இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் - என் தனிப்பட்ட நிலைப்பாடுகள்

எனக்கு விபரம் தெரிந்து அரசியல் கவனிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து , ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் இவர்கள் வென்றால் நல்லது அல்லது இவர்கள் தோற்றால் நல்லது என்று கணக்குகள் போட்டு வருகிறேன். எந்தக் காலத்திலும் இந்தக் கட்சிதான் எங்கள் கட்சி, அதனால் அவர்கள்தாம் வெல்ல வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததாக எனக்குத் தெரியவில்லை. மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை. நிலைப்பாடு எடுப்பதில் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிப்பிட்ட பாணி இருக்கிறது; சில அடிப்படைக் காரணங்கள் – உள் நோக்கங்கள் இருக்கின்றன. அப்படி நான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது ஊழலின்மைக்கு. அதற்கடுத்தபடியாக மக்களுக்கான செயல்பாடு. அதன்பின்தான் கொள்கை, கோட்பாடு, சாதி-மத-இன-மொழிச் சார்புகள் போன்ற மற்ற காரணிகள் எல்லாம். யாருக்கு எப்படியோ எனக்கு என்ன தோன்றியது என்பதைப் பற்றிய ஒரு பார்வைதான் இந்தக் கட்டுரை. எனவே மொத்தக் கட்டுரையும் உங்களுக்கு உடன்பாடாக இருக்கப் போவதில்லை. கண்டிப்பாகப் பல முரண்பாடுகள் வரும். கவனம்! ஊழல் செய்யாமல் மட்டும் இருந்து விட்டால் போதுமா? அது நல்லாட்சி ஆகி விடுமா? ஊழல் அரசியலில

விசாரணை

சமீபத்தில் வந்த திரைப்படங்களில் பெரிதும் பேசப்பட்டது ‘விசாரணை’. படத்தின் முதற் சில விளம்பரங்களைப் பார்த்த போதே அது ஒரு செமப் படமாக இருக்கும் என்று தோன்றியது. அதுவும் வெற்றிமாறனின் படம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. இதுவரை அவர் எடுத்த படங்கள் அனைத்துமே அவருடைய பெயருக்கென்று சில எதிர்பார்ப்புகளை உருவாகியிருக்கின்றன. இந்தப் படமும் அதை உறுதிப் படுத்தியிருக்கிறது. கச்சிதமான நடிகர் தேர்வும், அவர்களிடமிருந்து இயல்பான நடிப்பை வெளிக் கொணரும் இயல்பான காட்சியமைப்புகளுமே வெற்றிமாறனின் வெற்றிச் சூத்திரங்கள். அவருடைய முதற்படமான ‘பொல்லாதவன்’ பார்க்கவில்லை. அடுத்து வந்த ‘ஆடுகளம்’ பார்த்தேன். மிகவும் பிடித்தது. தேசிய விருது பெற்றதற்காக மட்டமல்ல. கோழிச்சண்டை என் சிறு வயதில் நான் கண்ட அனுபவம். அதுவும் தென் தமிழகத்துப் பின்னணியிலேயே காட்டியிருந்தது நம்மை மீண்டும் குழந்தைப் பருவத்துக்கே அழைத்துச் சென்றதால் மிகவும் சொக்க வைத்து விட்டது. அதில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், வெற்றிமாறனுக்குச் சற்றும் தொடர்பில்லாத களம் அது. கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த பாரதிராஜாவும் இளையராஜாவும் தம் இயல்பான படைப்புக

த ஜங்கிள் புக் (THE JUNGLE BOOK)

சிறுவயது முதலே திரைப்படங்களே அதிகம் பார்ப்பதில்லை. அதிலும் ஆங்கிலப் படங்கள் பக்கம் மழைக்கும் ஒதுங்கியதில்லை. சமீபத்தில்தான் ஓரளவு ஆங்கிலப் படங்களும் பார்க்கத் தொடங்கினேன். அதுவும் வான்வழிப் பயணங்களின் போது பொழுது போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று பார்த்த சில படங்கள்தாம். இப்போது வந்திருக்கும் ஆங்கிலப் படங்களில் ‘ த ஜங்கிள் புக் ’ (தமிழில் ‘காட்டு நூல்’ என்று வைத்துக் கொள்ளலாம்) நன்றாக இருக்கிறது என்று ஆங்காங்கே பேச்சு. அதுவும் குடும்பப் படம் என்று வேறு கேள்வி. ஆங்கிலப் படங்களில் குடும்பப் படம் என்றாலே அதில் முக்கால்வாசிக்கும் மேல் குழந்தைகளுக்கான படங்களாகத்தான் இருக்கும் போல. குடும்பம் என்றால் குழந்தைகளும் அடக்கம். அவர்களும் சேர்ந்து பார்க்கிற மாதிரியான படங்கள் என்றால் அவர்களுக்காகவே எடுக்கப்படும் படங்கள் மட்டுமே! எப்புடி ஐடியா?! பெரியவர்களுக்காக எடுக்கப் படும் பெரும்பாலான படங்கள் குழந்தைகளும் காண முடியாது என்பதால், குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்களையே எல்லோருக்குமானதாக ஆக்கிவிடுகிறார்கள். குழந்தைகளுக்குள் பெரிய ஆட்களுக்கான சிந்தனை வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்கள்,

இசை

சில இடங்களுக்கும் பொருட்களுக்கும் அவற்றைக் கடக்கும் போதெல்லாம் நினைவுகளைக் கிளறுவதில்  ஏன்தான் இவ்வளவு இன்பமோ என்று  எண்ணிக் கடந்து கொண்டிருக்கையில் ஓடத் தொடங்கியது அப்பாடல்... பல இடங்களையும் பொருட்களையும்  பிணைத்தே நினைவுக்குள் கொண்டு வந்து... எளிதில் கடந்து விட முடியாமல்...

இறுதிச் சுற்று

நீண்ட காலத்துக்குப் பின் மாதவன் நடித்து வெளிவந்திருக்கும் ‘இறுதிச் சுற்று’ பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது நேற்று. ‘அலை பாயுதே’ நடிக்கும் போதே அவர் கொஞ்சம் தாமதமாக வந்திருப்பது போல் பேசப்பட்டது. இப்போது அவருக்கும் வயது கிட்டத்தட்ட ஐம்பதைக் கடந்திருக்க வேண்டும். அதையும் கருத்தில் கொண்டே அவருடைய கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகி அவரை “கெழம்”, “கெழம்” என்று திட்டுவதன் மூலம் மாதவனை அவருடைய பழைய துறுதுறு இளைஞன் அடைப்புக்குள் இருந்து வெளியே கொண்டு வந்திருப்பதும் நன்றாகவே இருக்கிறது. தோற்றத்திலும் இதுவரை அவரை நாம் பார்த்திராத மாதிரியாக – நீண்ட தலைமுடி தாடியோடு காட்டியிருக்கிறார்கள். மாதவனுக்கு இப்போதுதான் தமிழ்த் திரையில் ஆட்டம் தொடங்கப் போகிறது என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்ததால் பெரும் எதிர்பார்ப்புடனே பார்க்கத் தொடங்கினேன். நல்ல படந்தான். விளையாட்டு சார்ந்த படங்கள் அதிகம் தமிழில் வந்ததில்லை என்பதால் இது அத்தகைய படங்களிலேயே சிறந்த படமாக இருக்கும் என்கிறார்கள். இருக்கலாம். இந்தப் படத்தைத் தொடர்ந்து இது போன்ற படங்கள் நிறைய வெளிவந்தால் இதை விடச் சிறப்பான படங்கள் கூடிய விரைவிலேயே

வழிபாடு

நிலைமை சரியில்லாத போது அவரிடம் சென்றோம் ஏதோ தவறு நடந்திருக்கிறது வாரம் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள் என்றார் நிலைமை மோசமான போது மீண்டும் அவரிடம் சென்றோம் இதுதான் நடந்திருக்க வேண்டும் தினமும் வழிபாட்டோடு இதையும் சேர்த்துச் செய்யுங்கள் என்றார் நிலைமை கைமீறிப் போய்விட்டது மீண்டும் அவரிடமே செல்வது பற்றியும் வேறொருவரிடம் செல்வது பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்

தாமிரம்

தாமிரம் சேர்ந்தால்தான் தனக்கு மரியாதை என்று எண்ணிக் கொண்டது... தாமிரம்...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிர்ச்சித் தோல்விகள்

தேர்தல் நேரம் என்பதால் அரசியல் சார்ந்த சிந்தனைகளையும் ஆராய்ச்சிகளையும் தவிர்ப்பது மிகவும் சிரமமாகவே உள்ளது. ஒவ்வொரு தேர்தலும் நமக்கு மீண்டும் உயிர்த்தெழுப்பிக் கொண்டுவருகிற அரசியல் ஆர்வம் போலவே, ஒவ்வொரு தேர்தலும் எவரும் எதிர் பார்க்காத பல வியப்புகளையும் அதிர்ச்சிகளையும் வாரி இறைத்து விட்டுத்தான் செல்கிறது. அப்படி இதுவரை நடந்த ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் காணப்பட்ட அதிர்ச்சித் தோல்விகள் பற்றி ஒரு பார்வை பார்த்து வரலாம் என்று கிளம்பியதன் விளைவே இப்பதிவு. விடுதலை பெற்ற இந்தியாவில் 1952-இல் நடைபெற்ற சென்னை மாகாண முதல் சட்டமன்றத் தேர்தலில், பிற்காலத்தில் முதலமைச்சர் ஆகும் அளவுக்குப் பெரிய ஆளான பக்தவச்சலம் பொன்னேரி தொகுதியில் தோல்வியைத் தழுவி இருக்கிறார். நம் காலத்தில் காங்கிரசில் இருந்து பாஜக போன ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தந்தை மோகன் குமாரமங்கலம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சேலம் நகரத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றிருக்கிறார். மோகன் குமாரமங்கலத்தின் தாய் ராதாபாய் சுப்பராயன் திருச்செங்கோட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். மங்களூர் மண்ணில் பிற