இடுகைகள்

மார்ச், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கருணாகரன்

முடி திருத்துகையில் மகனுக்குக் கழுத்தருகில் கத்தி பட்டதால் கீறல் விழுந்த கோபத்தில் கடைக்காரரைக் கண்டமேனிக்குத் திட்டி கடுமையாகச் சண்டை போட்டு அப்படியே அடுத்த கடைக்குப் போய் இளங்குட்டியாகப் பார்த்து கண் முன்பே கரகரவென்று கழுத்தறுப்பதைப் பார்த்து பிள்ளைகள் சாப்பிட வசதியாக நல்ல கறியாகப் பிரித்து ஒன்றரைக் கிலோ வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார் கருணாகரன்...

4-7-8

ஏதோவொரு வகையில் நம் வாழ்க்கையை மாற்றுகிற பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதுதானே கல்விகளில் எல்லாம் தலையாயது. அப்படியான ஒரு பழக்கத்தைச் சமீபத்தில் படித்து விட்டு, சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சியில் திரிகிறேன் கடந்த சில வாரங்களாக. அது யாது? படுக்கையில் படுத்ததும் தூக்கம் வராமல், பல மணி நேரம் புரண்டு புரண்டு படுப்பவரா நீங்கள்? அதற்குப் பெரும் காரணம், முடிந்து போன அன்றைய நாளின் சிந்தனைகள் முழுமையடையாமல் எச்சங்களாய்த் தொக்கி நிற்பதே. தொக்கி நிற்கும் எது பற்றியும் கவலைப் படாமல், ஆஃ ப் பட்டனை அழுத்தியதும் தூங்கி விடும் நம் அழகுக் கணிப்பொறியைப் போல நாமும் தூங்கி விழுந்து விடுவதற்கு எளிய வழி ஒன்றை முனைவர். வெய்ல் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார் (இதெல்லாம் நம் முப்பாட்டன் கண்டுபிடித்ததுதான் என்று ஆவணம் வைத்திருப்பவர்கள், வெள்ளைக்காரருக்கு மரியாதை செய்து விட்டமைக்கு மன்னித்தருள்க). எனக்குப் பெரும் உதவியாக இருந்த இந்தப் பழக்கம் என் போன்ற பலருக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்ற நம்பிக்கையிலேயே அது பற்றிப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்றுமில்லை. இது ஓர் எளிய மூச்சுப் பயிற்சி. நான்க

போயா லூசு!!!

எத்தனை பேர் இதை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இன்றைய தினம் நிம்மதியாக இருக்க முடியாது என்று மட்டும் தெரிகிறது. ஒரு பக்கம் மாற்றுக் கருத்து சொன்னாலே தேசத்துரோகி என்று கூச்சல் போடுகிறார்கள். இன்னொரு புறம் இனத்துரோகி என்கிறார்கள். அரசியல் மெதுவாக சல்லிப்பயல்களின் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. சில தனி மனிதர்களின் பேராசைக்குத்தான், மதம் போலவே இனமும் மொழியும் எடுபிடி ஆகிக் கொண்டிருக்கின்றன என்பதை உணராமலேயே ஒரு பெருங்கூட்டம் அந்த வலைக்குள் விழுந்து கொண்டிருக்கிறது. என்ன பேசினாலும், உன் அம்மா - அக்கா - தங்கச்சி என்று பதிற்கேள்வி கேட்டு மிரட்டுகிறார்கள். தேதிவாரியாக வந்தேறிக் கணக்கு வைத்துக் கொண்டு சாதியைச் சொல்லித் திட்டுகிறார்கள். எதிர்ப்பு அரசியலைத் தாண்டி பகை அரசியல் மேலோங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கும், "அவ்வளவு நாகரீகமானவன்னா அரசியல் பேச வராத!" என்று நியாயமான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. நல்லது! அடுத்த சில மாதங்கள் அச்சுறுத்துபவையாகவே உள்ளன. அமைதியாக ஒதுங்கிக் கொண்டு விடலாமோ என்றுதான் தோன்றுகிறது. உலகத்துக்கே நாங்கள்தாம் பண்பாடு சொல்லிக் கொடுத்தோம்

பின்நவீனத்துவக் கவிதை!

"ஐ லவ் யூ" என்றாள் "ஐ லவ் யூ டூ" என்றேன் "ஒன்னு இங்க இருக்கு! இன்னொன்னு எங்க?!" என்கிறாள்...