இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹிட்லர் யார்?

அமேசானில் இலவசமாகப் படிக்கக் கிடைக்கும் நூல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது நூல் ஹிட்லர் பற்றியது. இது போன்றே ஒரு மணி நேரத்துக்குள் படித்து முடிக்க முடிகிற மாதிரியான பல நூல்கள் இருக்கின்றன. எத்தனையோ மகான்களையும் அறிஞர்களையும் கொட்டிக் கிடக்கிற நூல்களுக்கு நடுவில் இருந்திருந்தும் இதைப் போயா படிக்க என்றுதான் முதலில் தோன்றியது. வரலாறு எல்லோரையுந்தானே பதிந்து வைத்திருக்கிறது. மனித குலத்துக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எல்லோருக்குமே வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் தாக்கம் நேர்மறையானதா எதிர்மறையானதா என்பது இரண்டாம் பட்சந்தானே. ஹிட்லர் பற்றி நாம் மீண்டும் மீண்டும் கேள்விப்பட்ட, கேள்விப்பட்டு மறந்த பல கருத்துக்களைப் பற்றிய தொகுப்புதான் இதுவும். ஹிட்லரின் இளமைக் காலம் கொடுமையானதாக இருந்திருக்கிறது. குடிகார – கொடுமைக்காரத் தந்தை. அவன் இரண்டு மணங்கள் புரிந்து அதன் மூலம் பெற்றெடுத்த பிள்ளைகள் ஒவ்வொன்றாக ஏதோவொரு பிரச்சனையில் சிறு வயதிலேயே இறக்கிறார்கள். தாய் சொல்ல முடியத் துன்பங்களுக்கு உட்படுத்தப் படுகிறாள். பின்பொருநாள் தாயும் இறந்து போகிறாள். இளமைப்

மனிதனுக்கு அஞ்சலி

“நினைத்த போதெல்லாம் வருவதல்ல கவிதை; மனம் கனத்த போது வருவதுதான் கவிதை” என்ற மிகச் சிறிய வயதிலேயே படித்துப் பதிந்த வரி ஒன்று இன்று பயன்பாட்டுக்கு வருகிறது. அப்படியொன்றும் கவிதை கொட்டவில்லை இப்போது. ஆனாலும் ஞாநியின் மரணம் பற்றிக் கேள்விப்பட்ட காலை முதல் மனம் கனத்துப் போய்க் கிடக்கிறது. அவ்வப்போது முகநூல் வரவைக் குறைத்துக் கொள்ள முயன்று மீண்டும் மீண்டும் தோற்கும் பாவப்பட்ட பிறவிகளில் ஒருவன்தான் நானும். இப்படி ஏதாவது ஒன்று நடந்து விடுகிற போது நோன்பு கலைந்து குதித்து விட நேரிடுகிறது. கல்லூரிக் காலங்களில் வாராவாரம் விடாமல் தினமணிக் கதிர் படிக்கிற பழக்கம் இருந்தது. கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கேலிச்சித்திரம் என்று ஒவ்வொன்றும் ஒரு வகையில் மனதைப் பிழியும். அதில் ‘ மனிதன் பதில்கள் ’ என்றொரு கேள்வி-பதில் பகுதியும் உண்டு. அது மனதுக்கு மிகப் பிடித்த பகுதி. கேள்வி-பதில்கள் என்று வண்டி வண்டியாகக் குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருந்த இதழ்களுக்கு நடுவில் இப்படியும் நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரிப் பதில் சொல்ல முடியுமா என்று பெரும் வியப்பாக இருக்கும். இப்படியும் ஒரு மனிதன் இருக்கிறானா என்று திக