கணக்கு

முழுதும்
மூழ்கி விட்ட பின்பும் கூட
வீணாகிடும் என்று
புரியவரும் வேளையில்
இழந்தவை இழந்தவையாக இருக்கட்டும்
இருப்பவற்றைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று
விரயத்தைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு
விபரத்தோடு
விரைந்து வெளியேறி விடுகிறார்கள்
வியாபாரிகளும்
அவர்களின் பிள்ளைகளும்

ஏற்கனவே பலமுறை
இழந்த அனுபவங்கள் இருந்தாலும் கூட
மீண்டும் அப்படியே வீணாகிடுமோ என்று
விளைச்சல் பற்றிய
வினாக் கூட எழுப்பாமல்
விதையை
வேறொரு நல்ல பருவத்துக்காகக்
காத்து வைத்துக் கொள்ளலாம் என்ற
கணக்குக் கூடப் போடாமல்
களத்தில் இறங்கி
விதைத்துத் தொலைத்து விடுகிறார்கள்
விவசாயிகளும்
அவர்களின் பிள்ளைகளும்

வியாபாரிகளான பின்பும் கூட...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி