தாய்

படும் பாட்டையெல்லாம்
அவளோடு பகிர்ந்துகொள்வதால்
பயனென்ன இருக்கப் போகிறது?
அவள் கவலையும் பெருகுவதன்றி

படும் பாடெல்லாம்
அவளுக்குத் தெரியவே தெரியாதே
என்றாவது ஒரு நாள்
எல்லாத்தையும் 
அவளிடம் சொல்லி அழுது தீர்க்க வேண்டும்
அவள் அழுது தீர்த்த பின்தான் 
சுமை குறையும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி