கரிசல் பூமி

தமிழ் நாடு சாதிக் கலவரங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 98-இல் எழுதியது...

பாடுபட்டாலும்
பலனை எதிர்பார்க்க முடியாத
கீதாவுபதேச வாழ்க்கை

வெயிலில் காய்ந்து
விதைத்து உழுது
விளைச்சல் ரசித்த
உழைப்பின் பயனை
இன்றுவரை அடையவில்லை

இயற்கையை நம்பி
ஏமாந்த விரக்தியில்
விவரந் தெரிந்தவர்கள்
விவசாயத்துக்கு டாட்டாக் காட்டிவிட்டு
வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்
நகரங்களை நோக்கி

வியாபாரம் செய்தால்
வெளக்கு வீட்டு வேலு போல
அடுத்த வருசத் திருவிழாவுக்காவது
அம்பாசிடரில் வரலாமென்ற
ஆசைக் கனவுகளோடு

பருவமழை பொய்த்துப்
பஞ்சத்தின் பிடியில் தவிக்கும்
பாவப்பட்ட சனங்களுக்கு
புகலிடமுமில்லை
பொழுதுபோக்குமில்லை

கம்மாக்கரை ஆலமரத்துக்கும்
போரடித்து விட்டது
இவர்களின்
புலம்பல்களைக் கேட்டதில்

படித்து முடித்துப்
பட்டம் விடும்
வேலையில்லா இளசுகளின்
வழிகாட்டுதலில்
கரிசல் பூமி...
கலவர பூமியாய்!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி