கருணாகரன்

முடி திருத்துகையில்
மகனுக்குக் கழுத்தருகில் கத்தி பட்டதால்
கீறல் விழுந்த கோபத்தில்
கடைக்காரரைக் கண்டமேனிக்குத் திட்டி
கடுமையாகச் சண்டை போட்டு
அப்படியே அடுத்த கடைக்குப் போய்
இளங்குட்டியாகப் பார்த்து
கண் முன்பே கரகரவென்று கழுத்தறுப்பதைப் பார்த்து
பிள்ளைகள் சாப்பிட வசதியாக
நல்ல கறியாகப் பிரித்து
ஒன்றரைக் கிலோ வாங்கிக் கொண்டு
வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்
கருணாகரன்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி