நாய்கள் மட்டுமா?
ஊரெல்லாம் வெள்ளம் போனாலும்
நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறீர்களே
உங்களுக்கு நன்றாகத் தெரியுமா?
நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறீர்களே
உங்களுக்கு நன்றாகத் தெரியுமா?
அங்கே
நக்கிக் குடித்துக் கொண்டிருப்பவை அனைத்தும்
நாய்கள்தாம் என்று
நக்கிக் குடித்துக் கொண்டிருப்பவை அனைத்தும்
நாய்கள்தாம் என்று
நக்கிக் குடிப்பதனாலேயே
அவை நாய்கள்தாம் என்று
உறுதியாகச் சொல்கிறவர்களே!
அவை நாய்கள்தாம் என்று
உறுதியாகச் சொல்கிறவர்களே!
ஒருமுறை உற்றுப் பாருங்கள்
அவற்றுள்
பசித்தாலும் புல் தின்ன மாட்டோம்
என்று சொல்லிக் கொள்ளும்
புலிகளும் சிங்கங்களும்கூட
நாய்களைவிட
நன்றாகவே நக்கிக் குடித்துக் கொண்டிருக்கின்றன!
அவற்றுள்
பசித்தாலும் புல் தின்ன மாட்டோம்
என்று சொல்லிக் கொள்ளும்
புலிகளும் சிங்கங்களும்கூட
நாய்களைவிட
நன்றாகவே நக்கிக் குடித்துக் கொண்டிருக்கின்றன!
கருத்துகள்
கருத்துரையிடுக