இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தம்பி புருசோத்தமா!!!

தம்பி புருசோத்தமா, இன்னும் சில மணி நேரங்களில் நீ உடலால் இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும் விட்டுப் பிரிந்து போயிருப்பாய். ஆனாலும் பலருடைய மனதில் அவரவர் வாழ்வின் இறுதிவரை இடம் பெற்றிருப்பாய். இன்று இருக்கிற அளவு வேதனையும் வலியும் அப்படியே இராது என்றாலும் எங்கள் எல்லோருக்குமே உன்னைப் பற்றிய நினைவுகள் அடிக்கடியோ அவ்வப்போதோ வந்து கொண்டேதான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது. என்னைப் பொருத்தமட்டில் என் வாழ்வில் நான் காணும் மிக நெருங்கிய அகால மரணம் இதுவே. எல்லோருக்குமே பள்ளிப்பருவத்தில் அப்படியான ஓர் அனுபவம் கிடைத்திருக்கும். எனக்கு அப்படி எதுவும் இருக்கவில்லை. நீ என் பால்யப் பருவத்து நண்பனல்ல; பள்ளி நண்பனல்ல; கல்லூரி நண்பனல்ல; ஒன்றாக உண்டுறங்கிய திருமணத்துக்கு முந்தைய இளமைக் காலத்து நண்பனுமல்ல. ஆனாலும் அப்படியான எத்தனையோ பேருக்குக் கொடுக்காத இடத்தை உனக்குக் கொடுத்திருந்தேன். அதற்கான ஒரே காரணம் – உன் கபடமற்ற மனமும் ஏமாளித்தனமுமே! அதனால்தான், அத்தனை நண்பர்கள் இருந்த சிங்கப்பூரில், குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு வந்தபின், ஊரைக் காலி செய்வதற்கு

விவசாயம் - பொங்கற் கவிதை

1996-இல் கல்லூரி-விடுதியில் நடந்த பொங்கல் விழாவுக்குக் கவிதை எழுதி, வாசித்து, முதற் பரிசு பெற்றதற்குப் பின், சரியாக இருபதாண்டுகள் கழித்து மீண்டும் அப்படியான ஒரு வாய்ப்பை வழங்கியது காலம். உடன் பணிபுரியும் - பணிபுரிந்த - பணிபுரியப் போகும் நண்பர்கள் எல்லாம் கூடி, பெங்களூரில் பொங்கல் விழாக் கொண்டாடினோம் போன வாரம். எனக்குள் இருந்து தொலைந்து போன ஒரு பாரதியை மீட்டெடுக்கப் பெரும் உதவியாக அமைந்தது இக்கொண்டாட்டம். இதிலும் ஒரு கவிதைப் போட்டி இருந்தது. கடந்த இருபதாண்டுகளில் தமிழில் கவிதையின் தரம் எங்கோ போய்விட்டது என்ற போதும், ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக, விரலுக்கேத்த வீக்கமாக, ஒன்றுமே எழுதாமல் கிடந்ததற்கு ஏதோவொன்றைக் கிறுக்கித் தொலைதல் மேல் என்கிற கணக்குப் படி, நானும் கவிதை என்று ஒன்றை எழுதி அனுப்பி வைத்தேன். ஒருவேளை முதற் பரிசு கிடைத்தால், மேடையிலேயே வாசித்துக் கைத்தட்டல் வாங்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் இருந்தேன். நண்பர்கள் வேலைப்பளு காரணமாக இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. அவர்களுக்கு முடிகிற போது அறிவிக்கட்டும். இந்தத் தை புது வழிகளைப் பிறப்பிக்கட்டும் என்ற பேராசையில் இந்தக் கவிதையைப் போட்டுத

முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு ஒரு நல்ல வியாபார வாய்ப்பு

இன்றைய புழுத்த ஊடக உலகில் முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு ஒரு நல்ல வியாபார வாய்ப்பு இருக்கிறது. உலகமெங்கும் உண்மையிலேயே மக்களுக்கு முக்கியமான செய்திகளைக் கிடைக்க விடாமல் செய்வதற்காகவே ஊடகத்துறை என்றொரு தனித்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் ஒரே வேலை, அவர்களுடைய முதலாளிகள் சொல்படி, யாருக்கும் பயனில்லாத அல்லது பரபரப்பை உண்டாக்குகிற அல்லது ஏமாற்றுகிற செய்திகளை வெளிக்கொண்டு வந்து மக்களை மற்ற முக்கியமான செய்திகள் பற்றிச் சிந்திக்க விடாமல் வைத்துக் கொள்வது மட்டுமே. அத ையும் மீறிச் சில முக்கியமான செய்திகள் வெளிவருவது, முகநூலிலும் அது போன்ற மற்ற சமூக ஊடகங்களிலும் வீரியமாகச் செயல்படும் சில தனிமனிதர்களின் உழைப்பால் மட்டுமே. இதை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்லும் விதமாக, முகநூலும் கூகுளும் என்ன செய்யலாம் என்றால், ஊடகங்கள் பார்க்க மறுக்கிற அல்லது மறைக்க முயல்கிற முக்கியமான செய்திகளை இன்னும் சிறப்பான முறையில் வெளிக்கொண்டு வந்து அவர்களின் பயனர்களிடம் விட்டுவிட்டால் போதும். உண்மைச் செய்திகளும் வந்த மாதிரி இருக்கும். பொய்யை விற்றுப் பிழைப்பு நடத்தும் செய்தி வியாபாரிகளும் மெதுவாக அ