மேலானவன்

நான்
குறைபாடுகளுக்கும்
குற்றச்சாட்டுகளுக்கும்
அப்பாற்பட்டவனல்லன் என்பதை
நன்கறிந்தவனே

உங்கள் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும்
விளக்கமளிக்க வேண்டிய கடமை
எனக்கிருப்பதையும்
அதற்குரிய இடத்தில் நான் 
அமர்ந்திருப்பதையும்
நன்கறிவேன்

ஆனாலும்
குற்றஞ்சாட்டும் ஒவ்வொருவரும்
குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களில்லை என்பதாலே
என் வேலை 
எனக்கு எளிதாகிடுகிறது

பெரிய இடத்தில் அமர்ந்துகொண்டு
பெரும்பெருங் குற்றங்கள் புரிபவன் நான்

சிறிய இடத்தில் இருந்துகொண்டு
சிற்சிறு குற்றங்கள் புரியும் 
உம்மை அம்பலப்படுத்துவதற்கும்
உமக்கு
என்னைப் பற்றிச் 
சிந்திக்க நேரமில்லாமல் செய்து
உம்மைக் காத்துக் கொள்ளவே
போராடும் வகையில்
பார்த்துக் கொள்ளவும்
என் ஊழியர்களே போதும் எனும்போது
எதற்காக நான்
என் மேலான நேரத்தை
உமக்காக விளக்கமளிப்பதில்
வீணடித்துக்கொள்ள வேண்டும்?!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி