பிச்சைக்காரர்கள்

சில்லறை திருப்பிக் கொடுக்காத நடத்துனர்
கையொப்பத்துக்குக் காசு கேட்கும் அலுவலர்
பொதுப்பணத்தில் வாழும் மக்கள் சேவகர்
எளியோரை ஏமாற்றிப் பிழைக்கும் பெருமுதலை முதாலாளியர்

இவர்கள் எவரும்
பிச்சைக்காரர் போல் பிச்சைக்காரர் இல்லை

இவர்கள் எவரும்
திருவோடேந்தி
பிச்சை போடுங்க சாமி என்று
கெஞ்சிக் கேட்பதில்லை

இவர்கள் எவரும்
கந்தலணிந்து
வீதிகளிலும் கோயில்களிலும்
அலைந்து திரிந்து
மடங்களில் அடைந்து கொள்வதில்லை

இவர்கள் எவரும்
காசு கொடுக்க முடியாதோரிடம் சோறும்
சோறு கொடுக்க முடியாதோரிடம் கஞ்சியும்
வாங்கிக் கொண்டு அடங்கிக் கொள்வதில்லை

இவர்களுக்கென்று
கண்ணியம் இருக்கிறது
கட்டுப்பாடு இருக்கிறது

ஆகவே
இவர்கள் எவரும்
பிச்சைக்காரர் போல் பிச்சைக்காரர் இல்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி