அற்புதமது

எல்லோரும்
அதை
அருமை
அற்புதம்
என்றார்கள்

அதை
பார்த்திராதவர்கள்
அனுபவித்திராதவர்கள்
பாவம் செய்திருக்க வேண்டும்
சபிக்கப்பட்டவர்களாயிருக்கக் கூடும்
என்றார்கள்

அப்படித்தான் இருக்குமோ என்றஞ்சி
அதைப் பொய்ப்பிக்க விரும்பி
நானும் சென்று பார்த்தேன்
அனுபவித்தேன்

அப்படியொன்றும்
அருமையும்
அற்புதமும்
அதில் இருப்பது போலப் படவில்லை எனக்கு

ஆனாலும்
பார்க்காததற்கே
பாவம் செய்திருக்க வேண்டும்
சபிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றவர்கள்
பார்த்துவிட்டு
அருமை மறுத்தால்
என்னவெல்லாம் சொல்வார்களோ

அதற்குப் பின்னே
ஆமாம்
அருமைதான்
அற்புதந்தான்
என்று
மாற்றிச் சொல்வதற்குப் பதில்
இப்போதே சொல்லிவிடலாம்

ஆகா!
என்னே அருமை அது!
அற்புதமது!!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி