சாம, தான, பேத, தண்டம்

சாம, தான, பேத, தண்டம்...

இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ...

எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல்.

நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள். நேரடியாக மூன்றாவதுக்குப் போனால் கொழுப்பு என்று அர்த்தம். அது மட்டுமில்லை, பிரச்சனை திசை திரும்பி விடவும் வாய்ப்பு இருக்கிறது. நேரடியாக நான்காவதுக்குப் போனால் சல்லிப் பயல் என்று அர்த்தம். என்றோ ஒருநாள் அவனும் தண்டத்துக்குப் பலியாகப் பிறந்தவன் என்று டைரியில் குறித்து வைத்துக் கொள்ளலாம்.

எதிரியிடம் மட்டுமில்லை. குழந்தைகளிடம் கூட இந்த முறையையே கடை பிடிக்க வேண்டும் என்று கூட ஒரு சிலர் எழுதி இருக்கிறார்கள். சிலர் தீவிரவாதிகளோடு இந்தியா இதைக் கடைப் பிடிக்க வேண்டும் என்கிறார்கள். அதையே சிலர் கொஞ்சம் மாற்றி, பாகிஸ்தானோடு இதைக் கடைப் பிடிக்க வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் ஈழத்தில் நம்மவர்கள் செய்தார்கள் என்றும் சொல்கிறார்கள். மொத்தத்தில், யாரோடு சிக்கல் வந்தாலும் இதை முயன்று பார்க்கலாம் போலத் தெரிகிறது.

இவை நான்கும் வடமொழி வார்த்தைகள் என்றும் சாணக்கியர் சொல்லிக் கொடுத்த நுட்பங்கள் என்றும் கேள்வி. அதன் படியே, மகாபாரதத்தில் முதல் மூன்றும் முயன்று பார்த்தும் முடியாமல் போனதால் பாண்டவர்கள் போரில் இறங்கி விட முடிவு செய்ததாகச் சொல்லப் படுகிறது. மகாபாரதத்துக்கு முன்பே சாணக்கியர் வாழ்ந்தாரா அல்லது மகாபாரதத்தை வைத்தே அதைச் சொன்னாரா என்பதெல்லாம் தெரியவில்லை. விபரம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் விளக்கிச் சொல்லவும்.

இன்னொரு மேட்டர்: சாணக்கியர் பிறப்பால் தமிழ் பிராமணர் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். இது பற்றி தகவல் ஏதேனும் உண்டா?

கருத்துகள்

  1. Yes these were Chanakya's prescriptions. While there is a view that he is a Keralite Brahmin, he is believed to be from North East. I have read his limbs were twisted and he looked ugly also. But his determination was unparalleled as could be seen from the way he promoted Chandragupta Maurya.

    பதிலளிநீக்கு
  2. Thank you, sir. Have put the same stuff in English, too. Please drop your comment there as well. :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி