பட்டுக் கற்றல்

மீன் தராதே
தூண்டில் கொடு என்றான்
முதல் ஞானி

தூண்டிலும் கொடாதே
பிடிக்க மட்டும் கற்றுக்கொடு என்றான்
அடுத்த ஞானி

எவருக்கும் இழப்பில்லாமல்
கற்று மட்டும் கொடுக்க முயன்றபோது...

இலவசக்கல்வி
உன்னைத்தான் இளக்காரமாக்கும்
பட்டுக் கற்றலினும் சிறந்த பாடமில்லை
ஒதுங்கிக் கொள் என்றான்
இன்னொரு ஞானி

போங்கடா ஞானிகளா
நானும்
பட்டே கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு
மீன்களை வாரிப் பங்கு போடத் தொடங்கிவிட்டேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி