இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழையன கழிதலும் & யாதும் ஊரே!

படம்
என் நண்பன் ஒருவன் அடிக்கடி BURN THE BRIDGES என்று சொல்வான். அதன் நேரடிப் பொருள் "பாலங்களைக் கொளுத்து" என்ற போதிலும் அது சொல்லப் படும் இடம் பொதுவாக, "பழைய உறவுகளை மற்றும் நினைவுகளைக் கொளுத்து!" என்று அறிவுரைப்பவையாக இருக்கும். நம்முடைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'பழையன கழித்தல்' ஓரளவு அதற்கு அருகில் வரும். ஆனாலும் அதில் அவ்வளவு மூர்க்கம் தெரியவில்லை. அது போகிப் பண்டிகைக்கே உரித்தான ஒரு சொல்லாடலாக நம் மனதில் பதிந்து விட்டது ஒரு காரணமா என்று தெரியவில்லை. 'பழையன கழித்தல்' என்பதே பாய்-தலையணை முதலான பழைய தட்டு முட்டுச் சாமான்களைக் கொளுத்துதல் என்றே மனதில் தோன்றுகிறது. அதே வேளையில் அவர்களின் பாலத்தைக் கொளுத்தும் வேலையென்பது உறவு, நினைவு மற்றும் அவற்றுக்கும் மேலான பலவற்றையும் குறிக்கக் கூடிய கனம் கூடிய சொல்லாடல். மேலோட்டமாக இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை என்ற போதிலும் அந்தச் சொல்லாடல் மிகவும் பிடித்திருந்தது. எல்லோருக்கும் என்றில்லாவிட்டாலும் சிலருக்கு இது ஒரு முக்கியத் தேவையாக இருக்கிறது. அதில் நீங்கள் எப்படி என்று தெரியவில்லை. :) நாம் படிக்கும் இ

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கட்சிவாரிக் கணக்குகள் (3/3)

படம்
முதல் பாகத்தில் நீண்ட முன்னுரையும் தமிழகத்தின் இப்போதைய முதல் இரண்டு கட்சிகளான அதிமுக மற்றும் திமுக பற்றியும் பார்த்தோம். இரண்டாவது பாகத்தில் ஓரளவுக்குப் பெருங்கனவுகள் காணத் தகுதியுடைய மற்றும் அதற்கான வாய்ப்பிருந்தும் கெடுத்துக் கொண்ட அடுத்த நான்கு கட்சிகள் (தேமுதிக, காங்கிரஸ், பாமக மற்றும் மதிமுக) பற்றிப் பார்த்தோம். இந்தப் பாகத்தில் இன்னும் அழிந்து விட்டன என்று சொல்ல முடியாத - முயன்றால் இன்னும் ஓரளவுக்குப் பெரிதாக - தவிர்க்க முடியாத சக்தியாக மாறத் தக்க கட்சிகள் பற்றிப் பார்ப்போம். பாஜக : இந்தத் தேர்தலில் மற்ற எல்லோரையும் விட அதிகமாக மகிழ்ச்சி அடைய வேண்டிய கட்சி என்றால் அது பாஜகதான். இரண்டு நகராட்சிகள் என்றால் சும்மா இல்லை. நாகர்கோவில் - வென்று விடுவார்கள் என்று தேர்தலுக்கு முன்பே சொல்லியிருந்தேன். மேட்டுப் பாளையம் எதிர் பார்க்கவே இல்லை. இரண்டுமே மத ரீதியாகப் பிரச்சனைக்குரிய பகுதிகள். ஒன்று கிறித்தவர்களுடனான் மோதல் நிறைந்த பகுதி. இன்னொன்று முகமதியர்களுடனான மோதல் நிறைந்த பகுதி. ஆக, அவர்களின் வளர்ச்சி என்பதே மதத்தை அடிப்படையாக வைத்துத்தான் இருக்க முடியும். கொஞ்சம் வித்தியாசமாகச் சொ

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கட்சிவாரிக் கணக்குகள் (2/3)

படம்
முந்தைய பாகத்தில் நீண்ட முன்னுரையும் தமிழகத்தின் இப்போதைய முதல் இரண்டு பெரிய கட்சிகள் பற்றியும் பார்த்தோம். எந்தச் சந்தேகமும் இல்லை. அவைதான் இப்போதைக்குத் தமிழகத்தின் இரு மிகப் பெரிய கட்சிகள். நமக்குப் பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும். இந்தப் பாகத்தில் அடுத்த நான்கு இடங்களில் உள்ள கட்சிகள் (தேமுதிக, காங்கிரஸ், பாமக, மற்றும் மதிமுக) பற்றிப் பார்ப்போம். அடுத்த பாகத்தில் மிச்சமிருக்கும் உதிரிகள் அனைவர் பற்றியும் பார்ப்போம். அவர்களும் எளிதில் தவிர்க்கத் தக்க சக்திகள் அல்லர். அவர்களுக்கென்று விரலுக்குத் தக்க வீக்கமாய் சில கணக்குகள் இருக்கின்றன. அவற்றையும் பார்த்து விடுவோம். தேமுதிக : ஆரம்பத்திலேயே நிறையப் பேர் சொன்னார்கள் - இந்த ஆள் எதற்கும் பிரயோசனமில்லாத ஆள் என்று. நம்ப முடியாமல்தான் இருந்தது அப்போது. இப்போது நிரூபித்து விட்டார். உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து அடக்கி வாசித்தது சரிதான். அதற்காக செயல் படாமலே இருப்பது எப்படிச் சரியாகும்? எதிர்க் கட்சித் தலைவராக இருப்பதுதான் பேசுவதற்கு ஏதுவான பொறுப்பு. முதல்வராக இருப்பதை விட எளிதான பொறுப்பு. இதில் ஒன்றும் பிடுங்கா விட்டால் உறுதியாக

ஆயிரங் காலத்துப் பயிர்

முடிந்து விட்ட எல்லோரும் சொல்வார் எண்ணியது போல் இனிப்பல்ல இப்பயிர் கக்க வைக்கும் கசப்பு என்று எதையும்  முழுதாய் நம்பத் தேவையில்லை அதே வேளையில்... எவருக்கு எப்படியோ 'எனக்கு' இனிக்கத்தான் செய்யும் என்று எதிர்த்துப் பேசி விட்டு அதை அனுபவித்தே தீருவேன் என்று அடம் பிடித்து ஓடி வருவோரையும் எப்போதும் ஏமாற்றுவதில்லை இந்தப் பயிர் அன்போடு வரவேற்று அமிர்தம் கொடுத்து ஆற அமர அமர வைத்து விட்டுத்தான் அடுத்து வேலையைக் காட்டும் முதலில் மயக்கும் அதே அமிர்தம் முப்பதும் அறுபதும் முடிந்த பின்னால் மருந்தாய்க் கசந்திடும் மாயம் மட்டும் மனிதக் கணக்குகளில் மாட்ட மறுக்கிறது முதலில் கிளர்ச்சியோடு ஆரம்பிப்பதுதான் முப்பதும் அறுபதும் முடிந்த பின்னால் வளர்ச்சிக்குத் தடையாக ஆகிறது மணத்துக்கு முந்தைய மனம் சொல்கிறது மண வாழ்க்கை காணாத மண் வாழ்க்கை முழுமையடையாத முட வாழ்க்கை என்று அதே மனம்தான் அப்புறம் சொல்கிறது மண வாழ்க்கையென்ன பிண வாழ்க்கை என்று பெரும்பாலும் திசை திருப்புகிறது சிலருக்கு வந்த திசையிலேயே திருப்பி அனுப்புகிறது சிலருக்கு வேகத் தடை போடுகிறது சிலருக்கு

இந்தியா - பன்முகப் பண்பு நோய் (MULTIPLE PERSONALITY DISORDER)

படம்
இது ஒரு நாடல்ல கண்டம் குறைந்த பட்சம் ஓர் உபகண்டம் சில கண்டங்களைக் காட்டிலும் அதிக இனங்கள் அடைந்துள்ளோம் பல்வேறு பாசைகள் பேசுகிறோம் கூடுதல் கூட்டம் கொண்டுள்ளோம் மாறுபட்ட மட்பரப்புகளில் மாய்கிறோம் வேறுபட்ட வெப்பதட்பம் வெந்து குளிர்கிறோம் பிரித்தாளும் சூழ்ச்சி கொணர்ந்தவன் பிரிந்திருந்த எம்மெல்லோரையும் புதியதொரு பெயர் கொடுத்து புனைத்து வைத்து விட்டுப் போனான் அதன் படியே எம்மோடே இணைந்திருக்க வேண்டிய இன்னும் சிலரை பிறிதொரு பெயர் கொடுத்து பிரித்தும் வைத்து விட்டுப் போனான் பிரிந்திருந்தோரைப் பிணைத்து வைத்ததாலும் பிரச்சனை பிணைந்திருந்தோரைப் பிரித்து விட்டதாலும் பிரச்சனை பிரச்சனை பிரச்சனை பிரச்சனை இன்னமும் இதுவே எங்களின் மிகப் பெரும் பிரச்சனை பிரிந்திருந்தோர் பிணைந்ததும் பிணைந்திருந்தோர் பிரிந்ததுமா பெரும் பிரச்சனை? பிரிந்தாலும் பிணைந்தாலும் பிரச்சனையின்றிப் பிழைக்கத் தெரியாத பிறவிக் குணமல்லவா பிரச்சனை? மதங்களைப் படைத்தோம் மருத்துவங்கள் கண்டெடுத்தோம் மதிப்பற்ற பூச்சியத்தை மதிக்க வைத்தோம் யோகக்கலை தோற்றுவித்தோம் காமக்கலை கற்றுக் கொடுத்தோம் வானவியல் வாழ்வித்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கட்சிவாரிக் கணக்குகள் (1/3)

படம்
இது பற்றி ஏற்கனவே நிறையப் பேசவும் எழுதவும் பட்டு விட்டது. பத்தோடு பதினொன்றாக அத்தோடு சேர்த்து என்னுடைய பார்வைகளையும் பதிவு செய்து விட்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்றெண்ணி இந்த வாரம் அதையும் செய்து விட முடிவு. இதோ... ("அடப்பாவி, உனக்கின்னும் உள்ளாட்சித் தேர்தல் மயக்கமே தெளியலையா?!" என்கிறீர்களா?) இந்த உள்ளாட்சித் தேர்தலின் மாபெரும் சிறப்பு - தமிழக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத நல்லது ஒன்று இம்முறை நடந்தது. அடுத்தவன் முதுகில் குதிரைச் சவாரி செய்வதே தொட்டில் பழக்கமாய்க் கொண்டிருந்த நம் கட்சிகள் எல்லாம் தனித்து நிற்கும் தைரியத்தைப் பெற்றன அல்லது அந்நிலைமைக்குக் கழுத்தைப் பிடித்துத் தள்ளப் பட்டன. எப்படியாயினும் அது நமக்கும் அவர்களுக்கும் நல்லதே. குதிரைச் சவாரி என்பது சிறிய கட்சிகள் பெரிய கட்சிகள் மீது செய்வது என்பது மட்டுமில்லை. பெரிய கட்சிகள் சிறிய கட்சிகள் மீதும் அதையே செய்தன. அவர்கள் நீண்ட தூரம் செய்யும் அதே சவாரியை இவர்கள் கொஞ்ச தூரம் செய்தார்கள். அவ்வளவுதான். தூரம்தான் வெவ்வேறே ஒழிய செய்த செயல் ஒன்றுதான். ஒவ்வொரு முறையும் மாறி மாறிக் கூட்டணி அமை

அதே மொழிதான்

படம்
அதே மொழி அதே சொற்கள் அதே எழுத்துக்கள்... அதெப்படி நீரைக் கொள்ளும் பாத்திரத்தின் வடிவம் போல்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கையாள்கிறர்? அதெப்படி அதே பழைய சரக்கு கொண்டு ஒரு சிலர் மட்டும் புதிது புதிதாய் ஏதோதோ உருவாக்குகிறர்? சிலர் நாட்டுக்குள் நடக்கும் அக்கிரமங்களுக்கெதிராக புரட்சித் தீ மூட்டுகிறர்! சிலர் வீட்டுக்குள் இருக்கும் அமைதிக்கெதிராக குழப்பத் தீ மூட்டுகிறர்! சிலர் விழித்திருப்போரையும் விரைந்துறங்கச் செய்திடும் வித்தை செய்கிறர்! சிலர் அவற்றையும் காற்றைப் போல் கடலைப் போல் ஆற்றலற்றவை என்று எதுவும் எடுக்க முயலாது சிறிதும் கொடுக்க முயலாது அப்படியே விட்டிடுகிறர்! அவற்றின் ஆற்றல் அறியாமலே அதுவாகவே நடக்கும் அளவற்ற எடுத்தல்கள் தவிர்த்து...

மேலும் கீழும்

படம்
பால்யத்தில் பலமுறை பேரூந்துகளினுள் இருந்து எட்டிப் பார்த்த அதே தொடர்வண்டிப் பாலம் அதன் மேல் செல்லும் அதே தொடர்வண்டி  அதன்பின் பல முறை  அதே இடத்தை அதே பாலத்தின் மேல் அதே தொடர்வண்டியின் உள் அமர்ந்து கடக்கையில் பாலத்தின் கீழ் நிற்கும் அதே பேரூந்தைப் பார்க்கையில் ஏதோ ஒரு புதிய உணர்வு! பின்பொரு நாள் மீண்டும் ஒருமுறை அதே பேரூந்துக்குள் அமர்ந்து அதே பாலத்தின் மேல் போகும் அதே தொடர்வண்டியைப் பார்க்கையில் காலமும் வாழ்க்கையும் ஏதோ சொல்ல முயல்கின்றன என்பது மட்டுமே புரிகிறது!

பயம்

படம்
குப்பனுக்கும் சுப்பனுக்கும் அலுவலகங்கள் என்றாலே உள்நுழைய பயம் வங்கிகள் என்றால் எட்டிப் பார்க்கவே பயம் அங்கிருக்கும் ஆபீசர்களைக் கண்டால் அதைவிட பயம் பயங்களை வென்று தைரியம் வரவழைத்து நுழைகிற சில பொழுதுகளிலும் அவர்களைப் பயமுறுத்தி பீதியடைய வைக்கும் நுட்பங்கள் அனைத்தும் ஆபீசர்களுக்கு அத்துப்படி அம்புட்டுக் கெட்டிக்கார ஆபீசர்களும் அவர்களின் பெண்டு பிள்ளைகளும் குப்பனும் சுப்பனும் வாழும் பகுதிகளுக்குள் நுழையவே அடையும் பயம் நடமாடும் போது அடைகிற பீதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பில்லைதானே?!