தேர்தல் நாள்

நாடு மதிச்சதில்லை
வீடு மதிச்சதில்லை
தாய் மதிச்சதில்லை
சேய் மதிச்சதில்லை
நாய் கூட மதிச்சதில்லை
நாலு வாரம் முன்பு வரை

போன ஒரு மாசம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்
ஒரே திருவிழாக் கூத்தாட்டம்

வெள்ளை வேட்டிக்காரரெல்லாம்
விரட்டி விரட்டி மதிச்சார்கள்
வீடு தேடி வந்தார்கள்

கரை வேட்டிக்காரரெல்லாம்
காசு கொடுத்து மதிச்சார்கள்
காலில் கூட விழுந்தார்கள்

இம்புட்டு நாளாக
எனக்கே தெரியவில்லை
எம்புட்டுப் பெரிய ஆளு
இந்த நாட்டுக்கு நானென்று

போதை இறங்கும் முன்பே
பேதை ஒருத்தன் சொல்லுகிறான்
இன்றோடு முடிந்ததெல்லாம்
இனி திரும்பவும் நான் செல்லாக்காசாம்

ஏப்பு!
அடுத்த தேர்தலெப்போ?
அதைக் கேட்டுக் கொஞ்சம் சொல்லுங்கப்பு...

அஞ்சு வருசம் காக்கணுமா?
அதுக்கிடையில் வாய்ப்பிருக்கா?

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி