அரசு அலுவலகம்

தமிழ்ல போட்ற எல்லாத்தையும் இங்கிலீஷ்ல போட முடியாது. ஆனா இங்கிலீஷ்ல போட்ற எல்லாத்தையும் தமிழ்ல போடலாமே! அதனால... இதையும் போட்ருவோம்னு ஒரு முடிவு.

கொஞ்சநாள் முன்னாடி, சில ஆவணங்கள் கொடுப்பதற்காக ஒரு தனியார் நிறுவனத்துக்குப் போயிருந்தேன்.

அங்க இருந்த ஆள், கனிவான சிரிப்போடு, "சார், இது ஒரே பேப்பர்ல முன்னும் பின்னும் பிரிண்ட் பண்ணக் கூடாது. பரவால்ல. குடுங்க" என்றார்.

ஆனாலும், "இப்பிடிப் பிரிண்ட் பண்ணக் கூடாதுன்னு எந்த விதிமுறைல இருக்குன்னு காட்ட முடியுமா?"-ன்னு கேட்டுத் திமுர் பண்ணேன்.

விதி வலியது இல்லையா? இன்னைக்கு ஓர் அரசு அலுவலகத்துக்கு ஒரு வேலையாப் போனேன்.

அங்க இருந்த ஆள் ரெம்பக் கோவமாப் பேசுனாப்ல, "ஹலோ, இப்டிலாம் முன்னும் பின்னுமா ஒரே பேப்பர்ல பிரிண்ட் பண்ணக் கூடாது. போய்த் தனித் தனிப் பேப்பேர்ல பிரிண்ட் பண்ணிக்கிட்டு வாங்க".

"சரி, சார்"-னு ரெம்பப் பவ்யமாச் சொல்லிட்டு (இதுல முக்கியமான மேட்டர் என்னன்னா, அவர் சாரெல்லாம் கெடையாது, அங்க இருக்கிற அல்லக்கை, அவ்வளவுதான்), குடுகுடுன்னு கொயந்த மாதிரி பிரிண்டிங் கடைக்குப் போனேன். அங்க போய், "இது கூடத் தெரியாதா ஒனக்கு?"-ன்னு அங்க இருந்த பையனத் திட்டீட்டு, தனித்தனிப் பேப்பேர்ல பிரிண்ட் பண்ணி வாங்கிக்கிட்டுத் திரும்பவும் அரசு அலுவலகத்துக்கு ஓடோடி வந்தேன்.

இப்ப என்னடான்னா அதே எடத்துல வேற ஓர் ஆள் ஒக்காந்திருந்தாப்ல. அவரும் அதே மாதிரி செயற்கையான ஒரு கோவக்கார மூஞ்சியோடயே பேசுனாரு. "ஹலோ, யாரு ஒங்கள இப்பிடித் தனித் தனிப் பேப்பேர்ல பிரிண்ட் பண்ணச் சொன்னது? மொறைப்படி ஒரே பேப்பேர்ல முன்னும் பின்னுமாப் பிரிண்ட் பண்ணனும். தெர்லன்னாக் கேளுங்கய்யா"-ன்னார்.

நானும் ரெம்பப் பவ்யமா, "சரி, சார்"-னுட்டுக் கையில இருந்த பழைய பிரிண்ட்-அவுட்டக் குடுத்தேன். அதுதான் ஒரே பேப்பர்ல முன்னும் பின்னும் பிரிண்ட் பண்ணதாச்சே! (மனசுக்குள்ள இப்ப என்ன பண்ணுவன்னு நக்கல் வேற!). இதுக்கு எடையில ஒரு பாவமும் அறியாத பிரிண்டிங் கடைப் பையனுக்காக வருத்தம் வேறு பட்டுக் கொண்டேன். அவனுக்கு எங்க தெரியப் போகுது அரசு அலுவலகம்னா எப்பிடி வேலை நடக்கும்னு.

தலைவர் இன்னும் கோவமாவே இருக்குற மாதிரி இருந்தது. எதுக்குன்னுதான் புர்ல. "முன்னும் பின்னும் ஒரே பேப்பர்ல அடிச்சது சரிதான். இந்த பார்மட் ஒனக்கு யாரு குடுத்தான்னு சொல்லு. இது மொறைப்படி இல்ல"-ன்னு அப்டியே லெப்ட்ல திரும்பி ரைட்டுல ஒரு சிக்சர் அடிச்சார். (இப்ப என்ன பண்ணுவன்னு சிரிச்சுக்கிட்டே கேக்குகிற மாதிரி இருந்துச்சு)

இப்ப என்ன பண்ணலாம்??? எந்த விதிமுறைல இருக்குன்னு கேள்வி கேட்டுப் பாக்கலாமா???

#கதைபாதி #வதைபாதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி