அறிந்தும் அறியாமலும்

நிறையப் படிப்பதால்
நிறைய அறிவைக் குடிப்பதால்
நீர்
நீரற்ற வெற்றுச் சுரைக்காய் எம்மை விட
அறிவாளியாகத்தான் இருக்க வேண்டுமென்று படுகிறது

ஆனால்
மீண்டும் மீண்டும்
ஒரே மாதிரியான
உம் மீது திட்டமிட்டுத் திணிக்கப்படும்
பிரச்சார எழுத்துக்களை மட்டும் உள்வாங்கிக் கொண்டு
உம் சுவர்களுக்கு வெளியே இருக்கும்
உலகையே இல்லையென்று
வாதிடுகையில்
வாதிட மறுக்கையில்

அறியாமையை அறிந்திருக்கும் நிலையே
அறிந்தும் அறிய மறுக்கும் நிலையினும் மேலென்று
அறிவித்து விடுகிறீர்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி