றே சொன்னது. திரும்பி மெதுவாக அறையின் கதவைத் திறந்து வெளியேறினேன். உள்ளே செல்லும் போது, “வாழ்த்துக்கள்” என்று புன்னகைத்துச் சொன்ன அதே அழகான மாநிறப் பெண் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். தமிழ்ப் பெண்ணாக இருக்க வேண்டும். பெங்களூரில் இருக்கும் மாநிறப் பெண்கள் எல்லோருமே தமிழ்ப் பெண்கள் என்றுதான் தோன்றுகிறது. அவளின் வாழ்த்தே ஒரு நல்ல சகுணமாகத்தான் இருந்தது. எல்லா நிறுவனங்களிலுமா நேர்காணலுக்கு உள் நுழைவோருக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பிவைக்கப் போகிறார்கள். இப்படியான ஒரு நிறுவனத்தில்தான் பணி புரிய வேண்டும். இப்போதும் புன்னகைத்தாள். “எப்படிப் போனது?” என்றாள். இவ்வளவு நன்றாகப் பேசுகிறாளே! எல்லோரிடமும் இப்படித்தான் பேசுவாளா? வருகிற எல்லோரிடமும் இப்படித்தான் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருப்பார்களோ! “

ஷிரின் எபாடி - நேர்காணல்

படம்
  https://www.972mag.com/iran-women-protests-shirin-ebadi/   ஈரானுக்கு மக்களாட்சி பெண்கள் மூலம் வந்துசேரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி, ஈரானில் நடைபெறும் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் அங்கு நடைபெறும் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சியின் தொடக்கத்துக்கான முன்னறிவிப்பு என்கிறார். மூலம்: ஓர்லி நோய் | அக்டோபர் 6, 2022 செப்டம்பர் 29, 2022 அன்று, மெல்போர்னில், ஈரானியப் போராட்டங்களுக்குத் துணை நிற்கும் வகையில் ஒரே வாரத்தில் இரண்டாவதாக இன்னொரு பேரணிக்காக மக்கள் ஒன்று கூடினார்கள். (Matt Hrkac/CC BY 2.0) இந்த கட்டுரை லோக்கல் கால் (Local Call) இதழுடன் இணைந்து வெளியிடப்பட்டது. சமீப வாரங்களில் ஈரானில் பொங்கி எழுந்துகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் இருந்து வெள்ளம் போல் வெளிவரும் புகைப்படங்கள், காணொளிகளோடு சேர்ந்து எண்ணற்ற கொத்துக்குறிகளும் (hashtags) வந்துள்ளன. அவற்றுள் முதன்மையானது, #மஹ்சா_அமினி — 22 வயதான குர்தியப் பெண்ணின் பாரசீகப் பெயர் (அவரது உண்மையான குர்தியப் பெயர் ஜினா/ஜினா அமினி), அவர் செப்டம்பர் 14 அன்று "முறையற்ற வகையில் ஹிஜாப்" அணிந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்