இடுகைகள்

ஜூலை, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாதுகாப்பு

அன்னியர் நிறைந்த தொடர்வண்டியில் இரவெல்லாம்  தனியாகப் பயணிக்கப் போகும் மகளின் பாதுகாப்பு பற்றி எப்போதும் போல் கவலையில் ஆழ்ந்திருந்தார் தந்தை வண்டியேறும் வேளை வந்தேறிய தோழனின் வருகை எதிர்பாராமல் நிகழ்ந்தது எனினும் மகளுக்குப் பாதுகாப்புக் கூட்டியிருப்பதாக எண்ணி வழக்கத்துக்கு மாறான நிம்மதியோடு வழியனுப்பி வைக்க உதவியது வழியனுப்பி விட்டுத் திரும்புகையில்தான் புதிதாக ஏதோ உரைத்தது அன்னியர்களோடு பயணித்த நாட்களைவிட அதிகம் பயப்பட வேண்டியது இன்றுதானோ?!

மேலானவன்

நான் குறைபாடுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அப்பாற்பட்டவனல்லன் என்பதை நன்கறிந்தவனே உங்கள் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் விளக்கமளிக்க வேண்டிய கடமை எனக்கிருப்பதையும் அதற்குரிய இடத்தில் நான்  அமர்ந்திருப்பதையும் நன்கறிவேன் ஆனாலும் குற்றஞ்சாட்டும் ஒவ்வொருவரும் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களில்லை என்பதாலே என் வேலை  எனக்கு எளிதாகிடுகிறது பெரிய இடத்தில் அமர்ந்துகொண்டு பெரும்பெருங் குற்றங்கள் புரிபவன் நான் சிறிய இடத்தில் இருந்துகொண்டு சிற்சிறு குற்றங்கள் புரியும்  உம்மை அம்பலப்படுத்துவதற்கும் உமக்கு என்னைப் பற்றிச்  சிந்திக்க நேரமில்லாமல் செய்து உம்மைக் காத்துக் கொள்ளவே போராடும் வகையில் பார்த்துக் கொள்ளவும் என் ஊழியர்களே போதும் எனும்போது எதற்காக நான் என் மேலான நேரத்தை உமக்காக விளக்கமளிப்பதில் வீணடித்துக்கொள்ள வேண்டும்?!

கடனாளியாக்கல்

நீ என்னவெல்லாம் எதிர்பார்த்தாய் என்று எனக்குத் தெரியாது ஆனால் ஒருபோதும் ஒன்றும் வாய் விட்டுக் கேட்டதில்லை நான்தான் உன்னைக் கடனாளியாக்க ஆசைப்பட்டு அத்தனையும் செய்தழிந்தேன் கேட்காமல் வந்தது என்பதாலோ என்னவோ நீ கடன்பட்டதாகவே கருதுவது போற் தெரியவில்லை கட்டியெழுப்பிய கோட்டைகள் உடைய உடைய பாதிக் கடனாவது அடைபடாதோவென்று  பரிதவிக்கத் தொடங்கினேன் எல்லாம் தரைமட்டமானபின் இப்போது உன்னைக் கடனாளியென்று உணரவாவது வைத்துவிட வேண்டுமென்று உழைத்துக் கொண்டிருக்கிறேன்

சரி

எப்போதும் நான் நினைப்பதே சரியென்று நம்புகிறேன் குறைந்த பட்சம் மற்றவர்களைவிடச் சரிக்கு அருகாமையில் இருப்பதாக நம்புகிறேன் அவ்வப்போது முன்பைவிட மேலும் சரிக்கு அருகே நெருங்கிவிட்டதையும் உணர முடிகிறது அப்படிச் சரி நோக்கி நகர்கையில் எல்லாம் என்னை விடச் சரியைவிட்டு விலகி நிற்பவர்கள் என்று  நான் எண்ணிக்கொண்டிருந்தவர்கள் பலரையும் கடந்து தான் முன்னேறுகிறேன் ஆனாலும் இப்போதைக்கு நானே சரிக்கு மிக அருகாமையில் இருப்பதாக உணர்கிறேன் சரியுமே கூட அவ்வப்போது இடம் மாறித்தான் விடுகிறது முன்பை விட இப்போதெல்லாம் வேகவேகமாகவே இடம் மாறி விடுகிறது

பட்டுக் கற்றல்

மீன் தராதே தூண்டில் கொடு என்றான் முதல் ஞானி தூண்டிலும் கொடாதே பிடிக்க மட்டும் கற்றுக்கொடு என்றான் அடுத்த ஞானி எவருக்கும் இழப்பில்லாமல் கற்று மட்டும் கொடுக்க முயன்றபோது... இலவசக்கல்வி உன்னைத்தான் இளக்காரமாக்கும் பட்டுக் கற்றலினும் சிறந்த பாடமில்லை ஒதுங்கிக் கொள் என்றான் இன்னொரு ஞானி போங்கடா ஞானிகளா நானும் பட்டே கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு மீன்களை வாரிப் பங்கு போடத் தொடங்கிவிட்டேன்!

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் சுஜாதா ஒருவர். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்களுக்குக் கிடைத்த இடம் அவருக்குக் கொடுக்கப்படாவிட்டாலும் அவர்களைவிட அதிகம் பேரால் போற்றப்பட்டவர். சுஜாதாவை ஏன் அவருடைய வாசகர்கள் போற்றும் அளவுக்கு இலக்கியவாதிகள் போற்றுவதில்லை என்ற கேள்வி எப்போதும் இருந்து வருகிறது. அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுவது, அவர் ஜெயகாந்தனைப் போல சமூகத்தின் மீது அக்கறையும் கோபமும் கொண்டு அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை அதிகம் எழுதாமல், சிக்கலான சமூக-அரசியல் பிரச்சனைகளுக்குள் தலையைக் கொடுக்காமல், தன் தனிப்பட்ட மனநிறைவுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேல்நடுத்தர வர்க்க - ஓரளவு படித்த மக்களுக்காகவும் அவர்களுடைய வாழ்க்கையையே அதிகம் எழுதியவர் என்பதாக இருக்கலாம் என்பது (இது போக நம் சிற்றறிவுக்குப் புலப்படாத பல்வேறு மற்ற காரணங்களும் இருக்கக் கூடும்). ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ படித்தபோது அதுவே மேலும் உறுதிப்பட்டது. இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் பதினான்கு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம்மை ஈர்க்கும். அடித

வலியின் வலி

வலிபடுதலினும் பெருவலியல்லதான் வலிபடுதலை அருகிலிருந்து காண்தலும் காணச் சகியாமல் துடித்தலும் படுபவருக்கு படுவலி உடல்வலி பக்கத்திலிருந்து பார்ப்பவருக்கு? வலியின் வலியை உணர்ந்திடப் போராடும் பாடும் வலி போக்க முடியாத வழிப்போக்கனாக உடன் கிடந்து வாடும் ஆற்றாமையும் உயிர்வலி அல்லவா?