மேகத்தின் கவலை

பூமியைப் பொருத்தமட்டில்
சூரியனைப் போல்
சந்திரனைப் போல்
வெள்ளிகளைப் போல்
நாங்களும் வானத்திலிருப்பதால்
எம்மினமும் வானவ இனம்தானாம்

வானவ உறவுகள்
சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
வெள்ளிகளுக்குமோ
எம் மீது
வேறுவிதமான வருத்தம்

"பெயருக்குத்தான்
வானில் இருப்பதாகச்
சொல்லிக் கொள்வதெல்லாம்
இருப்பதோ
எப்போதும் பூமிக்கருகில்தான்...
பின்னே
அதெப்படி
நம்ம கூட்டம் என்று
ஏற்றுக் கொள்ள முடியும்?!"

* அறிவியலும் பிரிவியலும் கலந்த பொரியல் ஒன்று வைக்க முயன்ற வினை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி