நகரியம்

சேவல்களின்
கூவலில் விடிந்த
காலைப் பொழுதுகள்
இப்போது
கடிகார மணியோசையில்...

கல் தடுக்கி விழுந்தாலும்
கதறி ஓடிவரும்
பாமர மனிதர்களோடே
வாழ்ந்து பழகி விட்டதால்
காரிலடிபட்டுக் கிடந்தாலும்
அனுதாபமாயோர்
அன்னியப் பார்வை வீசிவிட்டுப்
பறக்குமிந்தப்
படித்த ஞானிகளோடு
ஒத்துப் போவது வெகு சிரமம்!

நச்சுப் புகைக் காற்றும்
இரைச்சலுமான சூழலில்
மனிதமும் மாசு பட்டு விட்டது!

கிராமியம் கேவலமாய்
நகரியம் நாகரிகமாய்
சித்தரிக்கப் படும் பொழுதுகளில்
சினம் கொண்டு சீரும் மனம்
சில நேரங்களில்
எதிர்மறையாயும்
எண்ணத்தான் செய்கிறது....

என்ன சாதியென்று
விசாரணை செய்யும்
இழிநிலை இங்கில்லையே!

எனவே
வாழ்க நகரியம்!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

  1. Long time since I read one of these. But who said there is no mention of castes in the cities?

    பதிலளிநீக்கு
  2. Thanks for reading and the comment. I wrote this in 1998 after my first week in Chennai. I understand it was too early to judge a city in a week. But, Chennai is still far better than the other parts of the state. I could meet a lot of broadminded people there. Later, I realized that there also people talk about caste in some places. But, there, I think, it happens in a very subtle way so it's not visible to bare eyes.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி