இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காக்கைகள்

எங்கள் வளமனைத்தையும் கொள்ளை கொண்டு போன கழுகுகளும் கள்ளப் பருந்துகளும் அவர்களுக்குள் அடித்துக் கொண்டால் சிதறி விழும் சில்லுகள் நாலு நமக்கும் வந்து விழுமென்ற நம்பிக்கையில் காக்கைகள் காத்துக் கிடக்கிறோம்

விதி

இரண்டு கண்களுமிழந்த மூன்று குழந்தைகள் கதறிக் கொண்டிருக்கின்றன முதற் குழந்தையின் தந்தை தன் கண்ணொன்றைக் கழற்றி வைத்து இதனை என் பிள்ளைக்கு இப்போதே பொருத்துங்கள் என்று கதறுகிறான் தன்னால் தன் தந்தை கண்ணிழக்க நேரிடுகிறதே என்று கதறுகிறது குழந்தையும் தந்தையில்லாத இரண்டாம் குழந்தையும் கதறுகிறது தனக்கும் இப்படிக் கண்ணைக் கழற்றிக் கொடுக்க ஒரு தந்தையில்லையே என்று விதியை நொந்து ஒன்றும் பேசாமல் ஊமைக் கொட்டானாய் நிற்கும் தன் தந்தை என்னதான் எண்ணிக் கொண்டிருக்கிறானோ என்று புரிந்து கொள்ள முடியாத மூன்றாம் குழந்தையும் கதறுகிறது இதற்குத் தந்தையில்லாமலே இருந்திருக்கலாமே என்று தலையிலடித்துக் கொண்டு

காதற்கவிதை

அழகு தோற்றம் தோல் தோள் முகம் வாய் உதடு புன்னகை கன்னம் கண்கள் கூந்தல் நெற்றி கழுத்து உடல் இடை தொடுதல் கெடுதல்... இவை எதுவுமற்ற காதற்கவிதை எப்படியிருக்குமென்று படித்துப் பார்க்க வேண்டும் முதலில்...

தளர்பிடி

நீ வசம்மாக மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் ஏதோவொன்றை உளறித் தப்பிக் கொள்கிறாய் அது உளறல் என்று எனக்குப் புரியவில்லை என்று எண்ணியும் கொள்கிறாய் அல்லது அது பற்றி அதிகம் எண்ணவே வேண்டியதில்லை என்று எண்ணிக் கொள்கிறாய் இறுக்கிப் பிடித்தால் மூச்சுத் திணறிச் சாகப் போவது நீ மட்டுமல்ல நாம் இருவருமே என்பதால் நானும் உன் உளறல்களை நம்பிக் கொள்வதாய் நம்ப வைத்து நகர்ந்து விடுகிறேன் எனக்குத் தெரியும் எனக்காக இப்படித்தான் நீயும் எத்தனையோ முறை பிடி தளர்த்திப் பின் வாங்கியிருக்கிறாய்... உறவு பிழைக்க உண்மைகள் அவ்வப்போது செத்துத்தானே ஆக வேண்டும் குறைந்த பட்சம் உறங்கியாவது போக வேண்டுமே...

கொல்லான்

பக்கத்து நாட்டை வரைபடத்திலிருந்தே நீக்க வேண்டும் என்பவன் சைவமாயிருந்தால் என்ன? அசைவமாயிருந்தால் என்ன??

காதலித்துப் பார்

காதலித்துப் பார் கண்மூடித்தனமாக ஆதரிக்கக் கற்பாய் கேள்வி கேட்காமல் வழிபடப் பழகுவாய் மக்களாட்சியில் மரியாதை குறையும் மனிதன் தெய்வமாகத் தெரிவான் குறைகளே காணாத மேன்மகனாவாய் எல்லாவற்றிலும் நல்லது காண்பாய் வேலை மறந்து விளம்பரம் செய்வாய் வழக்காடுவதில் வல்லவனாவாய் நடிப்பு உரைகள் மேல் பிடிப்பு வந்திடும் பித்தலாட்டங்களைச் சாணக்கியம் என்பாய் அட்டகாசங்களைத் தலைமைத்துவம் என்பாய் உலக அரசியலில் பண்டிதம் பெறுவாய் பொருளியல் மேதையாவாய் பொய்யையும் புரட்டையும் புகழப் பழகிடுவாய் எல்லாக் கேள்விக்கும் ஒற்றைப் பதிலளிக்கும் வித்தை கற்பாய் ஆகா ஓகோவென்று அடிக்கடிக் குதிப்பாய் கூடச் சேர்ந்து குதியாதோரை வெறுத்துப் பேசி விலக்கி விடுவாய் சென்ற ஆண்டின் நியாயம் இந்த ஆண்டு அநியாயமாகும் சென்ற ஆண்டின் அநியாயம் இந்த ஆண்டு நியாயமாகும் காதலித்துப் பார் தலைவன் ஒருவனைக் காதலித்துப் பார்

வைகோ - அம்புட்டுத்தேன்

சுற்றியிருந்த எல்லோரும் நிராகரித்த பின்னும் கூட என்னால் ஒரு சிலரை அப்படி எளிதில் புறந்தள்ள முடிந்ததில்லை. அப்படியான ஒருவர் சிதம்பரம் முதலில். அவருடைய அரசியலை மிகச் சிறிய வயதில் இருந்து கவனித்து வருகிறேன். அவரைப் போன்ற தலைவர் கிடைக்கத் தமிழர்கள் தம் தகுதியைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று கூட எண்ணியதுண்டு. வயிற்றுப் பிழைப்புக்காக அரசியலில் இருக்கும் ஆள் அல்ல அவர் என்று எண்ணினேன். மூப்பனாரின் மறைவுக்குப் பின் - தன்னை ஒரு தேசியத் தலைவர் போல வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த வேளையில் தன் தொகுதி மக்களே தன்னை மண்ணைக் கவ்வ வைத்த பின் அவரின் அரசியல் வெகுவாக மாறியது. மண்ணுக்கேற்ற அரசியலைப் பழக முயன்றார். அதற்கும் கூட மக்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கினேன். ஆனால் பின்னாளில் அவரும் ஒரு பெரும் கொள்ளைக்காரனைப் போல் - கூட்டம் சேர்ப்பவனைப் போல் அரசியல் செய்யத் தொடங்கி, முழு நம்பிக்கையையும் இழந்து விட்டார். அப்படியான இன்னொருவர் வைகோ. இவரையும் மிகச் சிறிய வயதிலிருந்து கவனித்து வருகிறேன். அப்போதிருந்தே அவரைக் கொண்டாடியவர்களும் உண்டு; முழுமையாக வெறுத்தவர்களும் உண்டு. இரண்டுமே தவறான காரணங்களுக்காக. எல்லோருமே

குழி

சாமி உன் பக்தர்கள் தோண்டும் பல குழிகளில் ஒன்று உனக்கானது போல் தெரிகிறதே

ஆண்டவரே

ஆண்டவரே மற்ற கடவுளரை அழிக்க மனிதர்களை ஏன் அனுப்பி வைக்கிறீர்?