பாதுகாப்பு

அன்னியர் நிறைந்த தொடர்வண்டியில்
இரவெல்லாம் 
தனியாகப் பயணிக்கப் போகும்
மகளின் பாதுகாப்பு பற்றி
எப்போதும் போல்
கவலையில் ஆழ்ந்திருந்தார் தந்தை

வண்டியேறும் வேளை
வந்தேறிய தோழனின் வருகை
எதிர்பாராமல் நிகழ்ந்தது எனினும்
மகளுக்குப் பாதுகாப்புக் கூட்டியிருப்பதாக எண்ணி
வழக்கத்துக்கு மாறான நிம்மதியோடு
வழியனுப்பி வைக்க உதவியது

வழியனுப்பி விட்டுத் திரும்புகையில்தான்
புதிதாக ஏதோ உரைத்தது

அன்னியர்களோடு பயணித்த நாட்களைவிட
அதிகம் பயப்பட வேண்டியது
இன்றுதானோ?!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி