இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்

கடந்த இருபது ஆண்டுகளில் ஐந்து முறை இழுத்து மூடப்பட்ட பின்னும் தொடரும் ஸ்டெர்லைட் காப்பரின் உய்வு, இந்தியாவின் நெளிவுசுளிவான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டுள்ளது. இப்போதைக்கு. எதிர்பார்த்தபடியே, ஒரு மாசுபடுத்தும் தொழிலுக்கு எதிரான 23 ஆண்டு காலப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர், அது ஒரு மாபெரும் மனித விலை கொடுத்துப் பெறப்பட்டது என்றாலும் கூட. ஆனால் தமிழகத்தின் இந்தக் கடற்கரை நகரத்தில் ஓர் அமைதியான கலக்கம் இருக்கிறது. இத்தோடு போராட்டத்தை நிறுத்திவிட வேண்டுமோ என்று ஓர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. 13 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட மே 22 காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் அம்மக்களிடம் பேசிப் பார்க்கும் போது அந்த உணர்வு நன்றாகப் புலப்படுகிறது. அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா லிமிடெடுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உற்பத்தி நிறுவனமான இந்த ஆலையை மூடக்கோரி, சுமார் 15,000 மக்கள் தெருக்களுக்கு வந்திருந்தனர். தாமிர உருக்கு எ

கலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும்

கலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும் கடந்த ஜூன் மாத இதழைக் கலைஞர் சிறப்பிதழாகக் கொண்டு வந்த இதழ் ஒன்றுக்கு அவரைப் பற்றிய நல்லவைகளைப் பற்றி மட்டுமே எழுதுமாறு ஒரு கோரிக்கை வந்தது. அது நமக்கு அவ்வளவு எளிதில்லை. மூச்சுப் பிடித்து முக்கித் தக்கி எழுதி அனுப்பியதையும், "இதுதான் ஒங்க ஊர்ல நல்லபடியா எழுதுறதா?" என்று கேட்டு ஒதுக்கிவைத்துவிட்டார்கள். இயல்பிலேயே திராவிட அரசியல் மீது பெரிதாக ஈர்ப்பு இல்லை என்றபோதும், கண்ணை மூடிக்கொண்டு அவர்களை நிராகரிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எல்லோருக்கும் தன் பக்க நியாயத்தை எடுத்துவைக்க சட்டம் இடம் கொடுப்பது போல், அரசியலிலுமே கூட அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் இன்று போன்ற ஒரு நாளில். * கருணாநிதி என்றால் இப்படித்தான் என்று நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிம்பம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் அது பெரும்பாலும் மிகவும் எதிர்மறையானதாகவே இருக்கிறது. அவர்கள் பார்த்ததை வைத்து அவர்கள் சில முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள். அதில் தவறும் இல்லை. ஈழப் போரின் போது அவரின் செயல்பாடுகள், ஒவ்வொருவராகக் குடும்ப உறுப்பினர்களை உள்ளே கொண்டுவந்து கட

அற்புதமது

எல்லோரும் அதை அருமை அற்புதம் என்றார்கள் அதை பார்த்திராதவர்கள் அனுபவித்திராதவர்கள் பாவம் செய்திருக்க வேண்டும் சபிக்கப்பட்டவர்களாயிருக்கக் கூடும் என்றார்கள் அப்படித்தான் இருக்குமோ என்றஞ்சி அதைப் பொய்ப்பிக்க விரும்பி நானும் சென்று பார்த்தேன் அனுபவித்தேன் அப்படியொன்றும் அருமையும் அற்புதமும் அதில் இருப்பது போலப் படவில்லை எனக்கு ஆனாலும் பார்க்காததற்கே பாவம் செய்திருக்க வேண்டும் சபிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றவர்கள் பார்த்துவிட்டு அருமை மறுத்தால் என்னவெல்லாம் சொல்வார்களோ அதற்குப் பின்னே ஆமாம் அருமைதான் அற்புதந்தான் என்று மாற்றிச் சொல்வதற்குப் பதில் இப்போதே சொல்லிவிடலாம் ஆகா! என்னே அருமை அது! அற்புதமது!!