கண்

உனக்கும் பிடித்தது
எனக்கும் பிடித்தது

நீயும் ஆசைப்பட்டாய்
நானும் ஆசைப்பட்டேன்

நீயும் ஏங்கினாய்
நானும் ஏங்கினேன்

நீ அதைத் திருடினாய்
அவன் அதை இழந்தான்

நான் திருடவில்லை
பார்த்துப் பொறாமை மட்டுந்தான் பட்டேன்
அத்தோடு அவன் அழிந்தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி