இடுகைகள்

ஆகஸ்ட், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உளறல்.காம்

படம்
எத்தனையோ அரசியல் அறிஞர்கள், ஆன்மீக ஆய்வாளர்கள், இலக்கியச் சொற்பொழிவாளர்கள், தத்துவ ஞானிகளின் பேச்சுகளும் உரைகளும் கேட்கிறோம். ஒவ்வொருவருடைய பேச்சும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாக இருக்கிறது. சிலர் பேச்சில் அனல் பறக்கிறது; சிலர் பேச்சில் இடி இடிக்கிறது; சிலர் பேச்சில் கருத்துக்கள் கொத்துக் கொத்தாய் விழுகின்றன; சிலர் பேச்சில் நகைச்சுவையும் நையாண்டியும் அருவியாய்க் கொட்டுகின்றன; சிலர் பேச்சில் அடுக்கு மொழி வசனங்கள் அழகழகாய் அலங்காரம் செய்கின்றன; சிலர் பேச்சு கவிதைகளும் பாடல்களுமாக இனிக்கின்றன. சிலர் பேச்சில் எங்கெங்கிருந்தோ மேற்கோள்கள் வந்து இறங்குகின்றன. இப்படி அத்தனை விதமான பேச்சுகளிலும் ஒவ்வோர் அழகு. இவை எல்லாவற்றையும் விட குடிகாரர்களின் உளறலிலும் மனநிலைக் கோளாறு உள்ளவர்களின் பேச்சிலும் எனக்கொரு தனிவித சுவையை உணர முடிகிறது. சிலர் இயற்கையாகவே எது பற்றிப் பேசினாலும் தெள்ளத் தெளிவாகப் பேசும் ஆற்றல் படைத்தவர்கள். அவர்களைப் பேச விட்டுக் கேட்பதில் ஓர் அலாதி இன்பம் இருக்கிறது. அவர்கள்தாம் சரியான வாய்ப்புகள் கிடைக்கும் போது, மிகச் சிறந்த பேச்சாளர்கள் ஆவது. இயல்பாகவே பேசப் பிடிக்காதவர்கள் கூட

தோல்விக்கழும் துரோகி

படம்
அசார் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டத்தாலும் பரபரப்பான போட்டியின் பதற்றமான கடைசி ஓவரில் பறக்கடிக்கப்பட்ட சிக்சர்களாலும் கோப்பையை வென்றுவிட்ட கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் என்னைச் சுற்றியுள்ள எல்லோரும் அடிபட்ட பவுலர் அழுதுகொண்டே போன கேப்டன் ஏமாந்த ரசிகர்கள் எதிர்நாட்டவர் எல்லோருக்காகவும் என் மனம் கவலையில் இதற்கு முந்தைய தொடரில் இது எல்லாமே இந்தப் பக்கம் நடந்தது எப்போதுமே தோல்விக்காகத் துயரப் படுவதே தொழிலாகப் போய்விட்டது எனக்கு இந்நாடு வென்றாலும் எந்நாடு வென்றாலும் விளையாட்டு வெற்றிக்கு வெடி போடுவதுதான் தேசப் பற்றாகி விட்ட வேளையில் விளையாட்டு அரசியலானதும் அரசியல் விளையாட்டனதும் வியப்புமில்லை ஆச்சரியமுமில்லை அணுகுண்டு விளையாட்டிலும் அப்படித்தான் எதிரியைத் தாக்க எம்மிடம் இருக்கும் எண்ணிக்கையைச் சொல்லிச் சொல்லி துள்ளிக் குதிக்கிறார்கள் என்னைச் சுற்றியுள்ள எல்லோரும் எனக்கு மட்டும் அழியப் போகும் அந்நாட்டு அப்பாவிகள் விதவைகளாகப் போகும் வீரர்களின் மனைவிகள் அனாதைகளாகப் போகும் அவர்களின் பிள்ளைகள் வழக்கம் போலவே வருத்தங்கள்... அழியப் போவது அ

மக்கட்தொகை

படம்
இந்தியா இன்னும் இருளில் கிடக்கிறதாம்... ஓ! அதனால்தான் இனப்பெருக்கத்தில் இவ்வளவு வேகமோ?! * 1998 நாட்குறிப்பில் இருந்து...

ஊழலும் ஊழல் சார்ந்தவையும்

படம்
ஊழல்தான் இன்றைய சூடான விவாதப் பொருள். தனிப் பட்ட முறையில் நானும், ஊழல்தான் மற்ற எல்லாச் சமூகப் பிரச்சனைகளையும் விடப் பெரும் அபாயம் என்று நம்பும் ஓர் ஆள். தீவிரவாதம், பாதுகாப்பு, மதவாதம், பொருளியல், சுகாதாரம், இன்ன பிற வசதிகள் சார்ந்த பிரச்சனைகள் - இவை அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது ஊழல் என்பது என் கருத்து. ஏனென்றால், இவை எல்லாவற்றிலுமே ஊழல் நுழைந்திருக்கிறது. இவை அனைத்தின் தரக் குறைவுக்கும் ஊழல் ஒரு முக்கியக் காரணம். இந்த ஒரு பிரச்சனை தீர்க்கப் பட்டால் முக்கால்வாசிப் பிரச்சனைகள் தானாகவே சரியாகி விடும். ஓர் ஊழல்வாதிக்கு எதிராக எவ்வளவு பெரிய குறைபாடு கொண்ட எவர் நின்றாலும் அவருக்கே என் வாக்கு. ஊழல் பற்றிய ஓர் உரையாடலில் ஒருவர் சொன்னார் - "இந்திய ஊழலுக்கு நம் சமூகப் பின்னணியும் ஒரு காரணம்!". குறுக்கு வழியில் காரியம் சாதிப்பது காலம் காலமாகவே நம்மிடம் இருக்கும் ஒரு பயக்க வயக்கம். தெரிந்தவரை வைத்துக் காரியம் சாதிப்பது, சொந்தக்காரர் வைத்துக் காரியம் சாதிப்பது, குடும்பப் பின்னணியை வைத்துக் கூடுதல் பலன் அடைவது, அன்பளிப்புக் கொடுத்துக் காரியம் சாதிப்பது... இப்படி

யார் திருடவில்லை?

படம்
இன்னொரு படத்திலிருந்து கதையைத் திருடியிருக்கிறார் கதாசிரியர் இன்னொரு பாடலிலிருந்து வரிகளைத் திருடியிருக்கிறார் கவிஞர் இன்னொரு மொழியிலிருந்து மெட்டுகளைத் திருடியிருக்கிறார் இசையமைப்பாளர் நானும்தான்... அந்தப் படத்தைப் பார்க்க அப்பா சட்டைப் பையிலிருந்து பணத்தைத் திருடியிருக்கிறேன்! * 1998 நாட்குறிப்பில் இருந்து...

கரிசல் பூமி

படம்
தமிழ் நாடு சாதிக் கலவரங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 98-இல் எழுதியது... பாடுபட்டாலும் பலனை எதிர்பார்க்க முடியாத கீதாவுபதேச வாழ்க்கை வெயிலில் காய்ந்து விதைத்து உழுது விளைச்சல் ரசித்த உழைப்பின் பயனை இன்றுவரை அடையவில்லை இயற்கையை நம்பி ஏமாந்த விரக்தியில் விவரந் தெரிந்தவர்கள் விவசாயத்துக்கு டாட்டாக் காட்டிவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் நகரங்களை நோக்கி வியாபாரம் செய்தால் வெளக்கு வீட்டு வேலு போல அடுத்த வருசத் திருவிழாவுக்காவது அம்பாசிடரில் வரலாமென்ற ஆசைக் கனவுகளோடு பருவமழை பொய்த்துப் பஞ்சத்தின் பிடியில் தவிக்கும் பாவப்பட்ட சனங்களுக்கு புகலிடமுமில்லை பொழுதுபோக்குமில்லை கம்மாக்கரை ஆலமரத்துக்கும் போரடித்து விட்டது இவர்களின் புலம்பல்களைக் கேட்டதில் படித்து முடித்துப் பட்டம் விடும் வேலையில்லா இளசுகளின் வழிகாட்டுதலில் கரிசல் பூமி... கலவர பூமியாய்! * 1998 நாட்குறிப்பில் இருந்து...

நாட்குறிப்பிலிருந்து... - பாகம் 1

படம்
முந்தைய இடுகையில் நாட்குறிப்புடனான என் உறவு பற்றி எழுதியிருந்தேன். அதில் சொல்லியிருந்த படி, 1997-இல் இருந்து என்னுடைய அனைத்து நாட்குறிப்புகளையும் புரட்டியதில் கிடைத்த - இப்போதும் எனக்குப் பிடிக்கும் குறிப்புகளை இங்கு தருகிறேன். திருக்குறள் : தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. பொருள் : எதிரிகள் தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் கூடக் கொடிய ஆயதங்கள் இருக்கக் கூடும். கவனமாக இருக்க வேண்டும். திருக்குறள் : வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. பொருள் : வாளைப் போல் வெளிப்படையாக எதிர்த்து நிற்கும் பகைவர்களிடம் பயப்பட வேண்டியதில்லை. சிநேகிதர் போல் நடிக்கும் பகைவர்களிடமே பயப்பட வேண்டும். பலாப் பழம் இந்தியாவில் தோன்றியது. புளியம்பழம் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தது. கூரை மேல சோத்த வச்சா ஆயிரம் காக்கா பொருள் : திறமையிருந்தால், அது எல்லோருக்கும் தெரிகிற மாதிரியான இடத்தில் இருந்தால், வேண்டியவர்கள் தேடி வருவார்கள். பத்தாவது தடவையாக  விழுந்தவனுக்கு  முத்தமிட்டுச் சொன்னது பூமி  "ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!" -தமிழன்பன் ஆடும் வயித

தி.மு.க. - அன்றும் இன்றும் (பார்த்ததில் பிடித்தது)

படம்
மேல் வரிசையில் உள்ள முதல்வரைத் தவிர்த்து எஞ்சிய நால்வர் பற்றி எழுத வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக இந்தப் படத்தைச் சேமிப்பில் வைத்திருந்தேன். அது இப்போதைக்கு முடியுமா என்ற குழப்பம் வந்து விட்டதால், சரி - படத்தையாவது வீணாக்காமல் போட்டு விடுவோம் என்று போட்டு விட்டேன். எந்தப் பத்திரிகையில் வந்ததென்று நினைவில்லை. அனேகமாக தினமணியாக இருக்க வேண்டும். அதில்தான் மதியின் ஓவியங்கள் வரும், அல்லவா? எனவே, நன்றி: மதிக்கும் தினமணிக்கும் - மணியான படத்துக்கு!

அமெரிக்காவின் அஅஅ...அஅ+... (USAAA To USAA+)

படம்
நண்பர் சரவணக்குமாரிடம் இருந்து "உலகமயமாவோமே!" என்று சொல்லி இன்னொரு தலைப்பு. "அமெரிக்காவின் அஅஅ தரம்  அஅ+ ஆகக் குறைக்கப்பட்டது பற்றிப் பேசலாமே!" என்றார். ம்ம்ம்... அதை ஏன் விட்டு வைக்க வேண்டும்? வாருங்கள் கடையலாம். இதோ... எப்போதும்போல், அடிப்படையில் இருந்து ஆரம்பிப்போம். எங்கு களைப்பாகிறோமோ அங்கு நிறுத்துவோம். அதற்கு முன்பு எனக்கும் பொருளியலுக்குமான தொடர்பைக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். சின்ன வயதில் எப்போதுமே எனக்கு என்னை விடப் பெரியவர்களோடு இருப்பது மிகவும் பிடிக்கும். எங்கள் தெருவில் சதக் அப்துல்லா என்றொரு சீனியர் நண்பர் இருந்தார். என்னை விடப் பல வருடங்கள் மூத்தவர். பல வருடங்கள் என்றால்? தெளிவில்லை. சரியாகச் சொல். எத்தனை வருடங்கள்? சரி. ஐந்து வருடங்கள். நான் ஏழு படித்துக் கொண்டிருந்தபோது அவர் பன்னிரண்டு படித்துக் கொண்டு இருந்தார். மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை பெரும்பாலும் நான் இரண்டாவது ரேங்க்தான். ஆறு வருடமுமே முதலில் வந்தது ஒரே ஆள் இல்லை. வெவ்வேறு ஆட்கள். முதலிடத்துக்கு மட்டும்தான் எப்போதும் போட்டி. இரண்டாவது இடத்துக்கு இல்லாத மாதிரிப் பார்

ஆரிய-திராவிடம்: போரா? அக்கப்போரா??

படம்
சக ஆங்கிலப் பதிவர் ஒருவர் ஆரிய-திராவிடப் பிரச்சனையில் என்னுடைய கருத்துகள் பற்றிக் கேட்டிருந்தார். கடந்த சில நாட்களில் அவர் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கோர் இடுகையின் பெயரைச் சொல்லிப் படிக்கச் சொன்னேன். உன் கேள்விக்கான பதில் அதில் இருக்கிறதென்று. எல்லாக் கேள்விகளுக்கும் கிடைக்கும் ஒரே மாதிரியான இந்த இயந்திரத்தனமான பதிலில் கடுப்பாகி விட்டார் போல்த்தேரிகிறது. இம்முறை வித்தியாசமாக நான் இதுவரை பதிவுலகில் வாய் திறந்து பேசியிராத புதியதொரு விஷயம் பற்றிக் கேட்டார். அத்தகைய கேள்விகளுக்கும் என்னிடம் இயந்திரத்தனமான பதில் ஒன்று இருக்கிறது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாகப்பட்டது - "ம்ம்ம்... நீண்ட நாட்களாகவே இதைப் பற்றி ஓர் இடுகை எழுதலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறேன்!" என்பேன் அல்லது "ம்ம்ம்... அது ஏற்கனவே என் லிஸ்ட்டில் இருக்கிறது!" என்பேன். எனவே, அவருக்கும் அந்த இரண்டில் ஒன்றைத்தான் பதிலாகக் கொடுத்தேன். இத்தோடு என்னிடம் கேள்வி கேட்பதையே நிறுத்தி விடுவார் என நினைக்கிறேன். :) சரி. மேட்டருக்குள் போவோம். ஆரிய-திராவிடப் பிரச்சனை பற்றி என்ன நினைக்கிறேன்? என்னைப்

நவீன ஓவியங்கள் (மாடர்ன் ஆர்ட்ஸ்)

படம்
மாடர்ன் ஆர்ட் எனப்படும் நவீன ஓவியங்கள் எனக்கு எப்போதுமே புரிபடுவதில்லை. இவர்கள் ஏன் இப்படியெல்லாம் புரியாத விதமாக ஏதோதோ கிறுக்கி நம்மை ரசிக்கச் சொல்லிப் படுத்துகிறார்கள் என்று தோன்றும். அவற்றைப் பார்த்து விட்டு, "ஆகா!", "ஓகோ!" என்று சிலாகிப்போரைக் கண்டால் ஒருவித சந்தேகம். இவர்கள் எல்லாம் புரிந்துதான் இப்படி நடந்து கொள்கிறார்களா அல்லது தம்மைப் புத்திசாலியாகக் காட்டிக் கொள்வதற்காக இப்படியெல்லாம் நடிக்கிறார்களா என்று கூடத் தோன்றும். இயலாதோர் எல்லோருமே இப்படித்தானே. இயன்றவர்களின் திறமை மீதான பொறாமையை இப்படியெல்லாம் வெளிப்படுத்துவர். அதை உணர்ந்தபோது அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று துடியாகத் துடித்தேன். முடியவில்லை. சரி. ஏன்தான் இப்படியெல்லாம் வரைகிறார்கள் என்று புரிந்து கொள்ளவாவது வேண்டும் என்று முயன்றபோது, கசக்கிய மூளையில் இருந்து எனக்குக் கிடைத்த கருத்து இதுதான்... ஆதியில் ஓவியர்களின் வேலையென்பது காண்பவை அனைத்தையும் தத்ரூபமாக வரைவதாக இருந்தது. அதாவது, இன்று கேமராக்கள் செய்த வேலையை அவர்கள் செய்து வந்தார்கள். அரசர்களும் செல்வந்தர்களும் அவர்களுடைய படங்கள் காலம் க

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!

படம்
வாசிப்பதை விட அதிகம் எழுதிக் கொண்டிருந்த ஆள் நான். எழுதும் அளவுக்கு வாசிப்பதில் ஆர்வமும் இருக்க வில்லை. இருக்க வில்லை என்றில்லை. எழுதும் அளவுக்கு இருக்க வில்லை. முதற் சிறுகதை எழுதி முடித்த போது, சில சிறுகதைகள் படித்திருந்தேனே ஒழிய, சிறுகதைத் தொகுப்பு என்று முழுதாய் ஒரு நூல் கூட முடித்ததில்லை. வார இதழ்களில் தொடர்கள் படிப்பது பிடிக்கவே பிடிக்காது. ஏனென்றால், அதற்கு வாராவாரம் இதழ் வாங்க வேண்டியிருக்கும். நாவல் என்ற படிவம் படைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. முடியுமா என்ற நம்பிக்கை இல்லை. அவற்றைப் படிக்கவும் நிறையப் பொறுமை வேண்டியிருக்கும் என்றெண்ணி அவற்றின் பக்கமும் போவதே இல்லை. இப்படியாகப் போய்க் கொண்டிருக்கையில் எழுத்து வடிவங்களிலேயே மேலானது வரலாற்று நாவல்கள்தான் என்று சொல்லி அவற்றைப் படித்து முடித்திருந்த நண்பன் மணிகண்டன் வந்து கல்கியின் சில நாவல்களைப் படிக்கச் சொன்னான். படித்த முடித்த போது எனக்கும் கிட்டத்தட்ட அந்தக் கருத்தில் ஏற்பு ஏற்பட்டது. பார்த்திபன் கனவில் ஆரம்பித்து, பொன்னியின் செல்வன் படித்து, அதன் பின்பு படித்ததே சிவகாமியின் சபதம். பார்த்திபன் கனவு குறிப்பு எடுத்ததாக நினைவ