இடுகைகள்

படம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கர்ணன் பேசும் அரசியல்

மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ பெரிதளவில் பேசப்பட்டாலும் எல்லோரும் சொன்னதைப் போல் மனதைக் குத்திக் குடையவில்லை. அதைவிட வெற்றிமாறனின் ‘அசுரன்’ கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது வந்திருக்கும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’, ‘பரியேறும் பெருமாளை’ விடப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. முதலில் இலக்கியங்கள் எந்தப் பாதையில் செல்கின்றனவோ அதே பாதையை அடுத்துத் திரைத்துறை பின்பற்றும். அழகியல் என்ற பெயரில் தஞ்சாவூரின் வாழ்க்கையையும் சென்னையில் வாழ்க்கையையும் மட்டும் பேசிய இலக்கியங்கள் பின்னர்தான் பாண்டிய நாட்டின் - கரிசல் பூமியின் பக்கமெல்லாம் வந்தன. உயர் - ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையை மட்டும் பேசிய இலக்கியங்கள் அடுத்து நடுத்தர - போலி ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையைப் பேசின. பின்னர்தான் அடித்தட்டு - ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் வந்தன. அதற்குப் பின்னால் உயர் - ஆதிக்க வர்க்கத்தின், நடுத்தர - போலி ஆதிக்க வர்க்கத்தின் படைப்பாளிகளும் இருந்தார்கள். அந்த வாழ்க்கையைப் பட்டு உணர்ந்த அடித்தட்டு - ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வெளிவந்த படைப்பாளிகளும் இருந்தனர். “என் வலியை உணர்ந்து அதை...

தி.மு.க. - அன்றும் இன்றும் (பார்த்ததில் பிடித்தது)

படம்
மேல் வரிசையில் உள்ள முதல்வரைத் தவிர்த்து எஞ்சிய நால்வர் பற்றி எழுத வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக இந்தப் படத்தைச் சேமிப்பில் வைத்திருந்தேன். அது இப்போதைக்கு முடியுமா என்ற குழப்பம் வந்து விட்டதால், சரி - படத்தையாவது வீணாக்காமல் போட்டு விடுவோம் என்று போட்டு விட்டேன். எந்தப் பத்திரிகையில் வந்ததென்று நினைவில்லை. அனேகமாக தினமணியாக இருக்க வேண்டும். அதில்தான் மதியின் ஓவியங்கள் வரும், அல்லவா? எனவே, நன்றி: மதிக்கும் தினமணிக்கும் - மணியான படத்துக்கு!