இடுகைகள்

ஜனவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (6/6)

படம்
விடுதி-வெளி மாணவர்கள் பொதுவாகவே எல்லா வகுப்புகளிலும் விடுதி மாணவர்கள் ஒரு குழுவாகவும் வீட்டிலிருந்து தினமும் வந்து செல்லும் வெளி மாணவர்கள் ஒரு குழுவாகவும் இருப்பர். இந்தக் குழுவுணர்வுதானே மனித இனத்தையே துண்டாடிப் போட்டுக் கொன்று குவித்துக் கொண்டு இருப்பது. சிலர் மட்டுமே இந்த எல்லைகளைக் கடந்து பழகுவது. எண்ணிக்கையில் குறைவு என்பதால் எங்கள் வகுப்பில் இது சிறிது பரவாயில்லை. சொந்த ஊர் அருகிலேயே இருக்கும் சிலர் சில காலம் இதுவாகவும் சில காலம் அதுவாகவும் இருப்பார்கள் (அதாவது விடுதி மாணவனாகவும் வெளி மாணவனாகவும்). சில விடுதி மாணவர்கள் எப்போதுமே வெளி மாணவர்களோடு சுற்றுவார்கள். அவர்களுடைய வீடுகளிலேயே கிடப்பார்கள். திருச்செந்தூரைச் சொந்த ஊராக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்த உள்ளூர்ப் பெண்கள் எல்லோரையுமே இவர்களுக்கும் தெரிந்திருக்கும். அது போலவே வெளி மாணவர்கள் நிறையப் பேர் எங்களுடனே கிடப்பார்கள். உள்ளே இருக்க முடிந்த நேரம் முழுக்க எங்களுடனே இருப்பார்கள். வார்டன்கள் அழைத்து சிலரைக் கண்டிக்கவும் செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒன்னு மண்ணாய் இருப்பார்கள். அப்படி எங்களுடனேயே வந்து

நகரியம்

படம்
சேவல்களின் கூவலில் விடிந்த காலைப் பொழுதுகள் இப்போது கடிகார மணியோசையில்... கல் தடுக்கி விழுந்தாலும் கதறி ஓடிவரும் பாமர மனிதர்களோடே வாழ்ந்து பழகி விட்டதால் காரிலடிபட்டுக் கிடந்தாலும் அனுதாபமாயோர் அன்னியப் பார்வை வீசிவிட்டுப் பறக்குமிந்தப் படித்த ஞானிகளோடு ஒத்துப் போவது வெகு சிரமம்! நச்சுப் புகைக் காற்றும் இரைச்சலுமான சூழலில் மனிதமும் மாசு பட்டு விட்டது! கிராமியம் கேவலமாய் நகரியம் நாகரிகமாய் சித்தரிக்கப் படும் பொழுதுகளில் சினம் கொண்டு சீரும் மனம் சில நேரங்களில் எதிர்மறையாயும் எண்ணத்தான் செய்கிறது.... என்ன சாதியென்று விசாரணை செய்யும் இழிநிலை இங்கில்லையே! எனவே வாழ்க நகரியம்! * 1998 நாட்குறிப்பில் இருந்து...

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (5/6)

படம்
மொழிப் பிரச்சனை தமிழகத்தை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு பகுதிகளாகப் பிரித்தால் அதில் தெற்குதான் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருக்கும். வடக்கு தெற்கை விட மோசம் என்றாலும் சென்னை என்கிற ஒரு மாநகரம் இருக்கும் வசதி அதை வடக்கே சரிக்கட்டி விடுகிறது. மேற்குப் பகுதியான கொங்கு மண்டலம் எப்போதுமே வளம் நிறைந்த பகுதி. தொழில் வாய்ப்புகளும் கல்வி வாய்ப்புகளும் மிகச் சிறப்பாக இருக்கும் பகுதி. கிழக்குப் பகுதி என்று ஒன்று இல்லை. அதற்குப் பதில் காவிரி டெல்டாப் பகுதியான திருச்சி-தஞ்சாவூர்ப் பகுதியை எடுத்துக் கொண்டால், அவர்களும் வளமான வாழ்க்கை முறையும் நிறையக் கல்வி வாய்ப்புகளும் கலையார்வமும் கொண்டவர்கள். மதுரையும் அதற்குக் கீழே இருக்கும் தென் பகுதியும் சிறப்பான கல்வி வாய்ப்புகள் அற்ற பெரும்பாலும் கிராமப் புறங்களைக் கொண்ட வறண்ட பகுதி. இந்தியாவிலேயே பெரிய கிராமமான மதுரைதான் அவற்றின் தலைநகரம். மதுரையை என்றுமே மாநகரம் என்ற கணக்கில் சேர்க்க முடியாது. தென் தமிழகத்து மக்கள் அவர்களுக்கென்று பிடிவாதமான ஒரு வாழ்க்கை முறை கொண்டவர்கள். புதுமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஆங்கிலம் சுட்டுப் போட்டா