இடுகைகள்

ஜூலை, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொம்மை பிரதமர்?

படம்
சரவணக்குமார் எழுதச் சொன்ன இன்னொரு விஷயம் - நம் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்கின் பல தோல்விகள் பற்றி. சரி. அதையும் எழுதி விடுவோம். 2004-இல் காங்கிரஸ் வெல்லட்டும் ஆனால் சோனியா பிரதமராகக் கூடாது என்று ஆசைப்பட்ட ஆட்களில் நானும் ஒருவன். கட்சி என்ற முறையில் எனக்கு பா.ஜ.க. மீது எனக்குப் பெரிதும் ஈர்ப்பு எதுவும் இல்லை. ஆனால், வாஜ்பாயை விட சோனியாதான் பிரதமராக அதிகத் தகுதிகள் கொண்டவர் என்று யாராவது சொன்னால் எனக்கு மண்டை கிர்ரென்று சுற்றும். அத்வானியோடு கூட அவரை ஒப்பிடப் பிடிக்காது. சரியான ஆளை மயக்கியதைத் தவிர இந்திய அரசியலில் அவருக்கு வேறு எந்தத் தகுதியும் கிடையாது. தான் பிரதமர் பதவி ஏற்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தபோது எல்லோரையும் போல நானும் அவரைப் பெரும் தியாகியாக ஏற்றுக் கொண்டேன். அது அவர் விரும்பி எடுத்த முடிவல்ல; சுப்பிரமணியசுவாமி என்கிற நம்ம ஆள் ஒருவர் போட்ட குண்டினால் அப்படி ஒரு முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார் என்று பின்னர் கேள்விப் பட்டபோது அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. வெளிநாட்டுக் காரர் என்பதற்காக அவர் இந்த நாட்டை ஆளக் கூடாது என்று கூட எண்ணவில்லை. அதற்க

நானொரு சமத்துவவாதி!

படம்
எல்லோரும் சமம் என்கிறது என் சமுத்திரத் துளியளவு சமத்துவ ஞானம் அதுதான் சமத்துவமா என்று கூடச்  சரியாகத் தெரியவில்லை... ஆனாலும்,  நானொரு சமத்துவவாதி! ஆனாலும், சமத்துவம் பற்றி பேசக் கூடத் தெரியாதோரை விட பெரியவன் இல்லையா நான்? * 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

ஒழுக்கம்

படம்
உணவுக்கு உயிர்களைக் கொல் மனித நேயம் பேசிக் கொள் இது வேறு அது வேறு இயற்கை! மனித வதை செய் உயிர்ப் பலி எதிர் இது வேறு அது வேறு மத நம்பிக்கை! கொள்ளையடித்துக் கொள் கொடி வணக்கம் செலுத்து இது வேறு அது வேறு தேச பக்தி! கொலைகளைக் கண்டு கொள்ளாதே குற்றவாளிகளைக் காப்பாற்று இது வேறு அது வேறு மனித உரிமை! அவரவர்க்கு ஒரு நியாயம் அதன்படியான வாழ்க்கை சுதந்திரம்! கடைசியில், குடிப்பவன்... புகைப்பவன்... காதலிப்பவன்... இவர்கள் மட்டுமே  இந்தச் சமூகத்தின் அநியாயக்காரர்கள்! * 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

மாற்ற முடியாதே!

படம்
நேற்று வரை ஒருபோதும் செய்யாத தவறு இன்று ஒரே நாளில் இழந்து விட்டேன் ஒழுக்க சீலப் பட்டத்தை... முதல் முறை பிறழ்ந்த இந்த முழு நாளும் பிடிக்க வில்லை... சரி போகட்டும். யாம் பெற்ற பெயர் பெற வைக்கிறேன் இவ்வையகம்... இப்போது சிலரில் ஒருவன் அப்போது பலரில் ஒருவன் பெயரைக் காப்பாற்றி விடலாம்! * 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

மூச்சுக்கும் எழுத்துக்கும்...

படம்
எத்தனை பெண்கள்? எத்தனை கதைகள்? ஒரு சொல் கூட உள்வாங்க வில்லையே! ஏன் நீ பேசும்போது மட்டும்... பேச்சுக்கிடையிலான மூச்சில் கூட பொருள் தேடுகிறேன்? ஏன் உன் கடிதங்களில் மட்டும்... ஒவ்வொரு எழுத்துக்கும் கூட பொருளிருக்கும் என்றெண்ணி புலம்பித் தவிக்கிறேன்? * 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

ஆமாம், நீ சொன்னது சரிதான்!

படம்
எத்தனை கேலி? எத்தனை கிண்டல்? எத்தனை விமர்சனம்? எத்தனை கண்டனம்? எத்தனை ஏளனம்? மனம் ஆனது ரணம்! கடைசியில் கிடைத்த "ஆமாம், நீ அன்றே சொன்னாய்!" ஒப்புதல்களில் கவலை மறந்து பெருமிதம் மேலிடுகிறது ஆனாலும், தெளிவாகச் சிந்திந்து நடைமுறைச் சிக்கல்கள் ஆராய்ந்து கவனத்தோடு சொன்ன கருத்துக்கும் வெளிப்படையாய்ப் பேச விரும்பிய நேர்மைக்கும் ஏற்பட்ட இடைக்காலக் காயங்களை எப்படி ஆற்றப் போகிறீர்கள் இப்போது? * 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

எர்னஸ்டோ சே குவேரா: ஐ. லாவ்ரெட்ஸ்கி (தமிழாக்கம்: சந்திரகாந்தன்) - 2/2

படம்
"துப்பாக்கி இல்லாமல் புரட்சி நடத்தவே முடியாது." என்று இளமைக் காலத்தில் சே சொன்னதாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஒரு சர்வாதிகாரியை எதிர்த்துப் புரட்சி செய்ய வேண்டுமானால் கண்டிப்பாக ஆயுதங்கள் ஏந்தி ஆக வேண்டும். ஆயுதத்தை மட்டும் நம்பி இறங்க முடியாது. பல தந்திரங்களும் மூளை உழைப்பும் கூடச் செய்தாக வேண்டும். சனநாயகத்தில் துப்பாக்கி இல்லாமலும் புரட்சிகள் செய்ய முடியும் என நினைக்கிறேன். கத்தியின்றி இரத்தமின்றிச் செய்யப்படும் புரட்சிகள், புரட்சிகள் என அழைக்கப் படாமல் இருக்கலாம். அது ஒருபக்கம் இருக்கட்டும். சனநாயகத்தில் இருக்கும் சர்வாதிகாரிகளை எப்படி வெல்வது? துப்பாக்கி எடுத்துத்தானே முடியும்? "சிறு பிள்ளைப் பிராயம் தொட்டே நாடு சுற்றிப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தவர் எர்னஸ்டோ. அவரைச் சுற்றியுள்ள யதார்த்தத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விழைந்தார். அந்த அறிவு புத்தகங்களின் மூலம் பெறப்பட்டதாக இல்லாமல், யதார்த்தத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். தலைநகரில் மட்டுமின்றி, தூரத்து மாநிலங்களிலும் வாழும் ம

எர்னஸ்டோ சே குவேரா: ஐ. லாவ்ரெட்ஸ்கி (தமிழாக்கம்: சந்திரகாந்தன்) - 1/2

படம்
இந்தப் புத்தகம் நான் தமிழ் வாசிக்கப் பழகிய நாள் முதலே கண்ணில் பட்டுக் கொண்டு இருந்தது. பொதுவுடைமைப் பின்னணியில் பிறந்து வளர்ந்ததால் புரட்சியாளர்கள் பற்றிய புத்தகங்களுக்குப் பஞ்சமிருக்க வில்லை. மற்ற பெயர்கள் கேள்விப் பட்டவை. இந்தப் பெயர் கேள்விப் படாதது. இப்போது சீமான் புண்ணியத்தில் தமிழ் நாட்டில் பனியன்களில் எல்லாம் எல்லோரும் அவருடைய படத்தைப் போட்டுப் புகழ் பரப்பிக் கொண்டிருப்பது புரட்சியின் ஆரம்பமோ என்று யாரும் தவறாக நினைத்து விட வேண்டாம். எனக்குத் தெரிந்த ஒருவர் அவர் யாரென்றே தெரியாமல் கூடத் தன் பனியனில் அவரை வைத்துக் கொண்டிருந்தார். சரி, அது கிடக்கட்டும். கதைக்கு வருவோம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் 'புதிய தமிழகம்' கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி (புரட்சியாளனாக வாழ்வைத் துவங்கி, இடதுசாரியாக இருந்து, அரசியல்வாதியாகி, ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவனாகி, இன்று வெறும் ஜாதி அரசியல்வாதியாக மட்டும் பார்க்கப் படும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்!) அவர்களின் பேட்டி ஒன்றில், அவருக்குப் பிடித்த புத்தகம் எது என்ற கேள்விக்கு "எர்னஸ்டோ சே குவேரா" என்ற

பெயர் இராசி

படம்
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என்னால் உன் பெயர்தான் என் மனைவியின் பெயராக இருக்கும் அல்லது என் மகளுடையதாக இருக்கும்... * 2005 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

எது பலம்?

படம்
மான்களைப் பார்த்துப் பாவப்பட்டபோது நினைத்தேன் அவற்றிடம் புலிகளைப் போன்று பலம் இல்லையே என்று... புள்ளிவிபரங்கள் படிக்கையில் புதியதொரு குழப்பம்... எண்ணிக்கையில் குறைவது யார்? அடித்துத் தின்னும் புலிகளா? அடிபட்டுச் சாகும் மான்களா? அப்படியானால் யார் உண்மையான பலசாலி? எது உண்மையான பலம்? * 2005 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

தொலைக்காட்சிப் பெட்டி

படம்
உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்தது... வீட்டுக்குள் இருந்த வீட்டைக் காண வில்லை! * 2005 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

நான்?

படம்
கண்ணும் கண்ணும் உண்ணும் கதைகள் சைகை மொழி மின்சாரப் பாய்ச்சல்கள் உணர்ச்சிச் சிலிர்ப்புகள் இளமைச் சிமிட்டல்கள் எல்லாமே அர்த்தமிழந்து போகின்றன செயற்கைக் கோள் பிடித்த உலகப் படங்களைக் காணும்போதெல்லாம் உருப்பெருக்கி உருப்பெருக்கி என் நாட்டைக் கண்டுபிடித்து என் நகரத்தைக் கண்டுபிடித்து என் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அடையும் மகிழ்ச்சியில் உணர்கிறேன் எத்தனை சிறியதொரு புள்ளி இந்தப் பிரபஞ்சத்தில் நான்! கோடானு கோடி உயிரினங்களில் நாயும் மாடும் போல நானும் ஒரு மிருகந்தானே? இயக்கமும் சப்தமும் இன்னும் பல கடமைகளும் கொண்ட இன்னோர் இயந்திரந்தானே நானும்? * 2002 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

இளமைக் குழப்பங்கள்

படம்
பால்ய காலத்திலிருந்தே ஒவ்வொரு பருவத்திலும் எந்தவொரு சராசரி இளைஞனின் வாழ்க்கையிலும் போலவே என்னுடைய அன்றாடங்களிலும் ஏதோவொரு பெண் இதயத்திலும் மூளையிலும் இடம் பிடித்து பின்னர் முழுமையாய் ஆக்கிரமித்து ஏதோதோ வேதி வினைகள் புரிந்திருக்கிறாள் “உன்னைப் போலொரு பெண் இப்படி என்னை இம்சித்ததில்லை இதுவரை” என்றுதான் சொல்லத் தோன்றியது எல்லோரிடமுமே! தரையை மறந்து வானில் பறந்து வாழப் பழகிவிட்ட இந்தத் திரைப்பட யுகத்தில் எல்லோரையும் போலவே என்னையும் ஒருத்தி காதலிக்கிறாள் என்று பெருமையாகச் சொல்ல முடிகிற நாளில்தான் என் இருப்புக்கும் பிறப்புக்கும் அர்த்தம் பிறக்கப் போவதாக அடிக்கடி நினைத்திருக்கிறேன் அதேவேளையில் இனம் புரியாத ஏதோவோர் ஈன சுகத்துக்காக கண்ணில் பட்ட கன்னியரை எல்லாம் விரட்டி விரட்டிக் கடலை போடும் விடலைக்காலக் காளையர் கண்டு ஏளனமாய் வியந்திருக்கிறேன் இரங்கல் கூட்டங்கள் போட்டிருக்கிறேன் எப்போதாவதொருமுறை சாலையில் போகிற சோலை ஒன்று கடித்துத் தின்கிற மாதிரிக் கண்டு செல்லும்போது வழக்கத்துக்கு மாறான பெருமிதம் ஒன்று வந்து வானம் வரைத் தூக்கிச் செல்லும் மடை உடைத்த மகிழ்ச்ச

அவள்?

படம்
என்னைப் போலவே உண்ணுகிற உறங்குகிற மலம் கழிக்கிற மனிதப் படைப்புதானே அவளும் பின் ஏன்?! * 2001 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

எய்ட்சில்லா வாழ்க்கை வேண்டுமா?

மனதைத் தாவ விடாமல் காக்கத் தெரிந்து கொள் அல்லது தாவிச் செல்லும் லாவகம் கற்றுக் கொள் * 1999 நாட்குறிப்பில் இருந்து...

ரிக்சா மனசு

கியர்களை மாற்றி புகையுமிழ்ந்து செவிப்பறைகளை அதிரவைத்து இடைவெளிகளில் செருகிச் சீறும் இயந்திர ஊர்திகளின் இயக்கங்களுக்கிடையில்... மண்டையைப் பிளக்கும் மத்தியான உச்சி வெயிலில் கால்த்தசை நோக நரம்புகள் தெறிக்க ஏற்றங்களில் உன்னி மிதித்து இறக்கங்கள் கண்டு ஆனந்தம் கொண்டு எல்லையை அடைந்ததும் பேரம் பேசிப் பெறப்படும் கூலி... கொண்டு வரப்பட்டவர் கொண்டு வந்திருந்த மினரல் வாட்டர் பாட்டிலின் விலை! * 1998 நாட்குறிப்பில் இருந்து...

அரசாங்க வேலை: கடமையும் உரிமையும்!

படம்
இன்றைய நிலையில் எல்லோருமே எப்படியாவது ஓர் அரசாங்க வேலையில் அமர்ந்து விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். அலைந்து திரிந்து, அரசியல் செல்வாக்குள்ள ஓர் ஆளைப் பிடித்து, காலைப் பிடித்து, கையூட்டுக் கொடுத்து, எப்பாடு பட்டேனும் ஒரு வேலையை மட்டும் வாங்கி விட்டால், பின்னர் வாழ்நாள் முழுவதும் கவலை இல்லை என்றுதான் எண்ணுகிறார்கள். காரணங்கள் பல. #1 உழைத்தாலும் உழைக்கா விட்டாலும் ஊதியம் உறுதி. #2 கடமையைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல், கம்யூனிசம் பேசிக் கொண்டு, "உரிமைகளுக்காகப் போராடுகிறோம்!" என்ற போர்வையில் ஊரை ஏய்க்கலாம். #3 அரசாங்க வேலையில் இருந்தால் நல்ல வரதட்சணை பிடுங்கலாம். இங்கே உழைப்புக்கு மதிப்பில்லை. முதலாளிகள் சுரண்டிச் சுரண்டி நாட்டைச் சுடுகாடாக்கி விட்டார்கள். ஆனால், சுரண்டப் படும் உழைப்பாளிகளின் வர்க்கத்தை உய்விக்க வந்த மகான்கள் நிறையப் பேர், முதலாளிகளிடம் திருட்டுத் தனமாகப் பணம் வாங்கிக் கொண்டு, இரட்டை வேடத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கையோ சுகமோ சுகம்! ஆசிரியர்கள் பலரின் அநியாயமோ அதை விடப் பெரிது. சக ஆசிரியர்களுக்கு வட்டிக்குக் கொடுத்தல்

வெளிநாட்டு வேலை - தவறா?

படம்
இந்த நாட்டில் படித்து வளர்ந்த மாணவனொருவன், வெளிநாட்டில் போய் வேலை பார்ப்பது தவறா? தவறு என்பவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? அவர்களுடைய கருத்து - இந்த மண்ணின் வளங்கள் அனைத்தையும் பயன் படுத்தித் தன்னை உருவாக்கிக் கொள்ளும் ஒருவன், இந்த மண்ணின் வளத்தை மேன்மைப் படுத்தவே உழைக்க வேண்டும்; எடுப்பது மட்டும் இங்கே இருந்து எடுப்பேன். கொடுப்பது வேறொருவருக்குக் கொடுப்பேன் என்பது எந்த வகையிலும் நியாயமில்லை. இந்தக் கோணத்தில் பார்த்தால், இது சரியென்றே படுகிறது. ஆனால், அதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் அது வேறு விதமாகவும் படுகிறது. மக்கட்தொகை ஒரு பிரச்சனை என்றிருந்த காலம் போய், இன்று அதுவே நம் வளம் என்றாகி வருகிறது. அதாவது, மனிதவளம்! திறமைமிகு இளைஞர்கள் நிறையப் பேர் இன்னும் தெருத் தெருவாய் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில துறைகளில் நுழைந்தால் மட்டுமே அவர்கள் திறமைக்கான சரியான அங்கீகாரமும் சன்மானமும் கிடைக்கிறது. பண பலமோ அரசியல் பலமோ இல்லாத ஏழை இளைஞர்கள், "ஏன்டா இந்த தேசத்தில் பிறந்தோம்?" என்று வேதனையோடும் விரக்தியோடும் காலத்தைக் கழிக்கின்றனர். அவர்களுடைய திறமைக்

பிரிவின் சோகம்

படம்
மூன்றாண்டு காலக் கல்லூரி வாழ்வின் கடைசி நாள் பிரிவுபச்சார விழா! அட்மிசன் நாள் முதல் அந்த விழா தினம் வரை நினைவுகள் நீண்டோடின! கண்ணதாசனின் 'பாடித் திரிந்த பறவைகளே'யும் வைரமுத்துவின் 'முஸ்தபா முஸ்தபா'வும் காதுகளுள் புகுந்து கண்களையும் இதயங்களையும் நனைத்துக் கொண்டிருந்தன! அர்த்தத்தோடு அழுத வாழ்வின் மிகச் சில தருணங்களில் அதுவுமொன்று! "அடிக்கடிக் கடிதமெழுதுடா" "மறந்துராதடா" ஒருவரையொருவர் கண்களுக்குள் பார்த்துக் கண்ணீர் வடித்துப் பிரிந்த சோகத்தின் நீட்சி வாழ்வின் கடைசித் துளி வரை வாட்டி வதைக்குமென்றுதான் அந்தக் கணத்தில் அனைவருமே கருதினோம்! 'ரஜினியா? கமலா?'வில் ஆரம்பித்த வாக்குவாதம் அடிபிடிச் சண்டையானது... கோட்டை ஏறிக் குதித்து சினிமாப் பார்க்கப் போனதற்கு மறுநாள் காலை வீட்டுக்கனுப்பப் பட்டது... கடைசி மாதத்தில் வந்த சாதிக் கலவரத்தால் எதிரிகளைச் சிரித்து நண்பர்களை முறைத்து எல்லாம் தலை கீழானது... பேரூந்து நிலையத்தில் பேயாட்டம் போட்டதற்கு ஊரே போட்டு வெளுத்தது... நிகழ்ந்தபோது கசந்தவை கூட நினைத்துப் பா

தேசத்தின் தலைவிதி

படம்
ஒரு தேசத்தின் தலைவிதி தீர்மானிக்கப் படுவது பாராளுமன்றத்தில் மட்டுமல்ல... பாடசாலைகளிலும்தான்! பேரம் பேசி விலை கொடுத்து வேலை வாங்கியவர் சம்பளத்தை வாங்கிக் கொண்டு பாடங்களை வாசிக்கிறார்! வாசித்ததை மனப்பாடம் செய்து பேனாவால் ஒப்புவித்தலுக்கு மதிப்பெண் அளிப்பதன் மூலம் அறிவாளிகளைக் கண்டுபிடிக்கும் இந்தக் கல்விமுறையில் தேறுவது கடினமென்று அறிந்தவர் காசு கொடுத்து வாங்கலாம் கல்வியை! அதுவுமில்லாதவர் 'அம்போ'வென்று அலையலாம்! வாசிக்கும் வாத்தியார்கள்... மனனிக்கும் மாணவர்கள்... இந்தியாவின் எதிர்காலம் இவர்களால்தான் இயற்றப் பட வேண்டுமாம்! தேசத்தை விற்று விடாதீர் புத்திமான்காள்! இது கல்வி அல்ல... * 1998 நாட்குறிப்பில் இருந்து...

இறை விபத்துகள்

படம்
தண்டவாளங்களிலும் தார்ச்சாலைகளிலும் சிதைந்து போன மனிதர்கள் குடும்பங்கள் அர்த்தமிழந்து போன அவர்களின் கனவுகள் ஆசைகள் ஆவியாய் அலையும் ஆன்மாக்கள் நிகழ்ந்ததை நேரில் பார்த்து நிலைகுலைந்த மனநிலையோடு பைத்தியமாய் அலையும் பாவப்பட்டவர்கள் விபத்துக்களால் வித்துக்களே வீழ்ந்தழிந்த வேதனைகள்தான் எத்தனை?! நீ படைத்த நீ நிர்வகிக்கும் இவ்வுலகில் அத்தனையையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எங்கள் இறைவா இருப்பது உண்மையானால் எமக்கொரு வரம் கொடு... குறைந்த பட்சம் உன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களையாவது பாதுகாப்பேனென்று உறுதி கொடு! * 1998 நாட்குறிப்பில் இருந்து...

பொன்விழா தேசம்

படம்
பொன்விழாக் கொண்டாட்டங்கள் கோலாகலப் பட்டுக் கொண்டிருக்கின்றன. சுதந்திரமும் தியாகமும் பொருள் மாறி விட்ட இரு சொற்களாகி விட்டன எம்மொழியில். வறுமையும் ஊழலும் இன்னும் விக்கெட் இழக்காமல் விளையாடிக் கொண்டிருக்கின்றன. உச்சி வெயிலில் உழுது விதைத்து, விவசாயம் செய்து, வியர்த்துக் களைத்தவனின் வீடுகளில் இன்னும் வெளிச்சம் வரவில்லை. 'இந்த தேசத்தில் உடலுழைப்புக்கு மதிப்பில்லை' - உண்மையை உணர்ந்தவர்கள் தொழிலை மாற்றி விட்டதால் காவல் துறைக்கு இன்னும் ஆட்கள் தேவை. வேலையில்லாதவர்கள் சாதிக் கலவரத்தை முன்னின்று நிர்வாகம் செய்கிறார்கள். உருப்படாத கல்விமுறையைப் பின்பற்றி, மாணவன் மிருகமாகி, 'ராகிங்' கொலைகள். அடிப்படைத் தேவைகளே பூர்த்தி செய்யப் படாத தேசத்தில், அணுகுண்டு வெடித்ததை ஆரவாரித்துப் போற்றும் கூட்டத்தில், அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாதவனும் உடன் சேர்ந்து கூச்சல் போடும் அறியாமை. கிரிமினலுக்கு அர்த்தம் அரசியல்வாதியாம். ஊழலை விசாரிக்கச் செய்த செலவுகளின் கூட்டுத் தொகை ஊழலால் இழந்ததை விட அதிகம். அது தேசத்தின் கடனை விட அதிகம் என்றொரு புள்ளிவிபரம் வராதவரை நல்லது. * 1998 ந

கலவர தாகம்

படம்
இதை எழுதியது - சுதந்திர தாகம் கொண்டு துடித்துக் கொண்டிருந்த பாரதியின் அதே மண், கலவர தாகம் கொண்டு கருகிக் கொண்டிருந்த 1998-இல். ஆகவே, பதிமூன்று வருடம் பின்னால் சென்று படித்துப் பாருங்கள். மூளை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் மனித மனங்கள் மங்கிப் போய்விட்டன! சாதிச் சண்டைகளின் வெட்டரிவாள் வீச்சிலும் மதக் கலவரங்களின் குண்டு வெடிப்புகளிலும் சிதறுண்ட உள்ளங்கள் இரத்தக் கறை படிந்து சுடுகாட்டுப் பாதைகளில் ஓலமிடுகின்றன! சிலைகளை நொறுக்கி மூட்டப்பட்ட சாதியத் தீயில் அரசுப் பேரூந்துகள் கருகிக் கொண்டிருக்கின்றன! இந்திய தேசத்தின் எதிர்காலத்தைக் கவலைக்கிடமாக்கும் மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதில் கலவர காலத்து நாட்டு வெடிகுண்டுகள் நல்ல பங்காற்றுகின்றன! நாளைய சந்ததி சாதிச் சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல் வளர்க்கப் படாவிட்டால் வீதிகளெங்கும் இரத்த நிறத்தில் சாம்பல் பறக்கலாம்! பேரூந்தில் இடம் பிடித்தலிலிருந்து பாகப் பிரிவினை வரை வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அடிக்கவும் தடுக்கவும் தயாரான நிலையில் காத்திருக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது!