இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்

நேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ் ‘தட்பவெப்ப மாற்றப் புனைவுக்கென்று தனி வகைமை இருக்கும் போது, அது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தோடு தொடர்பில்லாத தனியான ஒன்றாகிவிடுகிறது. ஆனால் அது நம் அன்றாட வாழ்க்கையோடு முற்றிலும் பின்னிப் பிணைந்துள்ள ஒன்று.’ அமிதவ் கோஷ், தன் புதிய கட்டுரைத் தொகுப்பு நூலான, த கிரேட் டிரேஞ்ஜ்மெண்டில் (The Great Derangement), இன்றைய தட்பவெப்ப நெருக்கடியின் வடிவத்தில் மனித குலத்தை அதன் இன்றைய இக்கட்டான நிலைக்கு இட்டு வந்துள்ள கதை சொல்லல், வரலாறு, அரசியல் ஆகியவற்றின் தோல்விகள் பற்றி ஆய்வு செய்கிறார். அந்த மெல்லிய தொகுதியின் வீச்செல்லை பரந்து விரிந்ததாக இருக்கிறது: மற்ற எத்தனையோ விஷயங்களுக்கு நடுவில், பொதுப்போக்குப் புதினங்களில் (mainstream novel) இயற்கையிலிருந்து தன்னை வேறாகப் பார்க்கும் நிலைக்கு மனிதகுலத்தைத் தள்ளிய கர்டீசிய இருமைவாதத்தின் விளைவுகள் பற்றி ஆராய்கிறார்; தட்பவெப்பப் பேரழிவைத் தன் குடும்பமே எப்படி எதிர்கொண்டது என்ற கதையைச் சொல்கிறார்; புயல் எழுச்சி ஏற்பட்டால் மும்பை போன்ற கடலோரப் பெருநகரத்துக்கு என்ன ஆகும்

யாதும் ஊரே: அமேரிக்கா 4

முதல் பாகம் அமேரிக்கா பற்றி, இரண்டாம் பாகம் கலிஃபோர்னியா மாநிலம் பற்றி, மூன்றாம் பாகம் லாஸ் ஏஞ்சலஸ் பற்றி என்றால், நான்காம் பாகம் எது பற்றி இருந்துவிடப் போகிறது! அதேதான். லாஸ் ஏஞ்சலசில் எந்தப் பகுதியில் வாழ்கிறோம் என்பது பற்றிப் பேசிவிடுவோம் இப்போது. அத்தோடு பொதுவாகவே அமேரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றி நிறையக் கதைகள் உண்டு. அவை பற்றியும் பேசிவிடுவோம். நாங்கள் வீடு பிடித்துத் தங்கி இருக்கும் இடத்தின் பெயர் 'டாரன்ஸ்'. டாரன்ஸ் என்பது லாஸ் ஏஞ்சலசில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று. இது போலப் பல பகுதிகள் இருக்கின்றன. பொதுவாகவே இங்கே இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி எல்லாமே நல்ல பள்ளிகளைக் கொண்டிருக்கின்றன. நம்மவர்கள் நல்ல பள்ளிகள் உள்ள இடங்களைத் தேடி அடைவதும் உண்டு. நம்மவர்கள் குடியேறிய உடனேயே பள்ளிகளின் தரம் கூடிவிடுவதும் உண்டு. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நம்மூரில் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோமா என்று தெரியவில்லை. ஊருக்கு இரண்டு வீடுகளோ சிறிது பெரிய ஊராக இருந்தால் ஓரிரு தெருக்களோதான் நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கொண்டிருக்கும். ஆனால் ஒழுங்காகப் பட