இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மக்களாட்சி

மக்களால் யாருக்காகவோ மக்களை வைத்தே நடத்தப் படுவது!

அறிந்தும் அறியாமலும்

நிறையப் படிப்பதால் நிறைய அறிவைக் குடிப்பதால் நீர் நீரற்ற வெற்றுச் சுரைக்காய் எம்மை விட அறிவாளியாகத்தான் இருக்க வேண்டுமென்று படுகிறது ஆனால் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான உம் மீது திட்டமிட்டுத் திணிக்கப்படும் பிரச்சார எழுத்துக்களை மட்டும் உள்வாங்கிக் கொண்டு உம் சுவர்களுக்கு வெளியே இருக்கும் உலகையே இல்லையென்று வாதிடுகையில் வாதிட மறுக்கையில் அறியாமையை அறிந்திருக்கும் நிலையே அறிந்தும் அறிய மறுக்கும் நிலையினும் மேலென்று அறிவித்து விடுகிறீர்!

நாய்த்தனம்

எனக்கு நாய்களைக் கண்டால் அலாதி பயம் நாய்த்தனம் நமக்கு ஒத்துவராதப்பா... அவற்றுக்கோ நம்மைக் கண்டால் அலாதி இன்பம் அந்த பயம் இருக்கட்டும் மானிடா... உன் போன்று பயந்து ஒதுங்குவோர் மட்டும் இல்லையென்றால் எம் போன்ற நாய்களுக்கு உம் சமூகத்தில் மரியாதையே இல்லாமல் போயிருக்கும்!

என்ன கருமமடா இது?

இந்தக் கொடுமையான உணர்வின் பெயர்தான் என்ன? உன் தெருவுக்குள் நுழைகிற போதெல்லாம் உடல் நடுங்குகிறதே எதற்காக? உன் மூஞ்சியில் முழித்துவிடக் கூடாது என்று  உதறித் துடிக்கும் அதே வேளையில் உள்ளுக்குள் இன்னோர் ஆசை உன் முகத்தைக் கண்டுவிட முடியாதா என்றும் ஏங்கித் தொலைக்கிறதே உன்னைக் காணாமல் கடந்து விட்ட பின்பு பிடிபடாமல் தப்பிய திருடனைப் போன்ற பெருமூச்சும் பார்த்துத்தான் தொலைந்திருக்கலாமே என்றொரு தோல்வியுணர்வும்  ஒருங்கே வதைக்கும்  இந்தக் கொடுமையான நோய்க்குத்தான் பெயர் என்ன?