விதி

இரண்டு கண்களுமிழந்த
மூன்று குழந்தைகள் கதறிக் கொண்டிருக்கின்றன

முதற் குழந்தையின் தந்தை
தன் கண்ணொன்றைக் கழற்றி வைத்து
இதனை என் பிள்ளைக்கு இப்போதே பொருத்துங்கள் என்று கதறுகிறான்

தன்னால்
தன் தந்தை கண்ணிழக்க நேரிடுகிறதே என்று கதறுகிறது குழந்தையும்

தந்தையில்லாத
இரண்டாம் குழந்தையும் கதறுகிறது

தனக்கும்
இப்படிக் கண்ணைக் கழற்றிக் கொடுக்க
ஒரு தந்தையில்லையே என்று

விதியை நொந்து
ஒன்றும் பேசாமல்
ஊமைக் கொட்டானாய் நிற்கும் தன் தந்தை
என்னதான் எண்ணிக் கொண்டிருக்கிறானோ என்று
புரிந்து கொள்ள முடியாத மூன்றாம் குழந்தையும் கதறுகிறது

இதற்குத் தந்தையில்லாமலே இருந்திருக்கலாமே என்று தலையிலடித்துக் கொண்டு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி