இடுகைகள்

ஆகஸ்ட், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐ.மு.கூ-2: தேறும் அமைச்சர்கள்

படம்
எல்லாக் கட்சிகளிலும் உள்ள பிடித்த தலைவர்கள் பற்றி எழுதலாம் என்றுதான் எண்ணினேன் முதலில். இடுகையின் அளவைச் சிறிதாக்கிக் கொள்ள வேண்டி ஆளும் கூட்டணியின் முக்கியக் கட்சியான காங்கிரசின் முக்கியத் தலைகள் பற்றி மட்டும் பேசலாம் என நினைக்கிறேன் இவ்விடுகையில். பிறிதொரு நாளில் மற்ற கட்சிகளின் தலைகள் பற்றியும் பேசலாம் கண்டிப்பாக. சரி, கேள்விக்கு வருவோம். இப்போதைய அரசில் உள்ளோரில் தேறுவது யார் யார்? தேறுவது போலத் தெரிந்தாலும் தேறாதோர் யார்? அவர்களைப் பற்றி மட்டும் இவ்விடுகையில் பேசுவோம். மற்றோரை விட்டு விடலாம். அவர்கள் யாவரும் சராசரிகள் அல்லது பெரிதாக நம்முடைய கவனம் தேவையில்லாதவர்கள். வெறும் அரசியல்வாதிகள்; தலைவர்கள் அல்லர். உங்கள் கருத்துரைகளைப் பொறுத்து இதைத் திருத்தவும் தயாராக இருக்கிறேன். சொல்லவே வேண்டியதில்லை. முதலில் வருவது பிரணாப் முகர்ஜி. அவர் ஒரு சகலகலா வல்லவர். அவருடைய சமகாலத்தவர்களில் இவர் ஒருவர்தான் இன்றும் உருப்படியாக நிலைத்திருப்பவர். அவருடைய சமகாலத்தோர் என்று நான் சொல்வது அர்ஜுன் சிங்குகள், என். டி. திவாரிகள், சிவராஜ் பாட்டில்கள், நட்வர் சிங்குகள் போன்றோர். இவர் அடுத்த

மொழியை நிறையப் பெயர்க்க விருப்பம்

படம்
எல்லோருக்கும் போல எனக்கும் பல பேராசைகள் உண்டு. அதில் ஒன்று பிற்காலத்தில் (கண்டிப்பாக இப்போது இல்லை) அரசியலில் நுழைய வேண்டும். நிச்சயமாக என் வாழ் நாளில் ஒரு நாள் நம் அரசியல் இன்று இருப்பதை விட ஓரளவாவது சிறப்பாக இருக்கும் என்ற ஒரு மகா நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு முன்னால் பின்னால் அருகில் உட்கார்ந்து இருக்கிற யாருக்கும் அந்த நம்பிக்கையில் நம்பிக்கை இருப்பது போல் தெரியவில்லை. அதற்கும் நியாயம் இருக்கிறது. ஒரு வேளை அவர்கள் பொய்ப்பிக்கப் பட்டு நான் நினைப்பது போல ஆங்காங்கே சில நல்லவர்களும் கண்ணில் படும் அளவுக்கு ஒரு மாற்றம் வருமேயானால், தனக்கும் தன்னைச் சார்ந்த குடும்பத்துக்கும் அதற்கடுத்த சில வட்டங்களுக்கும் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகள் அனைத்தையும் முடித்து விட்டு, சிறிய அளவில் ஏதாவது செய்ய முயலலாம் என்றோர் ஆசை. இப்போதே கையில் இருப்பதை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு இறங்கலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அப்படி இறங்கியோர் யாவரும் தத்தம் தனி மனித, குடும்பக் கடமைகளைச் செய்யப் பிற்காலத்தில் அரசியலைச் சாரவேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். அப்படித்தான் இதுவரை பெரும்பாலும் நடந்தி

இடது, வலது மற்றும் நடுவுலது!

படம்
இன்றைய அரசியலில் எவ்வளவுதான் செல்லாக்காசாகி விட்டார்கள் என்றபோதிலும், ஓர் இடதுசாரிக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து விட்டதால் அவர்கள் மீதான ஈர்ப்பு ஒரு முனையில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. பின்னணி நம்மைப் பெரும்பாலும் குருடாக்கி விடுகிறது. அவர்களின் குறைகளையெல்லாம் லாவகமாக மறக்கடிக்கச் செய்து (அல்லது மறைக்க வைத்து) நிறைகளை மட்டும் பெரிதாக்கிப் பேசித் திரிய வைக்கிறது. பிரச்சார நெடி தாங்காமல் சுற்றியிருப்போர் முகம் சுழித்தால்கூட அதைப் பொருட்படுத்தாமல் நம் விருப்பு வெறுப்புகளில் பிடிவாதம் காட்ட வைக்கிறது. நம்முடைய அனைத்துச் சிந்தனைகளிலும் பேச்சுகளிலும் அது பிரதிபலிக்கிறது. ஆனாலும் சமீப காலங்களில் இடதுசாரிகளை விரும்புவதை விட வெறுப்பதற்கான காரணங்களே கூடி வருவது போல்த் தெரிகிறது. இன்றும் அவர்கள்தாம் சுயநலமற்ற, ஊழலற்ற, அனைத்து தேசிய மற்றும் சர்வதேசிய விவகாரங்கள் குறித்து வாதிடக் கூடிய சரக்குடைய ஒரே கூட்டம். எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பது முக்கியமில்லை இங்கே. முதலில் நிற்கத் தெரிகிறதா இல்லையா என்பது பற்றிப் பேசுவோம். வறுமையை ஒழிக்க அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்ற கேள்வி ஒருபுறம

