கீதாவுபதேசம்
படிக்க மட்டுமே செய்கிற பலர் நினைக்கிறார்கள்
கடமையைச் செய்து
பலனை எதிர் பாராமல் போவது
பைத்தியக்காரத்தனம் என்று
அதெல்லாம் படிக்காமலேயே
அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பலர்
அவர்கள்தாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
அதனால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
அவர்களால்தான் சோம்பேறிகளும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்
நிரம்ப விவரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள்
தினம் தினம் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள்
கடமையை என்னவென்று கூடப் புரிய முயலாமல்
பலனை அடைவதற்கான மற்ற எல்லா ஏற்பாடுகளையும்
சிறப்பாகச் செய்து கொண்டு
முன்னேறிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள்
ஏமாந்து கொண்டிருப்பவர்கள்
தன்னையே ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள்
ஏற்பாடுகள் மட்டுமே வாழ்வித்து விடா
என்பதை உணரும் போது
கீதை புரியும்
ஆனால் வாழ்க்கை முடிந்திருக்கும்
பலனை எதிர்பாராத பைத்தியக்காரருக்கு
எதிரே பார்த்திராத பலன் வந்து சேரும்போது
கீதை புரியும்
அத்தோடு வாழ்க்கை நிறைவடையும்!
It really touches my heart. Well said Bharathi.
பதிலளிநீக்குVery nice.
Regards
Nandagopal
That's great! Thanks Nandhu!!
பதிலளிநீக்கு