தலைவன்

அகநானூற்றுத் தலைவன்
உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான்
கேள்வி கேட்காமல் தன்னையே கொடுத்து ஏமாந்தாள் தலைவி

வீட்டைவிட்டு வெளியே வந்ததும்
அகமொன்று வைத்துப் புறமொன்று பேசாத
புறநானூற்றுத் தலைவன்
இங்கும் அதே போல்
உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான்
கேள்வி கேட்காமல் மண்ணைக் கொடுத்து ஏமாந்தான் தொண்டன்

கொடுப்பேன் என்று சொல்லாமல் கொடுத்தவர்
என்றோ ஒருநாள் புரட்டப்படும் வரலாறானார்

கொடுப்பேன் என்று சொல்ல மட்டும் செய்தவர்
வரலாற்றையும் மாற்றி எழுதவல்ல தலைவரானார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி