மேலும் கீழும்

பால்யத்தில்
பலமுறை
பேரூந்துகளினுள் இருந்து எட்டிப் பார்த்த
அதே தொடர்வண்டிப் பாலம்
அதன் மேல் செல்லும்
அதே தொடர்வண்டி 

அதன்பின்
பல முறை 
அதே இடத்தை
அதே பாலத்தின் மேல்
அதே தொடர்வண்டியின்
உள் அமர்ந்து கடக்கையில்
பாலத்தின் கீழ் நிற்கும்
அதே பேரூந்தைப் பார்க்கையில்
ஏதோ ஒரு புதிய உணர்வு!

பின்பொரு நாள்
மீண்டும் ஒருமுறை
அதே பேரூந்துக்குள் அமர்ந்து
அதே பாலத்தின் மேல் போகும்
அதே தொடர்வண்டியைப் பார்க்கையில்

காலமும் வாழ்க்கையும்
ஏதோ சொல்ல முயல்கின்றன
என்பது மட்டுமே புரிகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி