இளமையா? முதுமையா?

வாஜ்பாய், குஜ்ரால் - இது போன்று எத்தனையோ பெரும் தலைவர்கள் இளமைக் காலங்களில் கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்பு மனம் மாறியவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

"இளமைப் பருவம் உணர்ச்சி மிக்க பருவம். அந்த வயதில் அதிரடியான முடிவெடுப்பதும், தீவிரமான செயல் வெறியும் இயல்பே. ஆனால், முதியவர்கள்தாம் நிதானமாகச் சிந்தித்து, தெளிவான முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள். வாழ்வின் நெளிவு சுளிவுகளை அறிந்தவர்கள். மனம் பக்குவப் பட்டவர்கள்!" என்றொரு கூட்டம் கூறுகிறது. ஆனால், என்னைப் பொருத்த மட்டில், "மனம் பக்குவப் பட்டு விட்டது!" என்பதன் பொருள் , "மனம் மழுங்கி விட்டது!" என்பதே.

சாக்கடைச் சமூகத்தின் நாற்றத்தைப் போக்க நினைக்கும் இளைஞன் ஒருவன், சுயநலச் சிந்தனைகளிலும் அவநம்பிக்கையிலும் சிக்கித் தானும் சாக்கடையோடு ஐக்கியமாகி விடுகிற முதுமைத் தனம் பக்குவத்தாலா? மழுங்கலாலா?

"இருபது வயதில் கம்யூனிஸ்டாக இருப்பவனும் ஐம்பது வயதில் கம்யூனிசத்தை வெறுப்பவனுமே விபரமானவன்!" என்கிற மாதிரி யாரோ சொன்னதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். காரணம்? இருபது வயதில் தீமைகளைக் கண்டு கொதிப்படையும் மனம், ஐம்பது வயதில் சாந்தமாகி விடுகிறது. அது பக்குவத்தாலா? அது போன்ற பிரச்சனைகளை அளவில்லாமல் பார்த்துப் பார்த்து ஏற்படும் மழுங்கலா?

எனவே, சமூக மாற்றத்துக்கான பொறுப்பை ஏற்க வேண்டியது - வீரியமற்ற பெரியவர்கள் அல்லர்; அவலங்களைக் கண்டு அழும் - மனிதம் வற்றி விடாத இளமைப் பருவத்துக் காளைகளே அதைச் செய்ய வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கின்றன.

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்