உணவு, உலகக் கோப்பை மற்றும் ஊழல்!

படம்
உலகக் கோப்பைக் கால்ப்பந்தாட்டம் எப்போதுமே நமக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. கோப்பையைப் பற்றிச் சொல்ல வில்லை... அதில் ஆடுவதே அவ்வளவு சிரமமாக இருக்கிறது நமக்கு. கிரிக்கெட் என்றால் நமக்குக் கிறுக்கு. மற்ற ஆட்டங்கள் அனைத்துமே நமக்கு ஆடப் பிடிப்பதில்லை. பார்க்க மட்டும்தான். ஏன்? நம் வாழ்க்கை முறைக்கும் அதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? உணவு முறை ஒரு காரணமா? இருக்கலாம். அதனால்தான் நம்மால் கிரிக்கெட்டிலும் ஒரு ஷோயப் அக்தரோ ப்ரெட் லீயோ உருவாக்க முடியவில்லை. எந்த விளையாட்டுக்குமே அதீத உடல் வலிமையும் ஆற்றலும் வேண்டும். அறிவியல் பூர்வமான ஓர் உண்மை என்னவென்றால் நாம் அதில் கடைசி. சைவம் ஆரோக்கியம்; ஆனால் பலம் அல்ல. அப்படியானால், எப்போதுதான் நாம் அதே அளவு கிறுக்கோடு கால்ப்பந்தாடுவோம்? அசைவம் சாப்பிடுவோர் கால்ப்பந்தாட்டக் களங்களுக்கு அருகில் வரும்போதுதான் அது சாத்தியம். யார் அவர்களை வர விடாமல் தடுப்பது? கிரிக்கெட். ஏன்? மாலை வேளையில் தினமும் விளையாட வேண்டும் என்ற பழக்கமே சைவம் சாப்பிடுபவர்களிடம்தான் இருந்தது. அவர்கள்தாம் நம்மை எல்லா விளையாட்டுகளுக்கும் அறிமுகப் படுத்துவது. அவர்கள் கிரிக்கெ

2011 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் – என் ஆசைகள்

படம்
ஒரு நாகரீகமான அரசியல் (என்னது? நாகரீகமான அரசியலா? இதென்னய்யா புதுக் கதையா இருக்கு என்ற உங்கள் குழப்பம் புரிகிறது!) குடும்பத்தில் பிறந்து விட்டதால் அதன் மீதான ஆர்வம் அடங்காமல் உடன் வந்து கொண்டே இருக்கிறது. பெரிதளவில் அரசியல் ஞானம் ஒன்றும் இல்லா விட்டாலும் நாளிதழ் பார்க்கும் போதெல்லாம் நேரடியாகச் சினிமாச் செய்திகளையோ விளையாட்டுச் செய்திகளையோ தேடி ஓடாமல் முதல் பக்கத்தில் இருந்து முழுமையாய் நுனிப்புல் மேய்கிற ஆர்வமும் அவ்வப்போது பணிக்கிடையில் இணையத்தில் நுழைந்து அரசியல் நடப்புகளை பறவைப் பார்வை பார்த்து விட்டு வருகிற உந்துதலும் உயிரோடு இருக்கின்றன. தமிழ் மண்ணில் தேனாறும் பாலாறும் ஓட வேண்டும் என்ற பேராசை எனக்கும் உண்டு. குறைந்த பட்சம் அவ்வாறுகளில் நீராவது ஓட வேண்டும் என்ற சிற்றாசையாவது உண்டு. திராவிடக் கட்சிகள் எல்லாம் பாடை ஏற்றப் பட வேண்டும்; திருடர்கள் எல்லாம் அவர்கள்தம் மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்; மனு நீதிச் சோழன் வந்து ஆட்சி புரிய வேண்டும்; நீதி தலை தூக்க வேண்டும்; அநீதி வால் நறுக்கப் பட வேண்டும்; குடும்ப அரசியல் நடத்தும் கொடியோர் எல்லாம் கூட்டாஞ்சோறு சாப்பிட அனு