மொழியும் மதமும்

உணர்ச்சி - வெறுப்பு அரசியல் செய்யும் ஆட்களில் பெரும்பாலும் முதலில் தமிழனாக இருந்து பின்னர் இந்துவான கூட்டங்களின் பிள்ளைகள் மொழிவாத அரசியலையும், முதலில் இந்துவாக இருந்து பின்னர் தமிழனான கூட்டங்களின் பிள்ளைகள் மதவாத அரசியலையும் வெறி கொண்டு ஆதரிக்கிறார்கள்.

இதில், "பின் ஏன் முதலில் தமிழராக இருந்து, பின்னர் இந்துவாகி, பின்னர் வேறு ஏதோ மதத்துக்குப் போனவர்களின் பிள்ளைகள் மட்டும் மொழிவாத அரசியலைவிட மதவாத அரசியலை அதிகம் ஆதரிக்கிறார்கள்?" என்ற கேள்வியும் வேறுவிதமான பதில்களை நோக்கித் தொக்கி நிற்கின்றன.

வேறு ஏதாகவோ இருந்து பின்னர் இந்துவாகவும் தமிழனாகவும் ஆன கூட்டங்களின் பிள்ளைகள் திராவிட அரசியலை ஆதரிக்கிறார்கள் அல்லது தமிழனாகும் முன்பே இந்துவானதால் மதவாத அரசியலை ஆதரிக்கிறார்கள் என்றும் யாராவது இங்கே பொடி வைக்கக் கூடும். அதுவும் சரிதான் என்பதால் கேட்டுக் கொள்வோம்.

ஆக, எல்லோரும் தத்தம் பிறப்புக்கு உண்மையாக இருக்கிறார்கள். அதுதானே தர்மம் என்றால், இதில் நல்லது - கெட்டது பற்றி என்ன கருமத்துக்குப் பேச வேண்டும்?

இது ஒரு பெரும் ஆராய்ச்சிக்கான பொருள். இதுவும் உணர்ச்சி - வெறுப்பு அரசியலுக்கான விதையாகித் தொலைக்காமல் இருக்கக் கடவ.

சாமி சரணம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி