வலியின் வலி

வலிபடுதலினும் பெருவலியல்லதான்

வலிபடுதலை
அருகிலிருந்து காண்தலும்
காணச் சகியாமல் துடித்தலும்

படுபவருக்கு
படுவலி
உடல்வலி

பக்கத்திலிருந்து பார்ப்பவருக்கு?

வலியின் வலியை
உணர்ந்திடப் போராடும் பாடும்
வலி போக்க முடியாத வழிப்போக்கனாக
உடன் கிடந்து வாடும் ஆற்றாமையும்
உயிர்வலி அல்லவா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி