இடுகைகள்

மே, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அ.தி.மு.க.அமைச்சர்கள் யார் யார்?

படம்
1. ஜெயலலிதா - இவர் தான் முதல்வர். ஐந்து வருடமும் கண்டிப்பாக நீடிப்பார் என்று என்னால் உத்திரவாதம் கொடுக்க முடிந்த ஒரே ஆள். எத்தனை பேர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்தான் எல்லாமுமாக இருப்பார். காவல் துறை கண்டிப்பாக இவர் கையில் இருக்கும். நிதித் துறையும் இருக்க வாய்ப்புண்டு. கொள்ளை அடித்ததைப் பிடுங்கி அரசுடைமையாக்கும் ஒரு துறை அமைக்கப் பட்டாலும் நல்லது. கேபிள் டி.வி. களை அரசுடைமையாக்குவதும் இத்துறைக்குக் கீழேயே வர வேண்டும். 2. பன்னீர் செல்வம் - முன்னாள் முதல்வர். அவர் முன்னால் இதைச் சொன்னால் மகிழ்ச்சியடையாமல் கோபப் படுவார் - பயப் படுவார். கண்டிப்பாக நிதித் துறை இவருக்கில்லை. அதற்கான விபரம் இவருக்கு இருக்கிறது என்று யாராவது கவனித்திருந்தால் கருத்துரை இடுக. கண்டிப்பாக வெளியிடப்படும். பொதுப் பணித் துறையில் உள்ள நிதிகளை மட்டும் கவனிக்கும் பணி கிடைக்கலாம். சென்ற முறை அந்தப் பதவியில் இருந்தபோது நன்கு கவனித்து விட்டதாக நெருங்கிய தகவல்கள் நிறையக் கிடைத்தன. ஆனாலும், மிகவும் நல்லவர். அதிர்ந்து பேச மாட்டார். அரசியல்வாதிக்குரிய வேறு எந்தக் குறியீடும் தெரியாது. மற்றபடி, அ.தி.மு.க.வில் அம்மாவ

இராமன் ஆண்டாலும்... இராவணன் ஆண்டாலும்...

படம்
விடிந்தால் தமிழ் நாட்டில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆட்டம் போடப் போகிற - வண்டி வண்டியாகக் கொள்ளையடிக்கப் போகிற குடும்பம் (திருக்குவளைக் குடும்பமா? மன்னார்குடிக் குடும்பமா?) எதுவென்று தெரிந்து விடும். இரண்டுமே கொள்ளைக் குடும்பங்கள் என்றபோதும் பல காரணங்களுக்காக ஆட்சி மாற்றம் நிகழ வேண்டுமென்று காது கிழிகிற அளவுக்குச் சங்கு ஊதிய செவிடர்களில் நானும் ஒருவன் (நானே செவிடனாக இருந்து விடுகிறேன்; மக்களைச் செவிடன் என்றால்தான் கோபப் படுவீர்களே!). வெண்ணெய் திரண்டு வந்த நேரம் பானையை உடைத்த ஒட்டு மொத்தத் தமிழகத்தின் அம்மாவின் கூட்டணிக் கோமாளித் தனங்களைப் பார்த்து விட்டு இந்த முறை யார் வென்றாலும் பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற அடித்தட்டுக்கும் நடுத்தட்டுக்குமே உரிய கையாலாகாத் தனமான நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டேன். அதன் பிறகு இருவரில் எவர் வெற்றி பற்றிக் கேட்ட போதும் மனம் வெம்பியது; இருவரில் எவர் தோல்வி பற்றிக் கேட்ட போதும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. இருவருமே தோற்க வேண்டும் என்று விரும்பும் வீணாப்போன சிறுபான்மைக் கூட்டத்தின் ஓர் அங்கத்தினன் நான். இருவர் தோற்பதிலும் சில நன